Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்

Featured Replies

இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்

டி.சிவராம் (தராக்கி)

சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபடி புலிகள் சர்வதேச hPதியாக முடக்கப்பட்டுள்ளார்கள் என்பன போன்ற பல கருத்துக்கள் மாறிமாறி வௌ;வேறு வடிவங்களில் வௌ;வேறு ஆதாரங்களுடன் கட்டுரைகளாகவும், ஆய்வுகளாகவும், ஆசிரியர் தலையங்கங்களாகவும் வெளிவந்த வண்ணமிருப்பதைக் காணலாம்.

இவற்றிலிருந்து மிகத் தெளிவாக ஒன்றை நாம் கண்டுகொள்ளலாம். அதாவது இலங்கையின் இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வைத் தவிர்ந்த ஏனைய வழிமுறைகளிலேயே சிங்கள தேசம் கூடிய நாட்டமும் பற்றும் காட்டி வருகின்றது என்பதே அந்த உண்மையாகும். நாட்கள் செல்லச் செல்ல அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிமுறைகளின் மூலம் புலிகளை நிரந்தரமாக முடக்கிப் போட்டு காலப்போக்கில் அவர்களை வலுவிழக்கச் செய்யலாம் என்ற எண்ணம் சிங்கள தேசத்தில் மிக மேலோங்கி வருகிறது. நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்கி அதன் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்தையும் பீடித்து அழித்துவருகின்ற இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதைவிட கருணாவிற்கு ஆதரவு வழங்கி அதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் சிங்கள தேசம் பேரார்வம் காட்டிவருவதையே நீங்கள் காண்கிறீர்கள்.

இன்று சிறிலங்கா அரச தரப்பிலும் சரி, சிங்கள எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையிலும் சரி, பேச்சுவார்த்தையில் சாட்டுப் போக்கிற்காகவே நாட்டங்காட்டப் படுகின்றது என்பது வெள்ளிடை மலை. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றைக் கொடுக்காமல் காலவரையறையின்றி தாம் இழுத்தடித்துக் கொண்டுபோனாலும், தம்மீது வெளிநாடுகள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கமாட்டா என சிங்கள மேலாண்மையாளர் இன்று திடமாக நம்புகின்றனர். அவர்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படை இல்லாமலில்லை. டோக்கியோ பிரகடனத்துக்கு எதிராக இலங்கை விடயத்தில் அண்மைக் காலமாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும், இது சிறிலங்கா அரசுக்கு தவறான சமிக்ஞைகளை கொடுக்கின்றது எனவும் சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் நான் சந்தித்த வெளிநாட்டலுவல்கள் அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் புலிகளையும் சிறிலங்கா அரசையும் அமைதிப் பேச்சுக்களை நோக்கி நகர்த்துவதற்கு சர்வதேச நிதியுதவியை ஓர் அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துவது என டோக்கியோ மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அதாவது நிதி நெருக்கடியில் இருக்கின்ற சிறிலங்கா அரசு அமைதிப் பேச்சுக்களை காத்திரமாக முன்னெடுக்கும் பட்சத்திலேயே 450 கோடி அமெரிக்க டொலர்கள் பேச்சின் முன்னேற்றத்தைப் பொறுத்து படிப்படியாக வழங்கப்படும் என்பதே டோக்கியோ பிரகடனத்தின் உட்கிடையாகும். நிதித்தேவை என்ற அழுத்தத்திற்கு சிங்கள தேசம் ஆட்பட்டு பேச்சுகள் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்படும் என டோக்கியோ மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் - குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் - எதிர்பார்த்தன.

ஆனால் தனது மிலேனியம் கணக்கில் பங்குபெற தகுதிவாய்ந்த உலகின் சில நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவை பிரகடனப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா டோக்கியோ பிரகடனத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராக செயற்பட்டது என்பதே மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சிலர் என்னிடம் தெரிவித்த கருத்தாகும். இதன் விளக்கம் என்ன? அமைதிப் பேச்சுக்களை முன்னெடுத்தாலென்ன, முன்னெடுக்காவிட்டாலென்ன நமக்கு எங்கிருந்தோ நமது நாட்டைக்கொண்டு நடத்துவதற்கு உதவி கிடைக்கும் என்ற உளப்பாங்கை சிங்கள மேலாண்மையாளரிடம் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. புலிகளுடன் பேசி காத்திரமான ஓர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற அழுத்தத்தை சிங்கள மேலாண்மையாளரிடம் ஏற்படுத்தும் நோக்கில் வரையப்பட்ட டோக்கியோ பிரகடனம் அமெரிக்காவின் செயலால் அர்த்தமற்றுப் போகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அமெரிக்கச் சார்பற்ற சில நாடுகள் வெளிப்படையாகவே விசனப்படுவதை கேட்கமுடிகிறது. இதுவிடயத்தில் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட சுயநல நோக்கில் இங்கு செயற்படுகின்றது என்பதை இவ்வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கி சிறிலங்காவிற்கு 570 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக செய்த அறிவிப்பிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என சிறிலங்கா அரசையும், சிங்கள மேலாண்மையாளர்களையும் நெருக்குவதற்கு போடப்பட்ட ஒரேயொரு சர்வதேச அழுத்தமும் இன்று அமெரிக்காவின் செயலால் நீக்கப்பட்டுவிட்டது. எனவேதான் சிங்கள தேசம் இன்று முன்னரைவிட முனைப்புடன் அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிமுறைகள் மூலம் எமது நியாயமான உரிமைகளை வழங்காமல் சிங்கள பௌத்த ஒற்றையாட்சியினுள் எம்மை மீண்டும் மடக்கி ஒடுக்கிவைக்க ஆவன செய்துவருகிறது.

