Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

90களில் யாழ்ப்பாணம் செல்லும் றோ உளவாளியின் கதைதான் மெட்ராஸ் கபே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
madras_cafe_seithy-20130806.jpg

எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜான் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து பேசிய அப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார், மெட்ராஸ் கபே ஒரு ஆவணப்படம் கிடையாது, 90களில் இருந்த யாழ்ப்பாணத்தை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு இரகசிய உளவாளியின் கதை என்று கூறியுள்ளார். ஹிந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே படத்தின் முக்கிய நடிகர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதாக தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியதுடன் வழக்குகளையும் தொடுத்ததால், அந்தப் படத்திற்கு அதிக விளம்பர வெளிச்சம் கிடைத்துள்ளது.

  

திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் சில பாடல் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான றோ வில் பணிபுரிய செல்லும் ஒரு இராணுவ அதிகாரியைப் பற்றிய கதைதான் மெட்ராஸ் கபே. இரகசியப் பணிக்காக யாழ்ப்பாணம் போகும் படத்தின் கதாநாயகனின் அனுபவங்களைத்தான் திரையில் காண்பீர்கள் என்கிறார் அதன் இயக்குனர் ஷூஜித் சர்கார். நான் ஒரு படத்தை எடுத்துள்ளேன். நான் எந்த சார்பையும் எடுக்கவில்லை. இப்படி அப்படி திரும்பாமால் ஒரு சிறிய கோட்டில் நான் பயணித்துள்ளேன். எனது முதல் படம் காஷ்மீரைப் பற்றியது. இந்தியர்கள் காஷ்மீரை எப்படி பார்க்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவை எப்படி பார்க்கின்றனர் என்று நான் அதில் சொல்லியிருக்கிறேன் என்றார் ஷூஜித் சர்கார்.

 

90களில் யாழ்ப்பாணம் செல்லும் உளவாளி

 

காஷ்மீரியப் பெண் இந்திய இராணுவ அதிகாரி மீது காதல் கொள்வதையும் நான் சொல்லியிருக்கிறேன். எனது இரண்டாவது படம் விந்து தானம் குறித்தது. நான் படமெடுத்த காலத்தில் இதைப் பற்றிப் பேசவே தயக்கம் இருந்தது. இது ஏதோ ஆபாசப் படம் என்று சிலர் கூறினார். ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு பல பாராட்டுக்கள் வந்தன என்றும் கூறினார் இயக்குநர் சர்கார். இது ஒரு ஆவணப்படம் இல்லை. படத்தின் நாயகன் ஒரு இடத்திற்குப் போகிறார் அவரது பார்வையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரகசிய வேலைக்காக யாழ்ப்பாணம் செல்லும் படத்தின் நாயகன் ஜான் அப்ரஹாம் அங்கே இந்தியாவை பாதிக்கக் கூடிய ஒரு சதித் திட்டத்தை கண்டறிவதுதான் இந்தக் கதை என்றார் ஷூஜித் சர்கார். ஷூஜித் சர்கார் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே பாராட்டுக்களையும், விருதுகளையும் வென்றுள்ளன.

 

இலங்கை அரசு மீது நன்மதிப்பை உருவாக்க இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிபர் ராஜபக்ச நிதி உதவி செய்துள்ளதாகவும், இலங்கை அரசு திரைப்பட தயாரிப்புக்கு பல வசதிகளை செய்துள்ளது என்றும் தமிழ் நாட்டில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை நடிகர் ஜான் ஆபிரஹாமும் வையாகாம்-18 என்ற நிறுவனத்தினரும் இணைந்து தயாரித்துள்ளனர். வையாகாம்-18 மும்பையில் இருக்கும் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம். மெட்ராஸ் கபே படத்திற்கு ஏற்கனவை தணிக்கை வாரியத்தின் சான்று கிடைத்துவிட்டது.

 

படம் வந்த பிறகு அதைப் பார்ப்பவர்கள் கூறும் விமர்சனத்தைத் தான் ஏற்பேன் என்று கூறும் ஷூஜித் சர்கார், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் புரிந்து கொள்ள இப்படம் உதவும் என்கிறார். நீ ஒரு வங்காளி, உனக்குத் தமிழ் பிரச்சினையைப் பற்றி என்ன தெரியும் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கும் இதற்கும் சம்மந்தம் கிடையாது என்கிறார்கள். இந்தப் தமிழ் பிரச்சினை பற்றி தெரியாமல் இருக்கும் நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் இது பற்றி தெரிந்து கொள்வார்கள், என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் ஷூஜித் சர்கார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90392&category=TamilNews&language=tamil

தமிழினப் படுகொலை செய்த இந்திய ராணுவ பயங்கரவாதிகளை நல்லவர்களாக காட்டினால் இந்தப் படம் ஒரு மாபெரும் பொய்யைக் கூறுவதாக அமையும்.
 

அப்பன் ஆத்தா இல்லாத பிள்ளைய வாறவன் போறவன் எல்லாம் ஏறி மிதிக்கிறாங்க  :rolleyes:

மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது அடுத்து இன்று தமிழ் அமைப்புகளுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டினர் திரைப்படக் குழு. 

நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம் , தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் சில தமிழ் அமைப்புகள் இப்படத்தை பார்த்தனர். இயக்குனர் கௌதமன், இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆகியோரும் படத்தை பார்த்தனர். 

இப்படத்தை பார்த்த பின் இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியதாவது , 

மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்சே பணம் கொடுத்து , சோனியா காந்தி இயக்கி , இந்திய ரா உளவுத்துறை கதை வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியுள்ளார் . மேலும் காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார் செல்வமணி. 

விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும் , இந்திய அமைதிப் படையும் , சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தை காட்ட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியும் மற்ற தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. 

சீமான் கூறியதாவது , 

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணி குறித்து இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? ஆரிய காயத்தை சொரிந்து விட்டது போலத் தானே இருக்கிறது இந்தப் படம். இந்திய உளவுத்துறையின் கண்ணோட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. விடுதலை புலிகளை தீவிரவாதிகளை விடவும் கேவலமாக சித்தரித்து உள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், அமைதி படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றியும் அல்லவே காட்டியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். 

அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார் சீமான்.

 

 http://newsalai.com/details/We-wont-allow-madras-cafe-to-be-screened-says-Tamil-parties-groups.html#sthash.93UBIdIs.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.