Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர் அரசியல் படுகொலைகள் அச்சமடைய வைக்கிறது.. சீமான்

Featured Replies

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்த டுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளது போல், இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது. ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது. பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷை அரிவாளால் வெட்டிக்கொன்ற மூன்று பேர் கும்பல், எவ்வித பதற்றமுமின்றி, மிகச் சாதாரணமாக நடந்து தெரு முனைக்குச் சென்று தப்பியதாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். இதிலிருந்து கொலையாளிகள் கூலிப்படையினர்தான் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கூலிப்படையினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. 12 ஆண்டுகள் காத்திருந்து என் கணவரைக் கொன்ற எதிரியை பழி தீர்த்தேன் என்று காவல்துறையினரிடம் ஒரு குற்றவாளி வாக்குமூலம் தந்த செய்தி நாளிதழ்களில் வந்தது. இதேபோல் பல சமூக குற்றவாளிகள் அவர்களின் ‘தொழில்' எதிரிகளால் படுகொலை செய்யும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய மலையாள நடிகர் மோகன்லால், நான் கொல்லப்பட்டிருந்தால் எனது தாய் எப்படி துடித்திருப்பாரோ அதுபோலத்தானே சந்திரசேகரனின் தாய் துடிதுடித்திருப்பார். அந்த தாயின் மன நிலையில் இருந்து அந்தத் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார். கொலை செய்யப்படுபவர் யாராயினும், அதற்கு கொள்கையோ, அரசியலோ காரணமாயினும், கொல்லப்பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும், துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக்கட்டுவது என்கிற நிலை, அதுவும் கூலிப்படை கொண்டு கணக்குத் தீர்ப்பது என்று போனால், அது நமது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும். எனவேதான் இப்பிரச் சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும், அவர்களை பின்னின்று இயக்கிய வர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். கொலை கொள்ளை செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது. அதையும் தாண்டி இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.

http://tamil.oneindia.in/news/2013/07/21/tamilnadu-seeman-condemns-auditor-ramesh-murder-179540.html

  • தொடங்கியவர்

பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை காட்டுமிராண்டித்தனமானது - வைகோ

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொடியோர் சிலரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தருகிறது. இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நான் நன்கு அறிவேன். கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிமையாகப் பேசி அவர்களின் நேசத்தைப் பெற்ற நல்ல மனிதர் ஆவார். அவரோடு பலமுறை பேசிப் பழகி உள்ளேன். சேலத்தில் என் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வாழ்த்தியதோடு, நீண்ட நேரம் உடன் இருந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டு வாசலில், அவர் கார் தீயிட்டு எரிக்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பனுக்கு, ஆடிட்டர் ரமேஷ் நெருங்கிய நண்பர் ஆவார். வெள்ளையப்பன் படுகொலைக்குப் பின்னர் ரமேசுக்கு தக்க பாதுகாப்பை காவல்துறை கொடுக்கத் தவறிவிட்டது. தன் மனைவி, புதல்வியுடன் உணவு விடுதியில் உணவு அருந்திவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் சென்ற சிறிது நேரத்திலேயே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை எண்ணும்போதே தாங்க முடியாத வேதனை செய்தியைப் படிக்கின்ற நமக்கே ஏற்படுகிறது என்றால், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரை கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஈவு இரக்கம் இல்லாமல் மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆடிட்டர் ரமேசை படுகொலை செய்த கொடியவர்களை காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மூலம் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்தி, தக்க தண்டனை கிடைக்க, உரிய நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். ஈ, எறும்புக்குக் கூட தீங்கு செய்ய நினைக்காத, எவரிடத்திலும் கடிந்துகூடப் பேசாத பண்பாளரான நல்ல மனிதர் ரமேசை கொலை செய்த தீயவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. தான் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கைக்காக பாடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாத அராஜக ரத்த வெறிதான் இந்த கொடூரமான படுகொலைக்குக் காரணம் ஆகும். கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, இந்து இயக்கங்களைச் சேர்ந்த 6 பேர் படுகொலைசெய்யப்பட்டு உள்ளனர். முக்கியத் தலைவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவங்கள் தொடர்வது மிகவும் அச்சத்தைத் தருகிறது. இத்தகைய கொலைவெறி அராஜகத்தை வளரவிடாமல் தடுக்கவும், காலம் காலமாக தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைக் காக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் சமயம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும், கொள்கைகளிலும் கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமை ஆகும். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கொலைவெறி கத்தியால் அல்ல. வேலூரிலும், சேலத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் தருவதால், பொது அமைதியை நிலைநாட்டவும், தங்களுக்கு விருப்பமான சமயக் கருத்துகளைக் கொண்டோர் பாதுகாப்பாக அச்சமின்றி வாழவும், தேவையான தக்க நடவடிக்கைகளை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 http://tamil.oneindia.in/news/2013/07/21/tamilnadu-vaiko-condemns-bjp-leader-s-murder-179523.html

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் கொலை: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
  •  
  • 1.jpg

பா.ஜ.க., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மரவனேரியைச் சேர்ந்த பா.ஜ.க., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக்‌கொல்லப்பட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து விரைவான விசாரணை நடைபெறும் வகையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இக்குழு வேலூரில் கொல்லப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை குறித்தும் விசாரணை நடத்தும் என்றும் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்தக் குழு செயல்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

http://dinamani.com/latest_news/2013/07/21/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/article1694747.ece

 

  • தொடங்கியவர்

374386_485330794878807_363264945_n.png
காவல்துறை அறிவிப்பு 

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

1. மேலப்பாளையம் பென்னா இஸ்மாயில், 

2. பிலால் மாலிக் 

3. போலீஸ் ஃபக்ருதீன்

அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் அளிக்கப்படும்.

044-2345 4323, 99406 12129 என்ற எண்களில் தகவல் கூறலாம்....

போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக் ஆகியோர், மதுரை அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில் வெடிகுண்டு வைத்த வழக்கில், தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பன்னா இஸ்மாயில் என்பவர் நாகர்கோவிலில், பாரதிய ஜனதா பிரமுகர் காந்தியை அண்மையில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடையவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

www.puthiyathalaimurai.tv

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.