Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குணங்குறிக்கு வைத்தியம் செய்யும் ஆட்சியாளர்கள்

Featured Replies

நோயின் மூலத்தை விடுத்து குணங்குறிக்கு வைத்தியம் செய்யும் ஆட்சியாளர்கள்

நோய்க்கு மருந்து செய்வது குறித்து திருநாப்போதர் வள்ளுவப் பெருந்தகை "நச்"சென்று ஒரு குறளில் அழகாக எடுத்துரைத்திருக்கின்றார். அது உடலைப் பிணித்திருக்கும் நோய்க்கு மட்டுமல்ல, நாட்டைப் பிணித்திருக்கும் நோய்க் கும் நல்ல மருத்துவ உபாயமாக அமைந்திருப்பது கவனிக் கத்தக்கது.

""நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்.""

என்கிறது வள்ளுவன் வாய்ச்சொல்.

நோயை ஆராய்ந்து, நோய் வருவதற்கான காரணத்தை யும் ஆõய்ந்து, அந்நோய் தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து, அது தீர்க்கும் வழியைத் தப்பாமல் செய்ய வேண்டும் என் பது இக்குறளின் உட்பொருள்.

நமது இலங்கைத் தீவைப் பீடித்திருக்கும் இனப்பிரச் சினை என்ற நோய்க்கும் இந்த வகையில் மருத்துவம் செய் தால்தான் நாடு தப்பிப் பிழைக்கும்; அமைதி வாழ்வு என்ற நற்சுகம் கிட்டும்.

இலங்கைத் தீவை இனப்பிணக்கு என்ற நோய் பீடித்த தற்கான காரணம் எதுவென்பது நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டிய ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. அந்த நோயைத் தீர்க்கும் வழிவகையும் அவர்களுக்குப் புரியாத தல்ல. இன்னும் கூறப்போனால் இந்த நோயின் விளைவு எங்கு போய் முடியும் என்பதை நோயின் குணங்குறி காட்டத் தொடங்க முன்னரே நோய் பீடிக்கத் தொடங்கிய போதே மருத்துவம் செய்யவேண்டிய தென்னிலங்கை ஆட்சியாளர் களுக்குப் புரிந்துவிட்டது என்பதுதான் உண்மை.

நோயின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதைத் தீர்க்க தரிசனத்தோடு உய்த்துணர முடிந்த அவர்களுக்கு, நோயைத் தீர்ப்பதற்கான மருத்துவத்தைச் செய்யும் மனப்பக்குவம் இருக்கவில்லை. அதுதான் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம்.

அந்த மனப்பக்குவம் நோய் முற்றி, இவ்வளவு கெடுதி நிலையை அடைந்த பின்னரும்கூட, அவர்களுக்கு வாராதிருப் பதே தான் வேதனையிலும் வேதனை.

சிறுபான்மையினரின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கி ஒடுக்கமுற்பட்ட செயல்தான் நாட்டுப் பிரிவினை என்ற பிணி பீடிக்கக் காரணமாயிற்று. ஆகவே, அந்த அடக்கு முறையே "நோய் மூலம்."

அந்த "நோய் மூலம்" தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியபோதே விளைவுகள் எப்படியிருக்கும் என்ற எச் சரிக்கை ஆட்சியாளர் களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

சிறுபான்மையினரான தமிழர்களின் மொழி உரிமையைப் பறிப்பதற்காக தனிச் சிங்களச் சட்டம் என்ற வடிவத்திலே "நோய் மூலம்" ஐம்பதுகளின் பிற்பகுதியில் தனது கைவரிசை யைக்காட்ட முற்பட்ட போதே அதனால் ஏற்படும் நோயின் விளைவு எப்படியிருக்கும் என்பதை இடதுசாரி வைத்தியர்கள் கூறிவிட்டனர்.

"ஒரு மொழி இரு நாடு; இரு மொழி ஒரு நாடு!" என்று அவர்கள் உரைத்த கருத்தின் ஆழம் புரியாமல் "நோய் மூலத்தை" நாடி அதை மென்மேலும் இறுக அணைத்துக் கொண்டன தென்னிலங்கை அரசுத் தலைமைகள். அதன் விளைவு இவ்வளவு விபரீதமாக நாட்டை ஆட்டிப் படைத்து வருகின் றது. ஆனாலும், "நோய் மூலம்" குறித்து கவனம் செலுத்த ஆட்சியாளர்கள் இப்போதும் தயாராக இல்லை.

