Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

Featured Replies

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

 

ன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது.

sathyanarayana-raju.jpgகணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மின்னஞ்சல் வந்திருக்கிறது. அது கணபதி ராஜுவின் மின்னஞ்சல் முகவரி rajug1958@yahoo.com யை உட்டாலக்கடி அடித்து உருவாக்கப்பட்ட போலி முகவரி இதைச் செய்தது ரத்னாகாராகத்தான் இருக்கும் என்று கணபதி ராஜு புகார் செய்திருக்கிறார்.

ஜூலை 7-ம் தேதி கணபதி ராஜு வீட்டை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கச் சென்ற கணபதி ராஜு சில நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில் ரத்னாகர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை (ஸ்ரீபிரசாத்) கணபதி ராஜு தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி ராஜு ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுதான் வெளியாகியுள்ள தகவல்களின் சுருக்கம்.

_______________________________________

அகில உலகையும் ரட்சிக்கும் சிவ-சக்தியின் அம்சம் என்று அவரது பக்தர்களால் போற்றப்படும் சாய் பாபா என்ற சத்யநாராயண ராஜு உலக விதிகளின் படி ஒரு பெற்றோருக்கு பிறந்து, உடன் பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சொத்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இறந்திருக்கிறார். தனது சொத்துக்களை ஆள்பவதற்கு நெருங்கிய உறவினர்களை விடுத்து வேறு சீடர்களெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. இதுதான் முற்றும் துறந்த முனிவன் ஒரு முதலாளி போல நடந்திருக்கும் இலட்சணம்.

சிவ-சக்தி அவதாரமாக தன்னை அறிவித்துக் கொண்ட பிறகு தன்னை நம்பி வந்த பக்தர்களை படு மோசமான முறையில் நடத்தியிருக்கிறார் சாய்பாபா. தரிசன கூட்டங்களில் தனது விபூதி வரவழைப்பது, லிங்கம் தோன்றச் செய்வது, வாட்ச் எடுத்து கொடுப்பது என்று பல மாய வித்தைகள் செய்து தனது பிராண்டை உருவாக்கினார்.

கானி லார்சன் என்பவர் 1976-ம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகள் தான் பிரசாந்தி நிலையத்தில் கழித்த அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார். சாயிபாபா பக்தர்களில் ஒரு குடும்பத்தை அல்லது சில நபர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு ஆன்மீக அறிவுரை வழங்குவதாக பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் வெளியாகின. குழந்தைகள் வக்கிரமான முறையில் பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனம் யுனஸ்கோ புட்டபர்த்தியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.

1993-ம் ஆண்டு ஆசிரமத்தில் 6 பேர் மர்மமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் பாபாவை கொலை செய்ய வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு உண்மைக் காரணம் மறைக்கப்பட்டு வழக்கு மூழகடிக்கப்பட்டது. இவ்வ்வளவு கொலை நடந்தாலும் அரசு, அதிகார வர்க்கம், அரசியல்கட்சிகள் ஆதரவு காரணமாக அயோக்கியனான சாய்பாபா ஒரு யோக்கியனாக உலா வரமுடிந்தது.

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரஷாந்தி நிலையத்தில் கழித்தார் சாய்பாபா. வெயில் காலங்களில் சூட்டை தாங்க முடியாவிட்டால் வொயிட்பீல்டிலுள்ள பிருந்தாவனம் ஆசிரமத்திற்கு போய் விடுவாராம். இன்னும் கொஞ்சம் சொகுசு தேவைப்பட்டால் கொடைக்கானலில் இருக்கும் சாய் சுருதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்வாராம். பகவானாகப் பிறந்தவருக்கும் வெயில் அடித்தால் சுடும், மலைக்கு மேல் போனால் சுகமாக இருக்கும் என்ற சொகுசு வாழ்க்கையிலிருந்து தப்ப முடியவில்லை.

 

http://www.vinavu.com/2013/07/24/saibab-relatives-quarrel-over-trust/

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் இருக்கும் அனைத்துக் கள்ளச் சாமிகளுக்கும் இவர்தான் குரு

60 களில் பலபேருக்கு இது விளங்கவில்லை :)

பாபா செய்த நன்மைகளையும் மறக்கக் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

2011 ல்

 

 

 

சாய்பாபா அறக்கட்டளை ஊழல்பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சாய்பாபாவின் உறவினர் கோரிக்கை

 

Sathya_Sai_Baba_-300x230.jpg
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.351/2 லட்சம் கொடிகொண்டா சோதனைச்சாவடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கார் டிரைவர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் நடந்த மறுநாள் சொகுசு பஸ்சில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.   இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது.
எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.   பாபா வசித்த யஜுர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும். சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராஜு கூறினார்.
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள். பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும். இவ்வாறு சிரவண் கூறினார்.   பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பக்தர் ஐசக் டிரிகேட் என்பவர் கூறுகையில்; சாய்பாபா உயில் எழுதி வைத்து இருப்பதாகவும், அதுபற்றி அவர் தன்னிடம் கூறி இருப்பதாகவும், அந்த உயிலை இன்னும் 6 வாரங்களில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரி இல்லை என்றும் அவர் கூறினார்.


இதற்கிடையே, காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் தொடர்பாக சாய்பாபாவின் உறவினர் ஆர்.ஜே.ரத்னாகர், சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர் வி.சீனிவாசன் ஆகியோருக்கு ஆந்திர மாநில போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரியவந்து இருப்பதால் அதுபற்றி இன்னும் 3 தினங்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


இதேபோல் சதாசிவ், வெங்கடேஷ் (சீனிவாசனின் உதவியாளர்) ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் ஆந்திராவுக்கு வெளியே இருப்பதால் போலீசார் முன்பு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

 

http://suriyantv.com/?p=4036

உவருக்கு ஏன் இவ்வளவு சொத்து ? :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.