Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குள்ள 2 தெரிவுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குள்ள 2 தெரிவுகள்! - (வசிஸ்டர்)

[13 - August - 2006] [Font Size - A - A - A]

* இந்தியாவும் நமது பிரச்சினையும்

சமீபத்தில் இந்தியா 1962இல் இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தை தொடர்ந்து மூடப்பட்ட பட்டுப் பாதையின் கேந்திரமான நாதுலாய் கணவாயை திறந்து வைத்திருக்கின்றது. கடந்த 44 ஆண்டுகளாக திறக்கப்படாதிருந்த நாதுலாய் கணவாயை இந்தியா தற்போது திறந்துவைக்க முன்வந்ததானது, சீன - இந்திய நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்கும் நோக்கிலானதென்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 1962இல், இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் நவீன அரசியல் வரலாற்றில் மேற்படி தோல்வியானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர தோல்வியாகவும் புலனாய்வுப் பின்னடைவாகவும் கருதப்படுகின்றது. அதன் பின்னர் இந்தியாவின் அரசியல் வரலாற்றில் அடைந்த மிகமோசமானதும் மிகவும் அவமானகரமானதுமான தோல்வியாக இந்திய புலிகள் யுத்தத்தில் இந்தியா எதிர்கொள்ள நேர்ந்த தோல்வியென்றே இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்திய கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான நேரடித் தலையீடானது, ஒரு முக்கியமான இராஜதந்திர புலனாய்வுப் பின்னடைவாகவே இன்றுவரை கருதப்படுகின்றது. உண்மையும் அதுதான். தனது கடந்த கால அனுபவங்களில் இருந்தே தற்போது இலங்கை குறித்த தனது அரசியல் காய்நகர்த்தல்களை இந்தியா மிகவும் நிதானமாக கையாண்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்திய - விடுதலைப்புலிகள் மோதல் இரண்டு ஆண்டுகள்வரை நீடித்தது. 1990 மார்ச் மாதம் இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து முற்றாக விலகிச் செல்லும் வரையான காலப்பகுதியில் 1500 இந்தியப் படையினர் அந்த யுத்தத்தில் இறக்க நேர்ந்தது, 5,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈழத்தமிழர்களின் விருப்பிற்கு மாறாக சிறிலங்கா அரசுடன் இந்தியா செய்துகொண்ட 1987 இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் விளைவாகவே இந்தியா அப்படியானதொரு அவமானகரமான தோல்வியையும் ராஜதந்திர பின்டைவையும் சந்திக்க நேர்ந்தது. இந்தியா தனது மேலாதிக்க மனோபாவத்தின் அடிப்படையில் மேற்கொண்ட முடிவின் விளைவாகவே அத்தகையதொரு அவமானகரமான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இப்பொழுது நாம் கவனம்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், சமீபகாலமாக அதிகரித்துவரும் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா மீண்டும் வலுவான தலையீட்டினை செய்ய வேண்டுமென்ற வாதங்களின் மத்தியில், இந்தியா ஒரு புதிய நட்புறவின் அடையாளமாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து தனது நிலைப்பாடுகளில் மாற்றங்களை இனங்காட்டக் கூடிய வாய்பு இருக்கின்றதா? தனது கடந்தகால தோல்வியை மறந்து நல்லுறவிற்கான அத்திவாரமாக நாதுலாய் கணவாயை திறந்து வைத்தது போல் ஈழத்தமிழர் தொடர்பான தனது இறுக்கமான கொள்கை வகுப்பு, கதவை திறக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?

