Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரகாவியமான வீர மறவர்களினதும், பொதுமக்களினதும் தியாகங்கள் வீண்போகவில்லை என்பதை தேர்தலில் நிரூபிப்போம் - எம்.எம்.ரதன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
rathan-190813-seithy-150.jpg

எமது எதிர்கால சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான வீர மறவர்களதும் பொது மக்களதும் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இத்தேர்தலில் பகிரங்கமாக வெளிப்படுத்துவொம் என த.தே.கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கான முதலாவது அறிமுக கூட்டம் நேற்று முந்தினம் செட்டிகுளம் மெனிக்பாமில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்விற்கு மெனிக்பாம் இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் சி.நிரூபன் தலைமை தாங்கினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன்,

  

தமிழினத்தின் வரலாற்றில் மற்றுமொரு தேர்தல் திணிக்கப்பட்டுள்ளன. அதை நாம் பலமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். எமது இனத்தின் கடந்தகால தியாகங்களை மனதிவே நிறுத்தி உறுதியுடன் செயற்பட எமது மக்கள் தயாராக வேண்டும்.

 

எம்மை ஆயுத வழியில் அடக்கிய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இன்று ஜனநாயக வழியிலும் எம்மை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கின்றது. மமதையில் அதர்மத்தில் தலைவிரித்து எமது தாயகத்தில் ஆடுகிறார்கள் எதையும் செய்யலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

 

ஆனால் எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். வீரம் செறிந்த நாளில் யூலை 05 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டமை எமது இனத்தின் வரலாற்றில் முக்கியமானது ஒன்றாகும். இதன் அடிப்படையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 21ம் திகதி வாக்கு என்ற ஜனநாயக பலத்தை எமது மக்கள் உறுதியுடன் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

 

ஆண்டாண்டு காலமாய் பாட்டன் கொப்பாட்டன் முதல் நாங்கள் வாழ்ந்த சரித்திர ரீதியான வடகிழக்கிணைந்த தாயக மண் எங்களின் சொந்த மண் நாங்கள் ஆளப்பிறந்தவர்கள், வாழப்பிறந்தவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர மறவர்களையும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் போரிலே காவு கொடுத்த நாம் யாருக்கம் கைகட்டி தலை குனிந்து நிற்கவேண்டிய தேவையில்லை.

 

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று நாங்கள் தலைநிமிர்ந்து நிற்போம்.

 

2009ம் ஆண்டிற்கு முன்னர் எந்த இலட்சிய வேட்கையில் நாம் பயணித்தோமோ, அதே நிலையில்த்தான் இன்றும் எமது மண் மீட்பு ஜனநாயகப் போரில் ஜனநாயகப் போரளியாக எமது தாயகத்தில் வாழுகிறோம். இதன் அடிப்படையில் உள்ளக சுய நிர்ணய நிலைப்பாட்டில் எம்மை நாமே ஆழக்கூடிய அத்தனை தகுதிகளும் எமக்குண்டு என்பதை புரிந்து கொண்டு எமது மக்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் கரிபியேல் அந்தோணிப்பிள்ளை மற்றும் ஏனைய வேட்பாளர்கள் உரையாற்றினர்.

 

rathan-190813-seithy-001.jpg

 

 

rathan-190813-seithy-002.jpg

 

 

rathan-190813-seithy-003.jpg

 

 

rathan-190813-seithy-004.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90546&category=TamilNews&language=tamil

தேர்தலில் மட்டுமல்ல, தேர்தலின் பின்னரும் பொறுப்புடன் நடந்து நிரூபிக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.