Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் எரிபொருள் ரயிலில் பாரிய தீவிபத்து - அதிகாலை பயங்கரத்தில் 80 பேர் வரை பலி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
train-blast-7713-150.jpg

கனடாவில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மெயின் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் தீப்பிடித்தில் 80 பேர் வரை மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மொன்ட்றியல் நகரிலிருந்து 155 மைல் கிழக்கே கியுபெக் மாகாணத்தில் உள்ள லக் மெகன்டிக் நகரின் அருகே செல்லும்போது ரயிலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகில் உள்ள கட்டங்களுக்குள் புகுந்தன.

  

இதனால் ஏற்பட்ட தீச்சுவாலையிலும், கரும்புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர். 77 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில்,பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த சில பெட்டிகள் வெடித்ததில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

அடுத்தடுத்து ஆறு வெடிப்புச்சத்தங்கள் கேட்டன. பெட்டிகள் வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை. அருகிலிருந்த சவுடியர் நதியிலும் இந்த ரயிலிலிருந்து கசிந்த எரிபொருட்கள் கலந்ததாக கியுபெக் மாகாணத்தின் சுற்றுசூழல் அமைப்பின் தகவல் அதிகாரி கிறிஸ்டியன் பிளாங்கெட் தெரிவித்தார்.

மெயின் மற்றும் வெர்மான்ட் எல்லைக்கருகில் இருக்கும் இந்த லக் மெகன்டிக் ஒரு ஏரியின் கரையோரம் அமைந்துள்ள சிறிய ஊராகும்.இங்கு கிட்டத்தட்ட 6,000 பேர் வசித்து வருகின்றனர். ஊரின் மத்தியப் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில் இதிலிருந்து மீண்டு வருவது குறித்து மேயர் கொலேட் ராய் லாரோச் தொலைக்காட்சியில் உணர்ச்சி மேலிட பேசியுள்ளார்.

இந்த விபத்தில் 80 பேர் வரை காணாமற் போயுள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள் ஞாயிறு காலையில் தான் காணாமற்போனவர்களின சடலங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மதுபான விடுதி ஒன்றில் இருந்த 50 பேர் வரை தீக்கிரையானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

train-explosions-7713-550.jpg

 

 

Qupeck-rail-accident-070713-473-(5).jpg

 

 

Qupeck-rail-accident-070713-450-(3).jpg

 

 

Qupeck-rail-accident-070713-366-(4).jpg

 

 

Qupeck-rail-accident-070713-450-(2).jpg

 

 

Qupeck-rail-accident-070713-360-(1).jpg

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hFH8L6PqxZI

 

http://www.seithy.com/breifNews.php?newsID=86923&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 13 கி மீ முன்பாக தொடர் புகையிரத வண்டி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புகையிரத ஒட்டி தனது  கடமை நேரத்தை முடித்துவிட்டு அடுத்த புகையிரத ஓட்டிக்காக அங்கே புகையிரதத்தைப் பாதுகாப்பாக  நிறுத்தியிருந்தார்???.

 

இருந்தும் புகையிரதவண்டி செலுத்தினர் இல்லாத நிலையில் நகர ஆரம்பித்து 

தாழ்வான பிரதேசத்தை நோக்கி தறிகெட்டு ஓடி 

இந்த விபத்து நடந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மக்கள் குடியேற்றம் செறிந்துள்ள பகுதிகளினூடாக  ஆபத்தான பொருட்களை 

ஏற்றிச் செல்வதற்கு அனுமதி அளித்த கனேடியப் புகையிரத சங்கம் 

இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் . 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா போன்ற ஒரு அபிவிருத்தியும் தொழில்நுட்ப நுணக்க அறிவும் சட்ட அமுலாக்கமும்.. கொண்ட ஒரு நாடு.. இப்படியான விபத்துக்களுக்கு இடமளிப்பது உண்மையில் துரதிஸ்டவசமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
canada-8713-150.jpg

கனடாவில் சனிக்கிழமை எரிபொருள் ரயில் தடம்புரண்டு வெடித்ததால் ஐந்து பேர் மரணமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட போது, மதுபான விடுதியில் இருந்த 40இற்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விபத்தில் 30 கட்டடங்கள் தீயினால் முற்றிலும் அழிந்து போயுள்ளன. தீயின் பலரது சடலங்கள் முற்றாக எரிந்து போயிருக்கலாம் என்பதால், காணாமற்போன சிலரது சடலங்களைக் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்று கியூபெக் பொலிசார் கூறியுள்ளனர்.

  

சம்பவ இடத்தை நேற்றுப் பார்வையிட்ட கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாபர், அது ஒரு போர்க்களம் போலக் காட்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட 5 சடலங்கள் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=86969&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குமுன் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு அதில் இருவர் மாண்டார்கள் என நினைக்கிறேன்.. அதன் விசாரணை அறிக்கையும் சில மாதங்களின் முன்புதான் வெளிவந்திருந்தது.. கனேடிய தொடருந்துப் பாதைகளின் கட்டுப்பாட்டுப் பொறிமுறைகளை நவீனப்படுத்தவேண்டும் எனக் கோரியிருந்தார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.