Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மேல்சபை தேர்தல்: இன்று தலைமை செயலகத்தில் ஓட்டுப்பதிவு

Featured Replies

டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து சமீபகாலமாக போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்கள் என்ற அடிப்படையில் அத்துடன் 10 சதவீதம் கூடுதலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன.

வாக்குச்சீட்டில் கீழ்க்கண்ட அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. கே.ஆர்.அர்ஜூணன் (அ.தி.மு.க), ஏ.ஆர்.இளங்கோவன் (தே.மு.தி.க.), இரா.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வா.மைத்ரேயன் (அ.தி.மு.க.), த.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு).

வெள்ளை நிறத்தில் உள்ள வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கின்றன. வேட்பாளரின் பெயருக்கு எதிரே உள்ள பகுதியில் எண்ணால் ஓட்டுப்போட வேண்டும். அதாவது யாருக்கு ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்களோ அவர்களை முதல் முன்னுரிமை, 2-வது முன்னுரிமை என்ற அடிப்படையில் ஓட்டுப்போடலாம்.

வாக்குச்சீட்டில் 1, 2, 3 என்று வைலட் கலர் ஸ்கெட்ச் பென்னால் எழுத வேண்டும். அந்த பேனா ஓட்டுப்போடும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். எண்ணால் மட்டும் எழுதி ஓட்டுப்போட வேண்டும். அதை விடுத்து எழுத்தால் எழுதினாலோ, ‘டிக்’ அடித்தாலோ அந்த ஓட்டு செல்லாததாகி விடும்.

மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

சட்டசபையில் மொத்தம் 235 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரேயொரு நியமன எம்.எல்.ஏ. மட்டும் ஓட்டுப்போட முடியாது. பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இவர்கள் 3 பேர் போக மீதமுள்ள 231 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். இந்த தேர்தலை பொறுத்தவரை பதிவான ஓட்டுகளில் செல்லத்தக்க ஓட்டுகளை 7-ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் எண்ணே ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுப்பதற்கான குறைந்தபட்ச எண் ஆகும்.

இப்போதைய நிலவரப்படி, ஓட்டுப்போடவுள்ள எம்.எல்.ஏ.க்களான 231-ஐ 7-ஆல் வகுக்கும்போது 33 வரும். 231 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் செல்லத்தக்க ஓட்டுகளாக இருந்தால், 33 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த தேர்தலில், ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 33 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.ராஜாவும் களத்தில் உள்ளனர். சட்டமன்றத்தில், அ.தி.மு.க.வுக்கு உள்ள 151 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் 4 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவது உறுதி.

அ.தி.மு.க.வில் உள்ள மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு 8 எம்.எல்.ஏ.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஆகியோர் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.ராஜா தேர்ந்தெடுக்கப்படுவதும் உறுதியாகி உள்ளது.

6-வது இடத்தை பிடிக்க, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும், தி.மு.க. சார்பில் கனிமொழியும் களமிறக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், இவர்களில் 7 பேர் அ.தி.மு.க. ஆதரவாளர்களாக உள்ளனர். மீதமுள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அந்த கட்சிக்கு உள்ளது.

சட்டமன்றத்தில் தி.மு.க.வின் பலம் 23. தலா 2 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரசும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கனிமொழி வெற்றி பெற இன்னும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தேவை. தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கனிமொழி வெற்றி பெறுவாரா? அல்லது 2-வது முன்னுரிமை ஓட்டின் அடிப்படையில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.ஆர்.இளங்கோவனுக்கு அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஓட்டுப்போட வேண்டும் என்று விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் தாங்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டுப்போடுவோம் என்று அறிவித்துவிட்டனர். அவ்வாறு ஓட்டுப்போட்டாலும், அதனை கட்சி ஏஜெண்டிடம் காண்பிக்க வேண்டும். அதன்பிறகு தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஓட்டுபோடாத பட்சத்தில் 224 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வாக்களிக்க கூடிய நிலை உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில் ஒரு எம்.பி வெற்றி பெற 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு போதும் என்பது குறிப்பிடத்தக்கது.http://dinaithal.com/tamilnadu/16473-delhi-senatorial-election-by-secret-vote-today.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.