Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ]

Featured Replies

  • 592293_211901605494764_387034495_q.jpg
      பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ]

    1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா?

    [இல்லை தூக்குல தொங்கப்போறேன்

    2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?

    [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)]

    3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே?

    [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

    4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?

    [ இல்லை கும்மி அடிச்சேன் ]

    5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?

    [ இல்லை அமெரிக்கா போறேன் ]

    6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?

    [ இல்லை புளியம்பழம் ]

    7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?

    [ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

    8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?

    [ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

    9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?

    [ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]

    10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?

    [ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

    via; Aarthika

    Visit our Page -► தமிழால் இணைவோம்

    954774_641435799208007_597550032_n.jpg

 

சுப்பர் யாழன்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாவது கேள்வியை ஒருதரம் கேட்டிட்டு அசடுவழிஞ்ச அனுபவம் உள்ளது..! :D

  • தொடங்கியவர்

1011095_414544831995808_1591976590_n.jpg

 

 

 
 
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

-

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது

சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க

டாக்டர் – தினமும் மூணு வேளை

நர்ஸ் – நார்மலாத்தான்

பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது

போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது

வேலைக்காரி – பிசு பிசுன்னு

அட்டை – விடாம பெய்யுது

ஆமை- வெளியே தலை காட்டா முடியலை

குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது

தேள் – கொட்டு கொட்டுன்னு

நண்டு – பிடி பிடின்னு

-கலாநிதி தீண்டா மெழுகுகள்

 

  • தொடங்கியவர்

 

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்

" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது

போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்

ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது. இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

நன்றி : ஆதிரா (கனா காண்கிறேன்)

  • தொடங்கியவர்

உண்மைய சொன்னேன்

1.ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !

2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..

3.பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?

4.பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..

5.ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.

6.மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..

7.காதலித்து பார்....கழிவறையில் கவிதை வரும்.....காதலிக்காமல் இருந்து பார்...அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்...!!

8.கடைசி தோசை சாப்பிடும் போது சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து சட்னியை காலி செய்ய சொல்லி இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின் பாசம்..

9.இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் அமெரிக்காவால் .

10.இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல.....

-களவாணி பய

  • கருத்துக்கள உறவுகள்

1011095_414544831995808_1591976590_n.jpg

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

-

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது

சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க

டாக்டர் – தினமும் மூணு வேளை

நர்ஸ் – நார்மலாத்தான்

பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது

போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது

வேலைக்காரி – பிசு பிசுன்னு

அட்டை – விடாம பெய்யுது

ஆமை- வெளியே தலை காட்டா முடியலை

குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது

தேள் – கொட்டு கொட்டுன்னு

நண்டு – பிடி பிடின்னு

-கலாநிதி தீண்டா மெழுகுகள்

இது பேச்சுத்தமிழின் செறிவுக்குச் சான்று..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.