Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப்படையின் வெறித்தனம்...!

Featured Replies

படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை.

சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படையினர், அங்கிருந்த நான்கு பெண் பணியாளர்கள் உட்பட பதினைந்து பேரை, தலையில் சுட்டு கோரமாகப் படுகொலை செய்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • தொடங்கியவர்

திருமலை கல்லாறில் 30 தமிழர்கள் படையினரால் கைது.

திருமலை கல்லாறு பகுதியில், சிறீலங்கா படையினரால் மூதூரைச் சேர்ந்த முப்பது தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12:30 மணிக்கு, (UNCOR) உன்கோர் நிறுவனத்தின் வழித்துணையுடன், நான்கு பேருந்து வண்டிகளில் சென்ற கொண்டிருந்த முந்நூறு வரையான தமிழர்களை, கந்தளாய் கல்லாறு பகுதியில் வழிமறித்து கடுமையாக துன்புறுத்திய சிறீலங்கா படையினர், இவர்களில் முப்பது பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லாறு படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • தொடங்கியவர்

திருமலை ஈச்சிலம்பற்றில் இன்றும் கிபீர் மற்றும் எறிகணைத் தாக்குதல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று நிலப்பரப்பு மீது, இன்று சிறீலங்கா அரசாங்கம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.இன்று பகல், ஈச்சிலம்பற்று வான்பரப்பில் அத்துமீறி பறப்புக்களில் ஈடுபட்டடுள்ளது.

சிறீலங்கா வான்படையின் கிபீர் மிகையொலி விமானங்கள், முகத்துவாரம், இலங்கைத்துறை, வெருகல் ஆகிய பகுதிகள் மீது கண்மூடித்தனமாக குண்டு வீச்சுக்களை மேற்கொண்டன.

ஏக காலத்தில், திருமலை துறைமுக கடற்படை தளத்தில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி, சிறீலங்கா படைகளால் ஆட்லறிகள் - பல்குழல் செலுத்திகள் மூலம், தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

மூதூரில் அரச சார்பற்ற பணியாளர்கள் 15 பேர் சிங்களப் படையால் சுட்டுப் படுகொலை

[ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 05:40 ஈழம்] [தி.நிர்மலா]

மூதூர் நகருக்கு நேற்று சனிக்கிழமை காலை சென்ற சிறிலங்காப் படையினர் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றும் 15 தமிழ்ப் பணியாளர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

மூதூர் கலாச்சார நிலையத்திற்கு அருகில் உள்ள அவர்களின் அலுவலகத்திற்குள்ளேயே இந்த 15 பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் நகரிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகொலை செய்யப்பட்டவர்களில் நால்வர் பெண் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய மெதடிஸ்ட் நிவாரணக் குழுவினரால் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகளில் 29 ஆண்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு உழவு இயந்திரமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாக கிளிவெட்டித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் 300 தமிழ்க் குடும்பங்கள் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.

http://www.eelampage.com/?cn=28009

  • கருத்துக்கள உறவுகள்

கல்லாறில் 27 தமிழ் இளைஞர்கள் கைது: மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பெற்றோர் கோரிக்கை

கல்லாறு சிறிலங்கா இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்படட்ட 27 தமிழ் இளைஞர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூர்ப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை "அம்கோர்" என்ற நிறுவனம் திருகோணமலைக்கு எட்டுப் பேரூந்துகளிலும் பாரஊர்திகளிலும் அழைத்து வந்த போது அல்லக்கந்த வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் பாரஊர்தியை வழிமறித்து சோதனை நடந்தது.

சோதனை செய்த இராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான 27 தமிழ் இளைஞர்களை முகாமில் தடுத்து வைத்துக்கொண்டு ஏனையவர்களை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

27 தமிழ் இளைஞர்களையும் இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்த போது மேற்படி மக்களை அழைத்து வந்த "அம்கோர்" நிறுவனத்தின் பிரதிநிதி அவர்களை விடுவிக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். எனினும் இராணுவத்தினர் அதற்கு இணங்கவில்லை.

மூதூரிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் தற்போது திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித வளனார் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை மனித உரிமை ஆணைக்குழுவினர் நேற்று பெற்றுள்ளனர்.

தமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு பெற்றோர் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய் சிறிலங்கா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு:

1) மல்லிகைத்தீவைச் சேர்ந்த ஆசிரியரான வசந்தன் சந்திரகேசரம் (வயது 29)

2) பாரதிபுரம், கிளிவெட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான குணதாச துசான்த் (வயது 17)

3) பாரதிபுரம் கிளிவெட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான பியதாச சந்திரபாலன் (வயது 22)

4) முன்னைப்பொடிவெட்டை தோப்பூர், பிரதேச செயலகத்தில் எழுத்தாளராக பணியாற்றும் சின்னத்தம்பி சாந்தகுமார் (வயது 34)

5) பட்டித்திடல் தோப்பூரைச் சேர்ந்த விநாயகமூர்த்தி தயாபரன் (வயது 32)

6) திருஞானசம்பந்தர் வீதி திருமலையைச் சேர்ந்த மரவேலை செய்பவரான சத்தியசீலன் இராஜேந்திரன் (21)

7) பட்டித்திடல் தோப்பூரைச் சேர்ந்த சிவசம்பு தனரூபன் (வயது 16)

8) பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த அரியதாஸ் தயாபரன் (வயது 26)

9) பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான வித்தியலிங்கம் ஜீவகன் (வயது 25)

10) பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான இராசதுரை பிரபாகரன் (வயது 22)

11) பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த மாணவனான செல்வராசா கயல்வேந்தன் (வயது 19)

12) பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த மாணவனான விநாயகமூர்த்தி கிருபா (வயது 18)

13) பட்டிடத்திடல் தோப்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காந்தன் விஸ்வநாதன் (வயது 36)

14) மணல்சேனையைச் சேர்ந்த விஸ்வலிங்கம் காண்டீபன் (வயது 29)

15) கிளிவெட்டியைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியரான நல்லதம்பி சிவதாஸ் (வயது 43)

16) முன்னம்பொடிவெட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சித்திரவேல் தியாகராசா (வயது 28)

17) பட்டித்திடலைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மயில்வாகனம் தேவராஜா (வயது 28)

18) கிளிவெட்டியைச் சேர்ந்த சிறிலங்கா காவல்துறையிலிருந்து இளைப்பாறிய காமினி ஜயசிங்க (வயது 35)

19) பாரதிபுரம் கிளிவெட்டியைச் சேர்ந்த மாணவனான பேரின்பராசா மேலலோஜன் (வயது 18)

20) பாலத்தோப்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது 39)

21) பச்சனூரைச் சேர்ந்த மாணவனான ஜெயசீலன் சத்தியசீலன் (வயது 22)

22) இலங்கை போக்குவரத்துச் சேவையில் காவலாளியாக பணியாற்றும் கனகநாயகம் ஜெயகாந்த் (வயது 28)

23) பட்டித்திடலைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சித்திரவேல் ஜீவரூபன் (வயது 21)

24) மல்லிகைத்தீவைச் சேர்ந்த ஆசிரியரான சந்திரசேகரம் வசந்தன் (வயது 29)

25) இருதயபுரத்தைச் சேர்ந்த மாணவனான சிங்கரசா சுமேந்திரன் (வயது 22) ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.