நோய் முற்றிப் பரவ முற்பட்ட ஒவ்வொரு காலத்திலும் இதைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராயாமல் நோயின் வெளிப்படையான குணங்குறிகளை அடக்குவதில் மட் டுமே கவனம் செலுத்தினர் நாட்டின் பிணி தீர்க்க வேண்டிய மருத்துவர்களான ஆட்சியாளர்கள்.

உதாரணத்திற்கு ஒரு விடயம்.

சம்பூரில் தமது நிலைகளை ஸ்திரப்படுத்தி வரும் விடு தலைப் புலிகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரு கோணமலை கடற் படைத் தளத்துக்குப் பேராபத்து என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசனமாக உணர்ந் திருந்தார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.

அத்தகைய ஆபத்தைத் தடுப்பதற்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆரவாரம் பண்ணிய அந்தத் "தீர்க்க தரிசி" இனப்பிரச்சினை என்ற நோயின் குணங் குறி யான இந்த விளைவுகளுடன்தான் பொருதமுற்பட்டார். இனப்பிரச்சினை என்ற நோய்க்குக் காரணமான மூலத்துக்கு நோய் மூலத்துக்கு வைத்தியம் செய்ய அவர் முற்பட வில்லை. இன்னும் சொல்லப் போனால் உண்மை நிலை தெரிந்திருந்தும் அந்த நோய் மூலத்தைத் தீவிரப்படுத்தி, வலுப்படுத்தும் தவறான வைத்தியமுறையையும் அவர் கையாண்டார்.

திருகோணமலை கடற்படைத் தளத்துக்குப் புலிகளால் ஆபத்து என்று கூச்சலிட்டு, நோயின் குணங்குறி குறித்து நேரத்துடன் எச்சரிக்கை செய்த அவர், நோய் மூலமான இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடிய அமைதி முயற்சி என்ற வைத்தியத்தைக் குழப்புவதிலும் முன்னின்றார்.

2002-2003 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அப்போதைய அரசுடன் தமிழர்கள் முன்னெடுத்த அமைதி முயற்சிகள் குழம்பிப் போனமைக்கு, அப்போதைய ஜனாதிபதியின் அணியிலிருந்த லஷ்மன் கதிர்காமரும் முக்கிய காரணகர்த்தர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தத் "தீர்க்கதரிசி" எச்சரித்தமை போல புலிகளின் நேரடி கனரக ஷெல் மாரிக்கு இலக்காகும் ஆபத்து திருகோண மலை கடற்படைத் தளத்துக்கு இப்போது நேர்ந்து விட்டது.

நோயின் குணங்குறியை முற்கூட்டியே அறிவிக்கும் தீர்க்க தரிசனம் இருந்த அந்தத் தலைவருக்கு, நோயின் மூலத்தைத் தீர்க்க முயற்சிக்கவேண்டும் என்பதைப் பகிரங்கமாக வெளிப் படுத்தும் மனத்திடமும், மதிநுட்பமும், நேர்மையும் இருக்க வில்லை.

""நோயை ஆராய்கிறோம்; நோய் வந்ததற்கான காரணங் களை ஆராய்கிறோம்; அது தீர்க்கும் வழியை ஆராய்கிறோம்."" என்று வட்டமேசை மாநாடுகள், சர்வகட்சிச் சந்திப்புகள் நடத்திக்கொண்டு காலத்தை இழுத்தடிப்பதில் பயனில்லை.

நோய் மூலமான அடக்குமுறையை ஒழித்துக்கட்டி, தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான தீர்வு என்ற மருத்துவத்தை விரைந்து செய்வதற்கு வைத்தியர்களான இன்றைய ஆட்சி யாளர்கள் முன்வரா விட்டால், அவர்களின் முன்னோர்கள் மேலாண்மைவாதப் போக்கில் விதைத்த இந்த நோய்க்கு இலங்கைத் தீவு இரையாகி, அது பிரிவினைக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகி விடும். இதுதான் வைத்திய அறிக்கை விளம்பும் உண்மை.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.