Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விகளால் ஒரு வேள்வி... - யாதவன் பதில்கள்

Featured Replies

Kelvi%20pathil%20logo.jpg

கேள்வி:- போனவாரம் இந்தியா தனது முதலாவது விமானந்தாங்கி கப்பலை கொச்சி துறைமுகத்தில் வெள்ளோட்டம் விட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே. இதன் பின்னணி ஏதாவது...?

தர்மா, நோர்வே

பதில்:- இதன் பதிலுக்கு போவதற்கு முன்னர், இந்த செய்தி சம்பந்தமாக ‘ரிவிட்டரில்’ வந்த ஒரு வசனம் இதன் பின்ணணியை அழகாக காட்டும் என்று நினைக்கிறேன்.

‘கப்பல் செஞ்சோம்னு சொல்லுங்க... அது என்ன போர்க்கப்பல்..? ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை எடுத்து தொடைச்சு ‘செட்ல’ நிறுத்தப்போறீங்களா..’ என்று அந்த ‘ரிவிட்டரில்’ எழுதி இருந்தது.

ராமேஸ்வரத்துக்கு மேலுள்ள கடலில் தினமும் சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் கொண்டு செல்லப்படுவதை தடுக்கமுடியாத இந்தியக் கடற்படைக்கு விமானந்தாங்கி கப்பல் எதற்கு..?

இந்தியாவில் எவ்வளவு பெரீய்ய பெரீய்ய திட்டங்கள் செயற்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அதில் அரசியல்வாதிகளின் ஊழல் புகுந்துவிளையாடியிருக்கும். போர்பஸ் பீரங்கியில் ராஜிவ் கமிசன் வாங்கியதில் இருந்து இதே நிலைதான். இந்த போர்க்கப்பல் கட்டியதில் எவ்வளவு ஊழலோ...?

மேலும் இதற்கு பின்னால் ஏதும் உடனடி இராணுவநலன் அல்லது இராணுவ பலசமன் இருக்கும் என்று நினைக்க தோன்றவில்லை. இந்தியாவின் மையமான பொருளாதார உயிரான மும்பையில் வந்து புகுந்து குருவி சுடுவதுபோல சுட்டவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்த பின்பும் எதும் நடவடிக்கை எடுக்க வக்கற்ற நாடு அது. இப்போ இந்திய எல்லையில் இந்திய இராணுசிப்பாயின் தலையை வெட்டி எடுத்து போயிருக்கிறார்கள். உள்நுழைந்து தாக்கி ஐந்து இந்திய இராணுவத்தை கொன்று இருக்கிறார்கள். அதற்கும் ஒரு கண்டனத்துடன் ஒதுங்கி கொள்ளும் நாட்டுக்கு விமானம் தாங்கி கப்பல் சும்மா சொசுகு போக்குவரத்துக்கு மட்டுமே.

அதைவிட முக்கியம் இந்த கப்பல் 2018ல்தான் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட போகிறது. இந்த வாரத்து ‘ஆனந்தவிகடனில்’ வெளிவந்திருக்கும் கருத்துபடமே அழகாக ஆழமாக இந்தியாவின் இன்றைய நிலையை சொல்லி நிற்கிறது.

p9.jpg

 

கேள்வி:- புலம்பெயர் தேசங்களில் விளையாட்டுகள், கோவில்கள் எல்லாவற்றினுள்ளும் சிறீலங்காக்கு எதிரான நோட்டீசுகளும், கையெழுத்துகளும் கொடுக்கிறார்கள். இப்பிடி எல்லாவற்றிலும் அரசியலை கொண்டுவர்றது ஏன்...?

பார்த்தி, ஜேர்மனி

பதில்:- முதலில் ஒன்றை தெளிவாக விளங்கி கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். அரசியல் என்ற பதம் என்ன அர்த்தத்தில் எம் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றது என்பதிலிருந்தே இதற்கான விடையையும் புரிந்துகொள்ளமுடியும்.

நீதிமன்றங்களில் கறுப்பு அங்கி அணிந்து விவாதித்து உருட்டிபிரட்டி சட்டநுணுக்கங்களின் தேவையான சரத்துகளை மட்டும் எடுத்து பேசி தொழில்செய்தவர்களால் மாலை நேரங்களில் மின்விளக்குகளின் ஜொலிப்பில் முழங்கப்பட்ட வீரபிரதாபங்களையும் தேர்தல்கால வாக்குறுதிகள், தேர்தல்கால போர்ப்பிரகடனங்கள் என்பனவற்றை கேட்டுகேட்டு (இப்போதும்தான்) வளர்ந்த எமக்கு அரசியல் என்றவுடன் அவைதான் நினைவுக்குவரும்.

