Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவனீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கிறது இலங்கை அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நவனீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கிறது இலங்கை அரசு!

download.jpg

இறுதிப்போர் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் போரின் வடுக்கள்  இவ்வளவு என்றால் அந்தபோரின் தாக்கம் எப்படியானதாக  இருந்திருக்கும்? என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை எண்ணத்தோன்றாத வண்ணம் போர்த் தடயங்களை  அவசர அவசரமாக அழிக்கின்றது இலங்கை அரசு .

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின்  வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தினர் போன்று உடை யணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.

பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.

இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக் கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும் பகுதி திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறு கின்றனர். “”கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் போன்று தோற்றமளித்தவர்களே ஈடுபட்டனர்” என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம், சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

இவைவெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர். இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வருகை தரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 27 ஆம் திகதி வடக்குக்கான தனது பயணத்தை ஆரம்பிப்பார். முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

தனது பயணக் காலத்தில் பெரும் பகுதியை அவர் வடக்கிலேயே செலவிடுவார் என்று அரசு கூறியிருக்கிறது.

 

http://www.ampalam.com/2013/08/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/

நவநீதம்பிள்ளை இலங்கையை வந்தடைந்தார்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை 9.50 மணியளவில்இ ஜேர்மனியிலிருந்து யுஎல்558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். எமது விமான நிலைய செய்தியாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இவருடன் நான்கு பிரதிநிதிகள் வருகை தந்ததாகவும் எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 7 நாட்கள் இங்கு தங்கியிருப்பதோடு வடக்குக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்இ யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம்இ சமகால அரசியல் நிலைமைகள்இ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர்இ அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கையில் நிலவும் மனிதவுரிமைகளின் நிலைமைகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட அவலங்கள் பற்றி அவர் ஆராய்வதுடன்இ சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை பெறவுள்ளார். அத்துடன்இ தமது இந்த பயணத்தின் பின்னர் அவர் பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்இ யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீளக் குடியமர்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் அவதானிக்கவுள்ளார். http://www.lankawin.com/show-RUmryIRZMVgx1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.