Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மினவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனர்.

Featured Replies

கடந்த சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் பயங்கர காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 752 விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் 15 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று கூறி மிரட்டினர்.

பின்னர் இலங்கை கடற் படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி 300 படகுகளில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். மீனவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளையும், படகுகளில் இருந்த வலைகளையும் வெட்டி கடலில் வீசினர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் 200 விசைப்படகுகள் நேற்று இரவு கரை திரும்பின. கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

கடந்த 5 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் மீன்பிடிக்க கடலுக்கு சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் வெறிதாக்குதல் நடத்தி எங்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி விட்டனர். உயிருக்கு பயந்து கரை திரும்பிவிட்டோம். மீன்களும் கிடைக்கவில்லை. ரூ.30 ஆயிரம் செலவு செய்து மீன்பிடிக்க சென்றோம். ஆனால் கடலில் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டி விட்டனர். இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வழக்கம்போல் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

http://www.dinaithal.com/tamilnadu/16275-sri-lankan-navy-chased-out-of-the-gun-minavarkalai-atrocity.html

1002087_389395274497724_1721209641_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.