Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிப்புக்குரிய அனைத்துலக தமிழ் ஊடகங்களுக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

இன்று நான்காம் ஈழப்போரின் விளிம்பில் தமிழீழம் மிளிர்ந்து நிற்க்கின்றது. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி, இன்று தமிழர் தாயகம் எங்கும், போர் மேகம் வியாபித்துள்ளது. பல்லாயிரம் மக்கள் தங்கள் சொந்த மண்னை விட்டு சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது துயரங்களுக்கு அப்பால், சிங்கள ஆக்கிரமிப்பு படைகளால், திட்டமிட்டு நடாத்தப்படும், விமானக்குண்டு தாக்குதல்கள், எறிகணை வீச்சு என்பவற்றால் பலர் உயிர் களை இழந்துள்ளனர். சாவுக்கும் வாழ்வுக்கு நடுவே எமது மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளின்றி அவலப்படுகின்றனர். தேசத்தின் துயரினை உலகத்தமிழ் உறவுகளுக்கு சிறந்த முறையில் சொல்ல வேண்டிய ஊடகங்கள், போட்டியில் ஜெயிப்பதற்காய், புனைவு கதைகாளால் நிரம்பி வழிகின்றது. ஊடகம் என்பதற்க்குள் நிலை நிறுத்த முடியாத மிகவும் கேவலமான நடவடிக்கைகள் தொடர்கின்றது. இந்த வேளையில் உலகத்தமிழ் ஊடகத்தினராகிய நாம் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒன்று தான்,

தங்கள் உறவுகளை, தாயகத்தில் விட்டு, இன்றைய போர்ச்சூழலினால் தவித்திருக்கும் எமது புகலிட தமிழ் மக்களது உணர்வுகளை சீண்டும் வகையில் பல இணையத்தளங்கள், இதர இலத்திரனியல் ஊடகங்களில் உறுதிப்டுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, தயாகத்தில் தமக்கென்றோர் செய்தியாளர்கள் இல்லாமலே செய்திகளை புனையும் துர்பாக்கிய நிலையில் தமிழ் ஊடகத்துறை நிற்க்கிறது என்ற, வேதனை மிகுந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் உலகத்தமிழ் ஊடகம் வெட்கப்படுகின்றது.

உயிரை கொடுத்து போராடும் போராளிகளது தியாங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும், இந்த இளையவர்களது குரல்களுக்கு மதிப்பளித்து உங்களை மாற்றி கொள்ளுங்கள், முடிந்தளவு உறுதிப்படுத்திய செய்திகளை வெளியிடுங்கள். தனி நபர்கள் மற்றும், வாய் வழி செய்திகளை நம்பி அவற்றை இணையங்களில், ஊடகங்களில் பிரசுரிப்பதால், ஏற்படும் மக்களின் மன அழுத்தத்தை உணர்வீர்கள் என நாம் நம்புகின்றோம். தங்கள் ஊடகத்தின் நம்பிக்கையை நீங்களே நிலைநாட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இது எமக்கானதோ, யாரையும் குறிப்புணர்த்தியோ எழுதப்பட்டல்ல, எந்த ஊடக நிறுவனம் செய்திகளை திரிவு படுத்தினாலும், அந்த பாதிப்பை அந்தந்த, ஊடகங்களே அனுபவிக்கும். எனவே சிந்தித்து செயற்ப்படுங்கள்.

-ஆசிரியர் குழு -

http://www.worldtamilpress.com/index.php?o...d=592&Itemid=35

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பற்றி எனது கருத்தை சொல்ல விரும்புகின்றேன், நேற்று அதிகாலை 2 மணி எனது தொலை பேசி மணி ஒலித்தது, உடனே பதிலளித்த போது அது கொழும்பில் கல்விகற்று வரும் எனது நண்பர் அழைத்திருந்தான் . எமக்கு யாழ் நகரில் இரு நண்பர்கள் இருக்கின்றனர். அவன் அழைத்து " நான் _____________________ எனும் இணைய செய்தி பார்த்தேன் அதில் யாழ்ப்பாணத்தில், இந்த இடத்தில் சண்டையாம், மக்கள் இடம்பெயரினமாம், தொலை பேசி துண்டிப்பாம் என்று சொன்னான், நான் உடனே நீ அழைத்து பார்த்தியா? என்று கேட்டேன் ஆம் ஆனால் இணைப்பு கிடைக்க வில்லை என்றான், அவனது கால கஸ்டத்துக்கு அந்த நெரம் யாழ் இணைப்புக்கள், பிஸியாக இருந்திருக்கிறது, அதாவது அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால் புகலிட மக்கள் தங்கள் உறவுகளுக்கு அழைத்ததனால், ஒரே நேரத்தில் பல்லாயிரம் தொலை பேசி அழைப்புக்களை உள்வாங்க முடியாமல் தொலைபேசி வழங்கிகள், பிஸி என்று சொல்லியிருக்கிறது. நானும் பயந்து போய், யாழுக்கு அழைந்தேன், எனக்கு இணைப்பு கிடைத்தது. அங்கு எந்த பிரச்சினையும் இல்ல, அனால் பதற்றமாக இருக்கிறது என்று எனது நண்பன் சொன்னான்.

எனவே இவ்வாறான, சம்பவங்களை தவிர்க, ஊடகங்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என் வேண்டுகின்றேன்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் துரோக ஒட்டுக்கும்பலுக்குள் பிளவா? புதிய இணையத்தளம் ஒன்று ஆனால் இவர்கள் யார் என்று தான் புரியவில்லை. ஆரம்பத்தில் ரி.பி.சி வந்த போது இப்டித்தான் வந்தர்கள்.

www.thenee.ca

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.