Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

Featured Replies

Mahinda_Warning.jpg

அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக எச்சரித்துள்ளார்.

 

மேலதிக விபரங்களுக்கு, http://tamilworldtoday.com/?p=19219

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார். சம்பந்தரே நேரே கேட்டிருக்கிறார் மகிந்தாவின் அரசில் எப்போதாவது இரு மந்திரிகள் ஒரே கருத்தை சொல்லியிருக்கிறார்களா என்று. அந்த பாரம்பரியதை ஏற்படுத்தியதே மகிந்தா தானே.!
மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவோருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
27 ஜூன் 2013
 

மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் மீண்டும் அது ஈழத்திற்கான வழியை திறப்பதாக அமையும்

Mahinda%20with%20army_CI.jpg

 

மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும் என்ற போதிலும், ஆளும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு அனைவரும் இணங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அனைவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக எவரும் செயற்பட முடியாது அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் மீண்டும் அது ஈழத்திற்கான வழியை திறப்பதாக அமையும்
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இரண்டு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
 
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கக் கூடாது, இரண்டு மாகாணங்கள் தனது விருப்பத்தின் பேரில் ஒன்றாக இணைய இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும்  இதன் போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
 
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அணைவரும் மேற்படி திருத்தச் சட்டம் தொடர்பாகவும் மாகாணங்களில் அதிகாரம் குறித்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 
 
மாநிலங்களுக்கு  காவற்துறை அதிகாரங்களை வழங்க இந்தியா போன்ற பெரிய நாடுகளால் முடியும் எனினும் இலங்கை போன்ற சிறிய நாட்டின் மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுவதுடன், மீண்டும் அது ஈழத்திற்கான வழியை திறப்பதாக அமையும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனால் மாகாணங்களுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்கும் எந்த நிலைப்பாடும் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் ஜனாதிபி கூறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவித்தன. 
 
அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்போரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிப்பு:-
 
அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்போரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் விவகாரத்தில், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக, அரசதரப்பிலேயே எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர்களும், ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று அலரிமாளிகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு அவசரமாக கூடியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அரசாங்கத்தில் எவரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம்  என  எச்சரித்துள்ளார். 
 
அரசாங்கத்தில் இணைந்திருப்பது தொடர்பில் எவருக்கும் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் விலகி செல்லலாம் என மகிந்த குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தச்சட்டம் தொடர்பில், ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு விதமான கருத்துகள் உள்ளதாகவும், ஆனாலும், அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயத்தில்  தமது தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது எனவும் மகிந்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.