Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதவுரிமை கலந்துரையாடல் நடந்தது என்ன??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமை கலந்துரையாடல் நடந்தது என்ன??

கடந்த ஆறாம் திகதி மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மன்னிப்பசபை மண்டபத்தில் இரண்டுமணியளவில் ஒரு கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யபட்டிருந்தது இதன் நோக்கம் இலங்கையில் காணாமல் போன மற்றும் விசாரணைகள் இன்றி நடந்த படுகொலைகளை பற்றிய கலந்துரையாடல் என்று பொது பார்வைக்கு இந்த கலந்துரையாடல் தென்பட்டாலும் இந்த கலந்துரையாடலை பின்னின்று ஒழுங்கு செய்த சிலரின் நோக்கம் ஈழவிடுதலை போரிற்கும் மற்றும் அதன் போராட்ட சக்தியாக இருக்கின்ற புலிகளின் மீது பழி சுமத்தி தங்கள் சுயவிரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்து கொள்வதேயாகும்.;

இந்த கலந்தரையாடலிற்கு மாற்று கருத்து மனிதவுரிமைவாதிகள் என்று வந்திருந்தவர்களின் பெயரை பார்த்தாலே அது நன்றாக புலப்படும். இந்த கலந்துரையாடலினை பின் நின்று ஒழுங்கு படுத்தியவர் நிர்மலா என்பவர் இவர் ரஜனி திரணகமவின் சகோதரி . அவர் சார்பாக வந்திருந்தவர்கள் சிவகுமார்(ராகவன்) ராஜேஸ்வரி.சிவலிங்கம். ஜெயதேவன்.கீரன்(இவர் பழைய ரெலோ உறுப்பினர் நெல்லியடியை சேர்ந்தவர் இவர்தான் லண்டனில் இருந்து தேனீ தளத்திற்கு செய்திகள் வழங்குபவர்) பகீரதன் (அமிரின் மகன்) நெப்பொலியன்(பத்திரிகையாளர் நிமலராயனின் கொலையின் முக்கிய நபர்) ரவி சந்தர லிங்கம்.பசீர் ;கே.பி விக்ரமரட்ணா என்று தங்கள் சுய நலத்திற்காக படுகொலைகளை கண்டிப்போம் என்று சொல்லி கொண்டு புலிகளை மட்டுமே கண்டிப்பவர்கள் முப்பது பேரளவில் வந்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலிற்கு இலங்கை அரசின் படுகொலைகள் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்து காணாமல் போனவர்கள் பற்றியும் கதைப்பதற்காக வேறு பொதுவான சிலர் இருபத்தைந்து பெயரளவில் சென்றிருந்தனர்.ஆனால் கலந்துரையாடல் என்று கூட்டபட்ட அந்த கூட்டத்தில் மாற்று கருத்தாளர்கள் என்று சொல்லபடுபவர்கள் தாங்கள் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்கவேண்டும் மற்றவர்கள் சொல்வதை தங்களால் கேட்க முடியாது என்கிற தோரணையிலேயே கருத்துகளை முன்வைத்ததால் அங்கு வாதபிரதிவாதங்கள் வாக்கு வாதங்களாக மாறியது.

விடுதலை புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனவே அவர்களின் பிரதிநிதிகளையும் இந்த கலந்துரையா வழிவகை செய்யவேண்டம்என்று ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி அவர்களின் கருத்திற்கு ஜெயதேவனும் வேறுசிலரும் வெகுண்டெழுந்து கத்தி காட்டுகூச்சல் போட்டனர். முன்னை நாள் பி பி சி பணிப்பாளர் ஆனந்தி அவர்களின் கேள்விகளிற்கு பதில் சொல்ல முடியாமல் பசீர் என்பவர் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார். இப்படியாக கூச்சலும் குழப்பமுமாக மனிதவுரிமைபற்றி பேசவந்த சனநாயகவாதிகள் என்று சொல்லி கொண்டவர்கள் புலிகளையும் ஈழபோராட்டத்தையும் கொச்சைபடுத்தும் நோக்கம் நிறைவேறாததால் அங்கிருந்து ஆத்திரத்துடன் வெளியேறி விட்டனர் இது இப்படியிருக்க தேனீயும் அதன் தாளத்திற்கு ஆடும் தளங்களும் வழைமை போல உள்ளதை திரித்து செய்தி வெளியிட்ட தனது ஆசைகளை தீர்த்துகொண்டிருக்கின்றன.

இனிமேலும் இந்த சனநாயக வேடதாரிகளிடம் உண்மையான திறந்த மனதுடனான கலந்துரையாடலை நடாத்த முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். எனவே இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களில் இப்படியான கலந்தரையாடல்கள் இடம்பெறுமாயின் அந்த இடத்தில் பல்லாயிரம் தமிழர் திரண்டு இந்த மனிதவுரிமை வாதிகளின் மாயைதிரைகளை கிழிக்கவேண்டும்; அப்போததான் தமிழினத்தின் தேசிய வலு என்னவென்பது அவர்களிற்கும் உலகத்திற்கும் புரியும்.

இவர்களின் வாதம் எப்படி இருக்கும் என்பது வெளிச்சம்.... ஆனால் இங்கு இருக்கும் சிலர் இவர்களி விவரமில்லாத (உப்பு சப்பு இல்லா) வாதங்களை தனியான வாதங்களாய் கொண்டு வந்து கொட்டி அளப்பது விசனத்தை குடுக்கிறது...!

  • கருத்துக்கள உறவுகள்

அது வரூடம் வருடமாகப் பிரச்சினையின்றி நடைபெறுகின்ற ஒன்று (ஒழுங்கு செய்பவர்கள் எல்லோருக்கும் கொஞ்சப் பசை கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன்). அதையும் போய் பிரச்சினைப்படுத்தி அடுத்த வருடம் நடக்காவிட்டால், வருமானத்தில கொஞ்சம் குறையுமெல்லே.. :cry:

இந்த காட்டுதர்பாருக்கு அரைகுறை மாட்டு வைத்தியர் மாரும் பெரும் அமளி. ஊரில் நின்றால் மாட்டுக்கு கூட ஊசி போட விட்டிருக்க மாட்டினம். மாட்டு டாக்டர் நிர்மலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.