Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்துமீறும் தென்பகுதி மீனவர்களை வெளியேறுமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
on-strike-080713-seithy-150.jpg

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று (08) காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

  

தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=86975&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
shop-strike-100713-seithy-150.jpg

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வந்து சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மீனவர்கள் இவ்வாறு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சக மீனவர்களும் அங்கு கூடியுள்ளனர்.

  

இந்த நிலையில் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள வர்த்தகர்கள் புதனன்று தமது கடைகளை அடைத்துள்ளனர். தனியார் பஸ் போக்குவரத்துக்குகளும் முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அரச தலையீட்டின் காரணமாக போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=87142&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்களது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வந்து சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ண அவர்கள், இந்த விடயம் குறித்து தான் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அடுத்த வாரம் இது குறித்து மீனவர்களுடன் பேச்சு நடத்துவார் என்றும் எழுத்து மூலம் உறுதியளித்ததை அடுத்து தற்போது மீனவர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

மூன்று மீனவர்கள் இவ்வாறு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சக மீனவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

முன்னதாக அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தனியார் பஸ் போக்குவரத்துக்குகளும் முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன

 

http://tamil24news.com/news/archives/86171

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.