Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சு.ப. தமிழ்ச்செல்வன் அரசுக்கு அனுப்பிய எச்சரிக்கை! 14 நாள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை

மட்டுப்படுத்தப்படாத யுத்தமாக விரியும்

`

அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு முழு யுத்தத்துக்குரிய அளவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால், இரு தரப்பினருமே தாங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் என்றே கூறி வருகின்றனர். அதுதான் அத்தரப்புகளின் ஒரே நிலைப்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள், நோர்வே அனு சரணைத் தரப்பினர் முதல் சர்வதேச சமூகத்தினர் வரை அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தரப்புகளின் செய்திகள், தகவல்கள், நம்பிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விடுதலைப் புலி களின் நிலைப் பாட்டையும் இலங்கை அரசுத் தலைமை எடைபோடுகின்றது போலும்.

மோதல் நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே போர் முனைகளைப் புலிகள் திறந்தாலும் முழு அளவிலான யுத் தம் ஒன்றுக்குப் போகும் எண்ணம் புலிகளுக்கு இல்லை. முழு அளவிலான போரை இன்றைய நிலையில் எதிர்கொள் ளவும் அவர்களால் இயலாது என்ற கருத்து நிலைப்பாடு தான் அரசுத் தலைமைக்கு இருப்பது போலப் படுகின்றது.

மாவிலாறு கால்வாய்ப் பிரச்சினை உட்பட அண்மைக் காலத்தில் புலிகளுடன் தொடர்புபட்ட விடயங்களை அரசுத் தரப்பு கையாண்ட முறைமைகளைப் பார்க்கும்போது இப் படித்தான் அரசுத் தலைமை கருதியிருக்கின்றது என்பது துலாம்பரமாகத் தெரிகின்றது.

உலகிலேயே யாரும் எதிர்பார்க்காத நம்ப முடியாத தீர்மானங்களை எடுத்து, பலரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள்ளும் ஆழ்த்தும் வகையில் செயல்படும் ஒரு விடுதலை இயக்கத்துடன்தான் தாம் விடயங்களைக் கையாள்கிறோம் என்பதை இலங்கை அரசு மறந்து செயற் படுவதால்தான் இத்தகைய கணக்கும், கணிப்பீடும் என்று கருத வேண்டியுள்ளது.

உலகின் மிகப் பெரிய இராணுவ வல்லாதிக்க நாடான இந்தியாவையே இராணுவ ரீதியில் யுத்தத்தில் எதிர் கொள்ளும் முடிவை சர்வதேசமே எதிர்பாராத வகையில் எடுத்து, இரண்டரை ஆண்டுகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்துடன் நின்று, நிலைத்து, மோதி, தன்னை ஸ்திரப்படுத்தி, நிலைப்படுத்திக் காட்டிய ஒரு விடுதலைப் போராட்ட அமைப்புடனும், என்றும் அச்சுறுத்தலுக்குத் தலை வணங்காத அந்த அமைப்பின் தலைவருடனும்தான் விடயங்களைத் தாங்கள் கையாளுகின்றோம் என்பதை இன் றைய இலங்கை அரசுத் தலைமை மறக்காமல் இருப்பது நல் லது.

ஆகவே, முழு அளவிலான யுத்தத்துக்குப் புலிகள் போக மாட்டார்கள் என்ற பொதுவான பேச்சை கருத்தியலை நிலைப்பாட்டை நம்பி, காய்களைஅதற்கேற்றவாறு நகர்த்தி, ஏமாறுவதை அரசுத் தரப்பு தவிர்ப்பதே சிறந்தது.

""தமிழர் தாயகப் பிரதேசங்கள் மீது மட்டுப்படுத்தப் பட்ட படை நடவடிக்கைகள் என்ற சாட்டில் வான் வழித் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்கள், படை நட வடிக்கைகள் போன்ற வலிந்து தாக்கும் நடவடிக்கைகளை யும் அரசுத் தலைமை இனியும் மேற்கொள்ள முயற்சிக்கு மானால் அது போர் நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டு முழு அளவிலான போரைப் பிரகடனம் செய்யும் நடவடிக்கையாகவே கருதப்படும்.''

என்று நோர்வே ஊடாக அரசுக்குப் புலிகள் அனுப்பி யிருக்கும் எச்சரிக்கையை இந்தப் பின்னணியில்தான் நாம் நோக்க வேண்டும்.

தற்போதைய யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்து ணர்வு உடன்படிக்கையின்படி , அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புகளில் ஏதோ ஒரு தரப்பு யுத்த நிறுத்த உடன்படிக் கையிலிருந்து வெளியேறி முழு அளவிலான யுத்தத்துக்குச் செல்ல விரும்பினால், அதற்காக இரண்டு வார கால எழுத்து மூல முன்னறிவித்தலை வழங்க வேண்டும்.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் தம்மைச் சந்தித்த நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஹன்ஸன் போவர் ஊடாகப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அரசுக்கு அனுப்பிய எச்சரிக்கை அத்த கைய முன்னறிவித்தல் "நோட்டீஸ்' ஆகவே கொள்ள வேண் டியிருக்கின்றது.

ஆக, திகதியிடப்படாமல் கொடுக்கப்பட்டிருக்கும் முன் னறிவித்தல் இது. அவ்வளவுதான்.

புலிகள் சுட்டிக்காட்டியபடி, அத்தகைய வலிந்து தாக் கும் போர் நடவடிக்கையை அரசுத் தரப்பு முன்னெடுக்குமா னால் அன்றைய திகதியை, அந்த முன்னறிவித்தல் "நோட் டீஸ்' இற்கான திகதியாகக் கணித்துக் கொள்ளுங்கள் என்ற சாரப்படவே நோர்வேத் தரப்புக்கு புலிகள் விளக்கம் கொடுத் திருக்கின்றனர் என்று கருதப்படுகிறது.

இந்த உண்மை புரியாமல், இனியும் மட்டுப்படுத் தப்பட்ட படை நடவடிக்கை, விமானக் குண்டு வீச்சு என்று அரசுத் தரப்பு நொட்டிக் கொண்டிருக்குமானால் விளைவு முழு அளவு யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியதாகவே அமை யும்.

அதற்கு அரசுத் தரப்புத் தயாரானால் அந்த வேலையை அரசுப் படைகள் தொடரலாம். விளைவுகளை எதிர்கொள் ளலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்று இனி ஒரு செயற்பாட்டை ஆரம்பித்தால் அது மட்டுப்படுத்தப்படாத முழு யுத்தமாக விரியும் என்பதே யதார்த்தமாகும்.

http://www.uthayan.com/editor.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.