சமீபகாலமாக இலங்கை இனமுரண்பாடு தொடர்பல் இந்தியா வெளிப்படுத்திவரும் கருத்துக்களானது, அதன் கடந்த கால அனுபவத்தினடிப்படையிலானவை என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலத்தில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு கைகளைச் சுட்டுக் கொண்ட தோல்வி அனுபவத்திலிருந்தே, தனது இலங்கை தொடர்பான இன்றைய நிலைப்பாடுகளை தீர்மானிக்கின்றது. ஆனால், நிச்சயமாக இன்றைய நிலையில் இந்தியாவின் இலங்கை தொடர்பான குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபலாசைகள் குறித்த இந்தியாவின் கொள்கை மாற்றங்களால் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதில் நாம் குழம்புவதற்கு ஏதுமில்லை. இன்றைய சூழலில் இலங்கைப் பிரச்சினையில் நேரடியாக தலையீடற்ற ஆனால், தனது கண்காணிப்பை மீறிச் செல்லாத ஒரு அரசியல் அணுகுமுறையையே இந்தியா கடைப்பிடித்து வருகின்றது. தற்போது நடைமுறையில் கேள்விக்குள்ளாகியிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும் என்பதிலும் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலுமே இந்தியா கவனம் கொள்கின்றது. இந்தியா, இலங்கையில் ஒரு மோதலற்ற நிலைமை நீடிக்க வேண்டுமென்பதில் அக்கறைகொள்வதானது, தனது பிராந்திய நலன்களை கருத்தில்கொண்டு எடுக்கும் முடிவாகும். தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவான நிலையில் மோதல்கள் இடம்பெறுவதானது, தனது பிராந்திய நலன்களுக்கு பாதகமாக, அந்நிய சக்திகள் குறுக்கிடுவதற்கு காரணமாக அமைந்துவிடலாம் என்ற அச்சத்திலேயே இந்தியா இலங்கையில் போர்நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் தொடர வேண்டுமென்பதில் கவனம் கொள்கின்றது. நேபாளத்தில் மாவோசிஸ்ட் அமைப்பிற்கும் அரசிற்கும் இடையிலான போர்நிறுத்தம், நாகா விடுதலை இயக்கத்தினருடனான போர்நிறுத்த கால நீடிப்பு, காஷ்மீரில் முரண் தணிப்பதற்கான செயற்பாடுகள் போன்றவற்றில் இந்தியா அக்கறை செலுத்திவருவதுடன் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் செயலாற்றி வருகின்றது. இந்தப் பின்னணியில் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் மீண்டும் ஓர் பெரும் போர் மூழுமாயின் அதனை சாட்டாகக் கொண்டு சீணி, பாகிஸ்தான் போன்ற தனது வரலாற்று எதிர்நிலை சக்திகள் இலங்கையில் பலமான நிலையில் காலூன்ற முற்படலாம் என இந்தியா கணிப்படுகின்றது. அதேவேளை தற்போது இலங்கையில் நிலவும் இரு தரப்பு இராணுவ வலுச்சமநிலையில் மாற்றம் வருவதையும் இந்தியா விரும்பவில்லை இந்தியாவைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகளின் இராணுவ ஆற்றலை துல்லியமாகவே மதிப்பட்டு வைத்திருக்கிறது. மீண்டும் இலங்கையில் போர் வெடிக்குமானால் போரில் விடுதலைப்புலிகளின் கையே ஓங்குமெனவும் இந்தியா மிகவும் சரியாகவே மதிப்பிட்டிருக்கக் கூடும். எனவே இலங்கையில் விடுதலைப்புலிகள் மீண்டும் போர் நிலையில் மேலோங்குவதானது இந்தியாவிற்குள் இடம்பெற்றுவரும் விடுதலைப் போராட்டங்களில் மட்டுமல்லாது தென்கிழக்காசிய மட்டத்திலும் அதன் விளைவுகள் ஒலிக்கக் கூடுமென இந்தியா அச்சப்படவும் கூடும். தேசங்களின் சிறைக் கூடமாக விளங்கும் இந்தியா தனித்துவமான தேசங்களின் தகர்வு வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்ற வரலாற்று நியதி குறித்து அச்சப்படுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை எனவேதான் இந்தியா இலங்கையில் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் பிரச்சினையோ சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் சிறு அளவிலான அதிகாரப்பகிர்விற்கும் தயாரற்ற நிலைமையையே தொடர்ந்தும் ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட நடைமுறையாகக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்த சமாதான முன்னெடுப்பு முயற்சிகள் இதனை மிகவும் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிற்கு உள்ள சிக்கலான பக்கங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாமென்றே நான் நினைக்கின்றேன் ஏனெனில் தனது கடந்த கால அனுபவங்களிலிருந்து சிங்கள தேசியவாத தரப்பனர் குறித்து இந்தியாவிடம் தெளிவான மதிப்பீடுகள் இருக்கின்றது ஆனால் அதேவேளை ஈழத்தமிழர் அரசியல் குறித்தும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தொடர்பான தனது கடந்த கால நிலைப்பாட்டில் நெகிழ்வற்ற நிலைப்பாட்டை இந்தியா தெடர்ந்தும் பேணிக்கொள்ள முற்படுவதால் ஈழத்தமிழர் அபிலாசைகளுக்கு எதிரான பாத்திரம் ஒன்றையே ஆற்றிவருகின்றது.

