Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு பொங்கியெழும் மக்கள்

Featured Replies

திருமலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு.

சாவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்

மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் அறிந்த யதார்த்தவாதியான ஜனாதிபதி அவர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்க காலம் தொட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் வரை அரசியலில் இருந்தவர்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலைமை அவருக்கு நன்கு தெரியும். இருந்தும் அவரும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வைக் கொடுத்து இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விரும்பவில்லை.

அவர் ஒரு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி என்பதும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) . ஜாதிகஹெல உமய என்பன போன்ற இனவாதிகளின் தாளத்திற்கு ஆடுகிறார். இவற்றினைக் கண்டித்தும், மேலும் பின்வரும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தும் வெள்ளிக்கிழமை (04.08.2006) பூரண கதவடைப்பும், பணிப்புறக்கணிப்பும் நடைபெறும் என்பதை எமது தமழீழ தலைநகர் மக்களுக்கு அன்புடன் தெரித்துக்கொள்கின்றோம்.

1. வடக்கு கிழக்கு மீது திணிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்கி அவர்கள் அவர்களுடைய மண்ணில் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு மீன்பிடித்தடை விவாயசாயத்தடை என்பனவற்றை நீக்கி அவர்கள் சுயகௌரவத்துடன் வாழ அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

2. மாவிலாறு நிர்த்தேக்கத்திற்கு அங்கு வாழும் மக்கள் பிரதிநிதிகளை அரசர்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தீர்வுகாண வேண்டும். இவ்விடயத்தில் எக்காரணம் கொண்டும் இராணுவம் தலையிடக் கூடாது. 9அப்படி தலையிட்டால் நான்காம் ஈழப்போரினைத் தான் காண வேண்டி வரும்).

3. வடக்கு கிழக்கில் தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலி லுள்ள பொழுதும் ஏன் விமானத்தாக்குதல் நடத்தி எமது தமிழ் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீதும் வீடு மனைகள் பாடசாலைகள் என்பன முற்றாக மற்றாக அழிக்கப்படுகிறது இவை ஏன்? அரசாங்கத்திற்கும் யுத்தமா சமாதானமா வேண்டும் என்பதனை தெளிவு படுத்த வேண்டும்.

4. இராணுவம் கடற்படை விமானப்படை காவல்துறை என்பனவற்றின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது இடங்களில் எம்மக்களை திரும்பவும் குடியமர்த்த அவ் இடங்கள் கையளிக்கப்படல் வேண்டும். யுத்த நிறுத்தத்தை சரியானமுறையில் அமுல்படுத்தப்படல் வேண்டும். ஜெனிவாவில் 2006 மாசி மாதம் 22ம் 23ம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுவார்ததைகளின் படி ஒட்டுக்குழுக்களை அகற்றி இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து கதவடைப்பு நடைபெறும். இக்கதவடைப்பு நடைபெறும் நாளன்று அரச திணைக்கள உயர்அதிகாரிகள், ஊழியர்கள், பாடசாலைகள் மற்றும் பிறிமா மா ஆலை , சீமெந்து ஆலை, துறைமுக அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள் ஏனைய மனியார் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு எமது இந்த இறுதிக்கட்ட போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்பதனை தமிழ் தேசியத்தின் பேரால் கேட்டுக்கொள்கின்றோம். எமது வேண்டு கோளை நிராகரித்து செல்வாராயின் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற பார்வையில் பொங்கியெழும் மக்கள் படையினரால் தண்டனை வழங்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன் அன்றைய தினம் சகல தியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை வீதிகளில் செல்வதை தவிர்த்து அகிம்சை வழியில் எந்தவித வன்முறைகளுக்கும் இடம்கொடாமல் இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி

பொங்கியெழும்மக்கள் படையணி

குறிப்பு:- அலுவலக உத்தியோகத்தர்களுக்கு - ஆளுநனரால் விடுக்கப்படும் பணிநீக்கம் எனும் மிரட்டலை கருத்தில் எடுக்காது இப்போராட்டத்திற்கு முழு ஆதரவுதருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வைத்தியசாலை நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்கு வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.