இந்த நிலையில் சிங்கள தேசத்தை நியாயமான அரசியல் தீர்வை நோக்கி நகர வைத்திட நாம் கொடுக்கக்கூடிய அழுத்தம் என்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. பிரித்தானியர் இலங்கைத் தீவை விட்டகன்று 35 வருடங்கள்வரை (1948 - 1983) அகிம்சை வழியில் நாம் எத்தனையோ அழுத்தங்களைக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். சில சந்தர்ப்பங்களில் எம்மவர்கள் அழுத்தங்கொடுப்பதற்குப் பதிலாக சிங்கள அரசுகளோடு கூடிக் குலாவியும் பார்த்தனர். கண்டபயன் ஒன்றுமில்லை.

மீண்டும் போரில் இறங்குவதற்கு புலிகளை சர்வதேச சமூகம் அனுமதிக்காது என்ற திடமான நம்பிக்கை ஒருபுறமும், அரசியல் தீர்வை கொடுப்பதற்கு தம்மீது டோக்கியோப் பிரகடனத்தின் மூலம் போடப்பட்ட அழுத்தத்தை அமெரிக்கா நீக்கிவிட்டது என்ற உற்சாகம் மறுபுறமுமாக சிங்கள தேசத்தை மீண்டும் படிப்படியாக இராணுவத் தீர்வு என்ற பாதையை நோக்கி துரிதமாக தள்ளிவருகின்றன.

சர்வகட்சி ஆலோசனைக் குழுவொன்றையும் பேச்சுக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றையும் அமைத்து மீண்டும் புலிகளுடன் பேசப்போகிறேன் என சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருப்பது சுத்த அபத்தமானது. அரசுகள் சிக்கலான ஒரு விடயத்தை நைசாக குப்பைத் தொட்டியில் போடுவதற்கு காலங்காலமாக பயன்படுத்தி வரும் முறைதான் ஆணைக்குழு, சர்வகட்சிக் குழு, தெரிவுக்குழு போன்றவற்றை அமைத்தலாகும். சன்சோனி ஆணைக்குழுவிலிருந்து மங்கள முனசிங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவரை நடந்த பம்மாத்துகளை அறிந்தவர்கள் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய ஆலோசனைச் சபை எதற்காக சிறிலங்கா ஜனாதிபதியால் நிறுவப்படப்போகின்றது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

இங்கு கடந்தவாரம் கூறியதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டியுள்ளது. தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்கியே ஆகவேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் போய்விட்ட நிலையில், சிங்கள தேசம் எம்மை மீண்டும் போருக்கு இழுத்து வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை இங்கு ஏற்படுத்தி எமது உரிமைகளையும் அந்த உரிமைகளைக் கேட்டுப் போராடுவதற்குத் தேவையான எமது படைவலுவையும் ஒரேயடியாக நசுக்கிவிடுவதற்கு தருணம் பார்த்திருக்கிறது. அரசியல் தீர்வை இழுத்தடித்துக் கொண்டு தமிழர் தரப்பை பல்வேறு வழிகளில் சீண்டி வந்தால் புலிகள் தாமாகவே போரை தொடங்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுவர். இப்படியான நிர்பந்தத்திற்கு அவர்கள் ஆளாகும்போது நேரடி வெளிநாட்டுப் படையுதவி கிடைப்பதற்கு முயற்சிசெய்து அந்த முயற்சியில் வெற்றியும் காணலாம் என சிங்கள மேலாண்மையாளர் இன்று நம்பத் தலைப்பட்டுள்ளனர். சிங்கள தேசத்தின்மீது எமக்கு ஓர் அரசியல் தீர்வை தருவதற்கான சர்வதேச அரசியல் அழுத்தங்கள் அற்றுப்போன நிலையில் மீண்டும் நாமே அந்த அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் விரைவில் தோன்றும். இது தவிர்க்க முடியாதது. ஆகவேதான் நாம் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டின் சாத்தியப்பாடுகளையும் அதை முன்தடுக்கும் வழிவகைகளையும் ஆராயவேண்டியுள்ளது.

