Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் வருகையையொட்டி மாணவர்கள் தமிழ் உணர்வாளர்களை கண்காணிக்கும் உளவுத்துறை

Featured Replies

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு ஆகஸ்ட் 2-ல் பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி இம்மாவட்டத்தில்உள்ள தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ஓலைக்குடிப்பட்டியில் பெல் தொழில்சாலையை திறந்துவைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆகஸ்ட் 2-ம் தேதி வருகைதரவுள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், விழா அரங்கம் பகுதிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது ஆலோசனைப்படி அப்பகுதியை காவல்துறையினர் தன்வசமாக்கியுள்ளனர். இப்பகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்டது என்பதால் அத்தொகுதியின் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் பார்வையிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்களால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பிரதமர் வருகையின்போது அத்தகைய சம்பவங்கள் பிரதிபளிக்காத வகையிலும், எதிர் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெணாவிலக்கு, தோப்புக்கொல்லை, அழியாநிலை  ஆகிய இலங்கை அகதிகள் முகாம்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு,  வருவாய்த்துறை மற்றும் உளவுத்துறையினரால் முகாம்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் தவிர வேறுயாரேனும் முகாமுக்குள் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது.

மேலும், புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள தமிழ்உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் மற்றும் கட்சியில் இடம்பெற்றுள்ள முக்கிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் செல் எண்ணுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து தினமும் அவர்களின் அசைவுகள், இவர்களால் ரகசிய கூட்டம் நடத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது.      

அதுமட்டுமின்றி பிறபகுதிகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாரின் சோதனைகளுப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் வெடிப் பொருட்கள் தயாரிப்பாளர்களிடம் யாருக்கும் வெடிப் பொருட்கள், வெடி மருந்துகள் கொடுக்க கூடாது என்ற போலிசார் கூறியுள்ளனர்.

வீதி, வீதியாக போலீஸ் ரோந்துகளும் திவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமலிருக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்போன் கோபுரங்கள், அதிகளவில் மக்கள் கூடும் கோவில்கள், நகர்பகுதிகள், அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள்,  ரயில் நிலையம் போன்ற இடங்களும் கண்காணிக்கப்படுவதாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Â

 

http://www.dinaithal.com/tamilnadu/17851-manmohan-singh-varukaiyaiyotti-students-tamil-unarvalarkalai-intelligence-monitoring.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.