Jump to content

பன்றிக் காய்ச்சலுக்கு 6 மாதங்களில் 600 பேர் பலி 825 பேர் பாதிப்பு : மத்திய அரசு அறிவிப்பு


Recommended Posts

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூன் 25-ம் தேதி வரை 4 ஆயிரத்து 825 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதிகமான மக்கள் நெருக்கம் கொண்ட டெல்லி நகரில் நோய்த்தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் இந்நோயின் தாக்கம் அதிகம் என்று கூறப்படுகிறது.

அதிகமான நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் டெல்லியில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் ஆயிரத்து 29 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதில் 195 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கண்டவாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/india/16581-swine-flu-kills-825-600-people-affected-in-6-months-central-government-notification.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.