இதில் முதலாவதாக நாம் இந்தியாவைப் பார்ப்போம். யாழ்ப்பாணம் 2000ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்படவிருந்த வேளையில், இந்தியா தமது உதவிக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் அதன் காரணமாக வருங்காலத்திலும் இந்தியா புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு நேரடியாக உதவாமல் விடலாம் என்ற சந்தேகமும் சிங்கள மேலாண்மையாளரிடம் உண்டு. ஆயினும் நாம் இந்திய இராணுவத் தலையீடு இனி இருக்காது என்று வாளாவிருப்பதைவிட அதன் சாத்தியப்பாட்டை ஆராய்வது அவசியமாகும்.

1987ஆம் ஆண்டில் இந்தியா தனது படையை இங்கு அனுப்பியபோது பின்வரும் விடயங்கள் தனக்கு சாதகமாக இருக்கின்றனவா என்பதை கருத்திற்கொண்டே அதைச் செய்தது. முதலாவது - தமிழ் மக்கள் ஓரளவாயினும் திருப்திப்படக்கூடிய சுயாட்சி. இரண்டாவது - பெரும்பான்மையான தமிழ் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் ஆதரவு. மூன்றாவது - தமிழர் தாயகத்தில் புலனாய்வு ஆதிக்கம்.

இந்தியப் படைகளை இங்கு வழிநடத்திய அனைத்துத் தளபதிகளும் தமது அனுபவங்களையும் தாம் கற்ற பாடங்களையும், நு}ல்களாகவும், ஆய்வுரைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளனர். இவை எல்லாவற்றிலும் அவர்கள் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது தமிழ் மக்களுக்கு முறையான சுயாட்சி கொடுக்கப்படாமையால் அவர்களை புலிகளிடமிருந்து அந்நியப்படுத்துமளவிற்கு திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் எதிர்கெரில்லா போரியலின் (ஊழரவெநச ஐளெரசபநnஉல) அடித்தளமான மக்களை வென்றெடுக்கும் மூலோபாயம் முழுமையாக வெற்றிபெறவில்லை எனவும், இதன் காரணமாக மக்கள் ஆதரவுடன் புலிகள் தொடர்ந்து இந்தியப் படைகளுக்கெதிராக போராடக் கூடியதாக இருந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர். மக்களைத் திருப்திப்படுத்தாமலும் அந்த மக்களுக்குள்ளிருந்து உள்ளுர் படைகளை உருவாக்காமலும் ஓர் எதிர் கெரில்லாப் போரை வெற்றிகரமாக கொண்டுநடத்த முடியாது என்பது அனைத்து போரியல் அறிஞர்களதும் ஒருமித்த கருத்தாகும். இதனாலேயே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பொம்மை அரசுகளை ஏற்படுத்தி அவற்றின்மூலம் உள்ளுர்ப் படைகளை உருவாக்கி அவற்றின் துணையோடு அவ்விரு நாடுகளிலும் தனக்கெதிராக நடைபெறும் கெரில்லாப் போரை முறியடிக்க அமெரிக்கா முயல்வதை நாம் காண்கின்றோம். இதேபோல் பல உதாரணங்களை நாம் காட்டலாம். ராஜீவ் காந்தி கொலை விசாரணையைப் பற்றி அவ்விசாரணையை நடத்திய தலைமை அதிகாரி கார்த்திகேயன் ஒரு நு}ல் எழுதியுள்ளார். அதன் பின்னுரையாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். 1989ஆம் ஆண்டு இந்திய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் தன்னைத் திடீரென அழைத்து இலங்கை சென்று, அங்கு இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரில் ஏன் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் அதோடு தொடர்புபட்ட வேறு விடயங்களையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இங்கு அனுப்பிவைத்ததாகவும் கூறுகிறார். தான் வடகிழக்கிற்குச் சென்று சாதாரண இந்தியப் படைவீரர்கள் தொடக்கம் கட்டளைத் தளபதிகள் வரை நு}ற்றுக்கணக்கானவர்களுடன் பேசியதிலிருந்தும் நுPசுடுகுஇ நுNனுடுகுஇ வுநுடுழுஇ கூட்டணி, தமிழ்ப் பொதுமக்கள் போன்றோரிடமிருந்து அறிந்துகொண்டவற்றிலிருந்தும

தீர்க்கதரிசனமிக்க ஒரு பத்திரிகையாளனை இழந்துவிட்டோம்.

இணைப்புக்கு நன்றி வசி

இலங்கை சிங்களவனில் அனுபவம் கொண்ட ஒரு எழுத்தாளனின் சொற்கள் அத்தனையும் உண்மை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.