Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம்;: சி.எழிலன் பதிலடி

[ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 21:04 ஈழம்] [ம.சேரமான்]

மாவிலாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையை நிராகரித்து யுத்தத்தினூடாகத்தான் தீர்வு காண்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாமும் அதே வழியில் தான் தீர்வு காண்போம் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (06.08.06) சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்:

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் ஓவே ஜேன்சனும் என்னுடைய அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களுடன் நான் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது கிளிநொச்சியிலிருந்து எமக்கு ஒரு தகவல் வந்தது. நோர்வே குழுவினருடனான கலந்துரையாடலில் மாவிலாறு பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் நோர்வேக் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கமைவாக ஆறு திறந்துவிடப்படும் என்றும் அதே நேரத்தில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை மூன்று வாரங்களில் நிறைவேற்றுவதற்கான உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற செய்தியோடு மனிதாபிமான அடிப்படையில் ஆற்றைத் திறப்பதாக தேசியத் தலைவர் கூறியிருப்பதாகவும் எமக்கு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தி கிடைத்த அதே நேரத்திலேயே இதனுடன் தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதிகளை கண்காணிப்புக் குழுவினர் முன்னிலையிலேயே அழைத்து கிளிநொச்சி பேச்சுக்கள் தொடர்பாக விளக்கினோம். மக்களும் ஏற்றுக்கொண்டு ஆற்றைத் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி பிற்பகல் 1.30 மணியளவில் சென்றிருந்தோம். பிற்பகல் 2.30 மணியளவில் நாங்கள் அணைக்கட்டுக்கு அருகில் சென்றபோது அந்தப் பகுதியில் எறிகணைகள் வீசப்பட்டன. தொடர்சியாக நூற்றுக்கணக்கான எறிகணைகள் வீசப்பட்டன. கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு அருகிலே கூட ஒரு எறிகணை விழுந்து வெடித்தது. உடனே அருகில் இருந்த பதுங்கு குழி ஒன்றில் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஏராளமான எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்தமையால் அவரை அங்கு வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று அவரது இடத்துக்கு அனுப்பினோம். இப்படியான ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று அவர் மனம் வருந்திக் கொண்டு தன்னுடைய இடத்துக்கு அவர் திரும்பினார்.

ஆற்றைத் திறப்பதற்கு முன்பாக பாதுகாப்புத் தரப்பினருக்கு நாங்கள் அங்கே சொல்கிறோம் என்று தெரிவித்துவிட்டுத்தான் அவர் வந்திருந்தார். ஆனால் தனக்கு உயிராபத்து ஏற்படுத்திய காரணத்தால் அவர் மகிந்தபுரம் இராணுவ சோதனைச் சாவடியூடாக திரும்பிச் செல்லவில்லை. வெருகல் வந்து வாழைச்சேனையூடாக கொழும்பு திரும்பினார்.

அணைக்கட்டு மறிக்கப்பட்ட பின்னர் நான்கு முறை கண்காணிப்புக் குழுவினருடன் பேச்சுக்களை நாம் நடத்தினோம். ஆனால் நான்கு முறையும் இது போன்ற பேச்சுக்களின் போது தாக்குதல்களைத் தான் நடத்தினார்கள். தற்போதும் அணையை திறப்பதற்குச் சென்ற போதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணையை யுத்த நடவடிக்கையினூடாகத் திறக்க வேண்டும் என்பதற்காக அணை திறப்புக்கான தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக கேகலிய ரம்புக்வெல இன்று கூறியிருக்கிறார்.

மக்களுடைய பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவு கூட அவர்களிடம் இல்லை. மனிதாபிமான பிரச்சனைக்கு அப்பால் இராணுவப் பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். நீருக்கும் மனிதாபிமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கி உள்ளது.

யுத்தத்தினூடாகத்தான் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் தாக்குதலை நடத்துகிற போது பேச்சுவார்த்தையினூடாக தீர்க்க முடியாத என்ற சூழ்நிலையில் நாங்களும் அதே வழியைத்தான் தொடர வேண்டிய நிலையில் உள்ளோம்.

மூதூர் தொடக்கம் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னைய தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து எதுவித மாற்றமுமில்லாமல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இனி அணைக்கட்டுத் திறப்பு தொடர்பாக மேல்நிலை பொறுப்பாளர்களுடன் கலந்து பேசிய பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் முடிவின் அடிப்படையில் நாம் செயற்படுவோம்.

முன்னர் இருந்த நிலைகளிலிருந்து விலகிச் சென்ற இராணுவத்தினருடன் மேலதிக இராணுவத்தினரும் இணைந்துள்ளனர். கட்டைப்பறிச்சான், மகிந்தபுரம் ஊடாக செஞ்சிலுவச் சங்கத்தினர் சென்றபோதும் மறிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கான பாதை மூடப்பட்டே உள்ளது. ஈச்சிலம்பற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா இராணுவம் நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் மகிந்தபுரத்திலேயே அவர்கள் தங்கியிருந்தனர்.

இன்றும் மூதூர் மக்களின் நிலைமைகளைப் பார்வையிடச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை கல்லாறு இராணுவ முகாம் அருகே சிங்களக் காடையர்களும் இராணுவத்தோடு சேர்தியங்குவோரும் வழிமறித்து அவர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தி மனிதாபிமான உதவிகளைச் செய்யக் கூடாது என்று திருப்பி அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது அந்தப் பகுதிகளுக்கு வரமுடியாது என்றும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றார் எழிலன்.

http://www.eelampage.com/?cn=28030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.