இன்றைய சூழலில் இலங்கைப் பரச்சினை தொடர்பாக இந்தியாவிற்கு உள்ள தெரிவு இரண்டுதான் ஒன்று வலுவான நிலையில் இலங்கை பிரச்சனையில் தலையீடு செய்தல் அது சாத்தியப்படாதுவிடின் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான சமாதான முன்னெடுப்புகளை ஆதரிக்கும் தற்போதைய நிலைப்பாட்டையே தொடர்ந்தும் பேணுதல். முதலாவது தெரிவை இந்தியா கைக் கொள்ளுமாயின் விடுதலைப்புலிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கும் இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய பின்னரேயே இந்தியா இலங்கை பிரச்சினையில் ஒரு வலுவான நிலையில் தலையீடு செய்வதற்கான தகுதியைப் பெற முடியும். ஆனால் அதற்கான எந்தவிதமான நெகிழ்வுப் போக்கையும் இந்தியா இதுவரை வெளிக்காட்டவில்லை. சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதுவராக இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கென தமிழகம் சென்றிருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணின் கருத்துகள் இதனை துலாம்பரமாக்கியுள்ளன.

இந்த சந்திப்பின்போது நாராயணன் விடுதலைப்புலிகளை தாம் தொடர்ந்தும் ஆபத்தானதொரு அமைப்பாகவே பார்ப்பதாகவும் அந்த வகையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நியாயமானதென்றும் வாதிட்டிருக்கின்றார். தவிர சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பிரச்சினையையும் ஈழத்தமிழர்களின் பரச்சினையையும் வேறாக நோக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். இந்தியா தனது கடந்த கால நிலைப்பாட்டிலிருந்து பெருமளவிற்கு விலகவில்லை என்பதையே நாராயணனின் கூற்றுக்கள் சுட்டுகின்றன. இந்த வறட்டுத்தனமான நிலைப்பாட்டிலிருந்து இந்தியா விலகாதவரைக்கும் இந்தியாவால் இலங்கைப் பிரச்சினையில் எந்தவொரு வலுவான தலையீட்டினையும் உருப்படியாக செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும். எனவே தற்போது இந்தியாவிற்கு உள்ள ஒரே தெரிவு தற்போது கடைப்படிக்கும் கைகளை சுட்டுக் கொள்ளாத தனது அரசியல் அணுகுமுறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதுதான். இந்தியா இலங்கை விவகாரத்தில் வலுவான தலையீட்டினை செய்வதற்கான முன்நிபந்தனையே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நியாயங்களை புரிந்துகொள்வதுதான் ஆனால் இந்தியா ஒரு பெரியண்ணன் மனோநிலையில் இருக்கும்வரை அது சாத்தியப்படப்போவதில்லை. உண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பான தனது இறுக்கமான நிலைப்பாட்டை இந்தியா தளர்த்திக் கொள்வதே இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பலவற்றை தடுக்கக்கூடியது என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்களால் சரியாக மதிப்பட முடியாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது வரலாற்று ரீதியாக திராவிட அரசியல் வெறுப்புக் கொண்ட பார்ப்பணியர்கள் கையில் இந்தியாவின் கொள்கை வகுப்பு இருக்கும் வரையில் இவைகளெல்லாம் சாத்தியப்படக் கூடியவையாகவும் தெரியவில்லை. ஆனால் இந்தியாவின் நலன்களில் நின்று நோக்கும் போது இந்தியாவிற்கு இலங்கையில் ஒரு போர் தணிப்பு தேவைப்படலாம். வெற்று வார்த்தைகளில் காலத்தை ஓட்டிச் செல்லும் ஒரு சூழலும் தேவைப்படலாம். ஆனால் ஈழத்தமிழர் தேசத்தின் பிரச்சினையோ வேறு. இன்றைய சூழலில் எந்த நம்பக்கையின் அடிப்படையில் காலத்தை நகர்த்திச் செல்வதென்பதுதான் தமிழர் தேசத்தின் பிரச்சினையாகும். இலங்கைப் பிரச்சினையில் குறுக்கீடு செய்துவரும் சகல அந்நிய சக்திகளுக்கும் ஒவ்வொருவிதமான நலன்கள் உண்டு அவர்களது நலன்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதல்ல ஈழத்தமிழர் போராட்டத்தின் அடிப்படை இதனை அந்நிய சக்திகள் புரிந்துகொள்ளப் போவதில்லை எனவே தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்வதானது தமிழர்களின் இராணுவ பலம் கொள்கைப்பற்று மக்களின் கூட்டுணர்வு இவைகளிலேயே தங்கியிருக்கின்றது. இது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றும் கூட.

http://www.thinakkural.com/news/2006/8/13/...es_page8364.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.