Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் தமிழர் படுகொலை: மகிந்தவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்

Featured Replies

மூதூர் தமிழர் படுகொலை: மகிந்தவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்

[வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 19:27 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தமிழர்களின் படுகொலைச் சம்பவம் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடித விவரம்:

சிறிலங்கா இராணுவத்தால் மூதூரில் கடந்த ஓகஸ்ட் 4 ஆம் நாள் 16 தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர். 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் இவர்களில் அடங்குவர். இவர்களில் 16 பேர் இளைஞர்கள்.

ஓகஸ்ட் 3 ஆம் நாள் நள்ளிரவில் மூதூரிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலகிக் கொண்டனர்.

ஓகஸ்ட் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் மூதூருக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் நுழைந்தனர். ஓகஸ்ட் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையே இந்தப் படுகொலையை சிறிலங்கா இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ளனர்.

கொல்லப்பட்ட தமிழர்கள் திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டு வந்த பிரான்சு நாட்டைச் சேர்ந்த சர்வதேச அரச சார்பற்ற அமைப்பில் பணியாற்றி வந்தனர்.

ஓகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை, 2 ஆம் நாள் புதன்கிழமை, 3 ஆம் நாள் வியாழக்கிழமை மற்றும் ஓகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை கொல்லப்பட்ட பணியாளர்களுடன் அந்நிறுவனத்தினர் ரேடியோ தொடர்பில் இருந்துள்ளனர். அதன் பின்னர் தொடர்பு கிடைக்கவில்லை. அந்தப் பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

17 பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் மூதூரிலிருந்து மாலையில் திருகோணமலைக்கு திரும்பி விடுவர். அனால் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களால் சம்பவ நாளுக்கு முன்னர் அவர்களால் திருகோணமலைக்குத் திரும்ப இயலவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட அனைவருமே நிராயுதபாணியான தமிழர்கள். சட்டப்பூர்வமாக தங்களது கடமைகளைச் செய்து வந்தனர்.

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் கடந்த சனவரி மாதம் சுட்டுக்கொல்லப்பதைப் போன்ற மற்றொரு அரச பயங்கரவாதச் செயல் இது என்பது நீங்கள் மறுக்க முடியாது.

பொதுச் சேவை நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழ் பேசும் இளைஞர்களுக்கு எதிராக பாரபட்சமான போக்கு கடைபிடிக்கப்படுவதை நீங்கள் அறியாதிருக்க முடியாது. 25 விழுக்காடாக உள்ள தமிழர்களுக்கு 10 விழுக்காடு கூட பொதுச்சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களே இத்தகைய வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது.

வடக்கு-கிழக்கில் அரச, சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் எதிராகவும் அரச படைகள் செயற்பட்டு வருகின்றன. அரச, சார்பற்ற நிறுவங்களிடமிருந்து தமிழர்கள் உதவி பெறக்கூடாது என்பதற்காகவா இந்தத் தாக்குதல்?

திருமலை மாணவர் படுகொலை மற்றும் சிவராம் தராக்கி படுகொலைச் சம்பவங்களில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும் உங்களால் உறுதியளிக்கப்பட்ட போதும் முறையான விசாரணைகளை நடத்தவில்லை.

தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளமையால் தங்களது கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்துள்ளோம். அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் அரச படைகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

http://www.eelampage.com/?cn=28133

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேப்பரும் மையும் வீணாப் போச்சு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.