Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BBC இல் தோன்றிய நவி பிள்ளை விடுத்த வேண்டுகோள். தமிழ் மக்களின் கவனத்திற்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை சற்று முன்னர் பிபிபி சியின் World Have Your Say  http://www.bbc.co.uk/programmes/p01b35m1

 

இல் உலகம் பூராவும் உள்ள அரசுகள் செய்யும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

 

சிறீலங்கா தொடர்பிலும் மணிவண்ணன் கேள்வியை முன் வைத்த போது நவி பிள்ளை ஒன்றை தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.. தான் சிறீலங்கா ஒரு சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக

 

1. சிறீலங்காவில் உள்ள மக்களின் பிரச்சனைகளுக்கான வேர் தொடர்பில்.

 

2. போரின் இறுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில்.

 

மேலும் அவர் தான் இந்த ஆகஸ்டில் சிறீலங்கா வர அழைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு.. தன்னை இயன்ற வரை பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புக்கள் சந்திக்க கேட்டுக் கொண்டார்.

 

எனவே தாயகத்தில் உள்ள அமைப்புக்கள்.. நவி பிள்ளை அம்மையாரை சந்தித்து காத்திரமான முறைப்பாடுகளைச் செய்யவும் அதன் மூலம் ஐநா வின் பாதுகாப்பை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளவும்.. இச்சந்தர்ப்பத்தைப் பாவிக்க வேண்டும். அதற்கான எல்லா முன் முயற்சிகளையும் இப்போதிருந்தே ஆரம்பிப்பது நல்லது.

 

சிறீலங்கா சிங்கள அரசு தடைகளைப் போட்டாலும் அவற்றையும் மீறி அம்மையாரை சந்திக்க திட்டமிடவும் திட்டமிட்டுள்ளவர்கள் ஊடாகவாவது விடயங்கள் அவரைச் சென்றடையவும் தாயக மக்களும் மனித உரிமை அமைப்புக்களும் கல்விசார் அமைப்புக்களும் கைதிகள் சார் அமைப்புக்களும் அரசியல் சமூக அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

சிறீலங்காவின் பொய் பிரச்சாரங்களுக்கு இலகுவாக இடமளிக்காமல் சிறீலங்கா மீது நவி பிள்ளையின் திடமான எதிர்கால செயற்பாட்டிற்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது சாட்சிகங்களையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

குறிப்பாக நவி பிள்ளை விசாரணைகள்.. மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் இன்றி கைதிகளை சிறைப்படுத்தி வைத்திருப்பது குறித்து அமெரிக்கா மீதே கடும் குற்றம் சுமத்திப் பேசினார். இது சிறீலங்கா எம் இளைய சந்ததியினரை வகைதொகையின்றி பயங்கரவாதிகள் என்ற ஒரு சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைத்து கொல்வது எவ்வளவு மோசமான செயல் என்பதை காட்ட உதவுகிறது.

 

மேலும்.. பயங்கரவாதத்திற்கு எதிர்  என்ற போர்வையில் அரசுகள் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து உலக மக்கள் பொதுவாகக் கொண்டிருந்த கோபத்தை நவி பிள்ளையும் பிரதிபலித்தார். பயங்கரவாதம் என்பது என்ன என்று அதன் எல்லைகள் வரையறுக்கப்படாத வரை அரசுகள் அதனூடு மிக மோசமாக மனித உரிமைகளை மீறுவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ஐநா பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான ஒரு எல்லையை வகுக்கும் என்று தெரிவித்தார்.

 

இவை எமக்கு சாதகமான சூழ்நிலைகளாகும். இவற்றை எம்மவர்கள் தயவுசெய்து போராடியாவது சரியாகப் பாவியுங்கள்..! ஐநாவின் ஊடான ஒரு சுயாதீன விசாரணைக்கும்.. அரசியல் தீர்வுப் பொறிமுறைக்குள்ளும் சிறீலங்காவை இழுத்து வரும் வகைக்கு இந்தச் சூழலைப் பாவியுங்கள்..!

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.