ஆனால் அரசியல் என்றால் உண்மையிலே எமது தினசரி வாழ்வின் ஒவ்வொரு செக்கனுக்குள்ளும் ஒவ்வொரு அசைவினுள்ளும் இருக்கின்றது. நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியலே எமது அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானிக்கிறது. உலகப் பெரு அறிஞன் அரிஸ்ரோற்றில் இந்த அரசியல் என்பதை பற்றி ‘மனிதன் இயற்கையாகவே ஒரு அரசியல் விலங்கு’ Man is by nature a political animal.” Aristotle என்றே வரைவிலக்கணம் செய்கிறார்.

அது கிடக்கட்டும் இப்போ கேள்விக்கு வருவோம்...

நாம் யார். எமது அடையாளம் எது...? நாம் ஈழத் தமிழ்த் தேசிய இனம். எமது அடையாளம் நாம் தமிழீழ தேசத்தவர். இந்த இரண்டையும் மறுத்து எமது உரிமைகளை பறித்து எமது மக்களை இனப்படுகொலை செய்த ஒரு பேரின அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் என்பது வெறும் மேடைகளிலும் அரசியல் கருத்தரங்குகளிலும் அரசியல் கட்டுரைகளிலும் மட்டுமேதான் வெளிப்படுத்தப்பட வேண்டுமா..?

எமது வாழ்வு முழுதையும் அபகரித்து நிற்கிறது சிங்களப் பேரினவாதம். அதில் விளையாட்டில் மட்டும் விதிவிலக்கு அளித்து சிங்களம் விலகி நிற்கிறதா என்ன...? அல்லது தமிழர்களின் மத வழிபாட்டுதலங்கள் என்பதால் அதனை சுற்றி புனிதவலய அமைத்து வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறதா சிங்களம்..? இல்லையே... பாடசாலைகள் மீதே குண்டுகள் வீசி கொலைபுரியும் ஒரு இனப்படுகொலை அரசு வெறுமனே விளையாட்டை விளையாட்டாக எடுக்கிறா..? சிங்களத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் அது எங்காகிலும் தொடரத்தான் வேண்டும். நிலவுக்கு ஒரு தமிழன் செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு சென்றும் சிங்களதேசத்தின் இனப்படுகொலையை தோலுரித்துகாட்டும் பதாகையை தொங்க விட்டு வரவேண்டும்.

அடிமைப்பட்டுள்ள நாம்தான் ‘விளையாட்டை விளையாட்டாக எடுக்கவேண்டும்’ என்ற பொன்மொழிகளை நமக்குள்ளே அடிக்கடி தூவி மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த சிங்களவனாவது இதனை சொல்கிறானா..? அடிமைப்பட்ட ஒரு இனம் தனக்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் தனது விடுதலைக்கான வழிகளை அமைக்க பயன்படுத்தவேண்டும். அது கோவில் என்றாலும் சரி, மைதானம் என்றாலும் சரி...

நன்றி: ஈழமுரசு

குறிப்பு: தமிழீழ வரலாறு, போராட்ட சரிதம், நடப்பு அரசியல், சர்வதேச நகர்வு, கலை - இலக்கியம் என்று எதனைப் பற்றியும் கேட்கலாம்.

கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:

யாதவன் : yathavanyaathu@gmail.com / ஈழமுரசு : eelamurazu@gmail.com

http://www.sankathi24.com/news/32452/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்
அடிமைப்பட்டுள்ள நாம்தான் ‘விளையாட்டை விளையாட்டாக எடுக்கவேண்டும்’ என்ற பொன்மொழிகளை நமக்குள்ளே அடிக்கடி தூவி மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த சிங்களவனாவது இதனை சொல்கிறானா..? அடிமைப்பட்ட ஒரு இனம் தனக்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் தனது விடுதலைக்கான வழிகளை அமைக்க பயன்படுத்தவேண்டும். அது கோவில் என்றாலும் சரி, மைதானம் என்றாலும் சரி...
இது நல்லாய் இருக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.