Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிநீரைக்கூட பெற்றுக் கொடுக்கமுடியாத வங்குரோத்தான தமிழ் அரசியல்வாதிகள்!

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர்.

1.JPG

2.JPG

நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சானாறு, உடும்பன்குளம் போன்ற பகுதிகள் போர் இடம்பெற்ற காலத்தில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இன்றும் காணப்படுகிறது.

3.JPG

4.JPG

தங்கவேலாயுதபுரத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த போதிலும், தற்போது 89 குடும்பங்கள் மாத்திரமே எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி வசித்துவருகின்றனர். அடிப்படை வசதிகளில் ஒன்றான குடி

நீருக்கே பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இப்பகுதி மலையும் மலைசார்ந்த இடமாக இருப்பதனால் நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்வதற்கு 30 அடிக்குக் கீழ் பெருமளவில் செலவு செய்துதான் நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த போதிலும், குடிநீர், மருத்துவம், மின்சாரம், வீதி, போக்குவரத்து மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் இது

வரையில் செய்து கொடுக்கப்படவில்லை. அரச சார்ப்பற்ற நிறுவனமான ‘சோபா’ நிறுவனம் ஓரிரு பொதுக் கிணறுகளை அமைத்துக் கொடுத்தாலும், அங்குள்ள எல்லா மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போது

மானதாகயில்லை.

5.JPG

7.JPG

இந்த கிராமத்திலுள்ள மாணவர்கள் தினமும் 7 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாக பயணித்தே தமது கல்வி நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர். நிரந்தர வீடுகள் இல்லாமல் இன்னும் சிலர் கஞ்சிகுடிச்சானாறு கிராமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் அமைத்துக் கொடுத்த வீடுகள் போர்க் காலத்தில் சேதமடைந்த நிலையில், திருத்துவதற்காக அரசாங்கத்தினுடாக 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மக்களின் கைகளில் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை.

அத்துடன், காட்டு யானைகளின் தொல்லைகளினால் வீடுகள் சேதமாக்கப்படுகின்றன. கொழும்பு அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையின் கீழ் கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், அதன் பயன்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்பதே பொது மக்களின் கருத்தாகவுள்ளது. அந்த மக்களின் இன்றைய வேண்டுகோளாக உள்ளது. எதை செய்யாவிட்டாலும் குடிநீர்ப் பிரச்சினையாவது தீர்த்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இன்றைய நிலையில், மத்திய மற்றும் மாகாண சபை அரசாங்களின் காணி சீர்திருத்தத் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - அம்பாறை  மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் பறிபோகும் நிலையில் உள்ளன. அரசாங்கத்தினால் ஒரு ஏக்கர் திட்டத்தின் கீழ் 50 வருடத்திற்கு மேல் குடியிருந்த காணிகள், சீர்த்திருத்தத் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படவுள்ளது.

7.JPG

8.JPG

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள 7 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு ஏக்கருக்கு மேல் ஒப்பக்காணிகள் வைத்திருந்தால் மேலதிகமானவற்றை அபகரிப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சபை சிங்கள் ஆட்சியாளர்கள் சட்ட வரையறையைப் பயன்படுத்தவுள்ளனர்.

கிழக்கு மாகாணம் போர் முடிவடைந்த பின்னர் பூரண அபிவிருத்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கும் கொழும்பு அரசாங்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் இன்னும் அழிவடைந்த எச்சங்களாகவே காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் கொலனி தமிழ் கிராமத்தில் சுமார் 300 குடும்பம் வாழ்ந்த போது, தற்போது 150 குடும்பங்கள் மாத்திரம் வாழ்ந்துவருகின்றனர்.

அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மலசலகூட வசதிகள், நிரந்தர வீட்டுப் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தொடர்பாக எதிர்கொண்டுள்ள இப்பகுதி மக்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு அரசாங்கமோ அல்லது எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனங்களோ முன்வராமையினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

தற்போது அவர்கள் வசித்துவரும் தற்காலிய கொட்டகைகள் கூட சிதைவடைந்துள்ளது. மீள்குடியேற்றம் என்ற போர்வையில், காடுகள் மண்டி, கட்டடம் சிதைவடைந்த பகுதிக்குள் மக்களை கால்நடைக்கு ஒப்பாக அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நடாத்துவது பெரும் வேதனையளிக்கிறது. போதுமான நிலப்பரப்பு இருந்தும் தங்குவதற்கான ஒரு நிரந்தர வீடுகள் இல்லை. சாப்பாடு இல்லாவிட்டாலும், தண்ணீரையாவது பருகுவதற்கு தண்ணீர் கூட இல்லை.  வீட்டில் சுகயீனமுற்றிருக்கும் பிள்ளைகளைக் தனிமையில் விட்டுவிட்டு ஒரு மணித்தியால நேரம் கால்நடையாக நடந்து சென்றுதான் குடிநீர் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது என அந்தக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, கல்முனை தமிழ்ப் பிரிவு, அக்கரைப்பற்று போன்ற தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த காலத்தில் இராணுவத்தின் தாக்குதலின் பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் மீளெழவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்புவதற்காக குடிநீர்த்திட்டம், வீதி அபிவிருத்தித்திட்டம், நிரந்தர வீட்டுத் திட்டம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய யூனியன், உலக வல்லரசு நாடுகளான அமெரிக்க உட்பட ஜப்பான், இந்திய, சீனா போன்ற நாடுகள் கடன் அடிப்படையிலும், மானியமாகவும் பல பில்லியன் கணக்கில் நிதி வழங்கிய போதிலும் அதன் பயன்களை பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சென்றடையவில்லை.

அம்பாறை மாவட்டதின் தமிழ்ப் பிரிவுகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகள் அரசியல் தலையீட்டினால் உரிய முறையில் கையாளப்படுவதில்லை. வெளிநாடுகளினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கப்படும் பெருந்தொகையான நிதி பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்ந்த முஸ்லீம் மற்றும் சிங்களவர்களின் பிரதேசங்கள் மாத்திரமே மேலும், மேலும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

மத்திய முகாம் பகுதியில் காணிகள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றதோ அதேபோன்று, சிங்களவர்களுக்கும், முஸ்லீங்களுக்கும் அருகிலுள்ள தமிழ் கிராமங்கள் அபகரிக்கப்படுகிறது. போர் முடிவடைந்த நிலையிலும், இன்னும் மக்கள் இடப்பெயர்வுகளைத்தான் தினம் தினம் எதிர்கொள்கின்றனர். தமிழ் மக்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவித்து சிங்கள இனவாத அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு, தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில் மக்களின் பாதிப்புக்கள் தொடர்பாகக் குரல் கொடுக்கவில்லை.

தமிழர்களின் பூர்விகக் காணிகள், கால்நடைக்கான மேச்சல் தரைகள் என ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்களவர்களினாலும், முஸ்லீங்களினாலும் அபகரிக்கப்படும் நிகழ்வை இந்த அரசியல்வாதிகளினால் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக அனைத்துலகம் தலையிடுவதன் மூலமாகவே தற்காலிகமாக நில அபகரிப்பைத் தடுக்க முடியும்.

- கிழக்கில் இருந்து எழுவான் 

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32149/64//d,fullart.aspx

8.JPG

 

வடமாகாணத்து முதலமைச்சர் திரு தவறானராசா, முள்ளிவாய்காலில் "Zero Casualty" என்று விவாதிக்கும் அரச புள்ளிவிபரங்களை துப்பல் போட்டு போட்டு கணக்கு கூட்டி காட்டினார். ஆனால் இதை பார்த்தவரா?. வன்னியில் பிள்ளை போக முடியாத சூழ்நிலை.  இப்போது யாழ்பாணத்து பள்ளிகளில் சிலவாவது ஒழுங்காக இயங்குகின்றன. அதில் தாங்கள் பழி வாங்க முயலும் வாத்திகளை போட்டாடி அதையும் கெடுக்க திரிகிறது இந்த ஒட்டுக்குழு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.