Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவது தமிழருக்கு சமாதி கட்டும் வேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவது

ஈழத் தமிழருக்கு சமாதி கட்டும் வேலை

`

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அவசர போரா யுத உதவிகளை இந்தியாவிடம் கோரியிருக்கின்றதாம் இலங்கை.

இந்தியா வழங்கும் போராயுதங்கள் புலிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும்; தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படமாட்டா என்ற உறுதிமொழியுடன் தான் தனக்குத் தேவையான போராயுதங்களின் பட்டியல் ஒன்றைப் புதுடில்லிக்குச் சமர்ப்பித்திருக்கின்றது இலங்கை.

இப்போது புதுடில்லியின் பதிலுக்குக் கொழும்பு காத்தி ருக்கின்றது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் புலிகள் இயக்கத்தைத் தடை செய்த மேற்குலகம், அதற்கு மேல் புலிகளுக்கு எதிராக எதனையும் செய்யப் போவதில்லை என்ற விசனத்தில் குழம்பிப் போயிருக்கிறது. கொழும்பு நிர்வாகம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் மேற்குலகிலிருந்து விடுதலைப் புலிகளுக் குக் கிடைக்கும் உதவிகளைக் கூடத் தடுத்து நிறுத்துவதில் அதிக சிரத்தை காட்டாத அந்த நாடுகள், தமக்கு ஆயுத மற் றும் இராணுவ உதவிகளை வழங்குவதிலும் மெத்தனப் போக்கிலேயே இருக்கின்றன என்று வெதும்புகின்றதாம் இலங்கை அரசு. இதனால்தான் இந்தியா பக்கம் அதன் கவனமும், நாட்டமும், சிரத்தையும் அதிகம் திரும்பியிருக்கின் றன என்றும் கூறப்படுகின்றது.

ஆனாலும், இலங்கை அரச படைகளின் இராணுவ நட வடிக்கை களினால் அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக் கையில் கொல்லப்படுவதும், உயிர், உடல், உடைமைச் சேதங்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பையும், சீற்றத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத் தும் விவகாரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அத்தகைய நிலையில் இலங்கை அரசுப் படைகளுக்கு அவை கோரும் ஆயுதங்களை வழங்க புதுடில்லி நிர்வாகம் முன்வருமானால் அது தமிழகம் உட்பட இந்தியாவில் பல பகுதிகளிலும் பெரும் அரசியல் கிளர்ச்சிகளையும், மக்கள் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்பதும் இலங்கை அர சுக்கு நன்கு தெரியும்.

அதனால்தான், இந்தியா வழங்கும் ஆயுதங்கள் அப்பா வித் தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட மாட்டா என்ற உத்தரவாதத்தை அளித்து அந்த நிபந்தனை யின் கீழ் அவற்றை வழங்குங்கள் என்று கையேந்துகின்றது இலங்கை.

இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் ஈழத் தமிழ் மக்களையும், புலிகளையும் வேறுபடுத்தி அணுகு வோம் என்ற சாரப்பட கொழும்பு அரசு கூறினாலும், படை நடவடிக்கைகள், அரசியல் செயற்பாடுகள் என்று வரும் போது ஒவ்வொரு தமிழ்ப் பேசும் மகனையும் புலியாகவே பார்க்கிறது இலங்கை அரசு என்பதே மெய்மை நிலை.

இப்போது திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மீது அரச படைகள் ஆரம்பித்திருக்கும் படை நடவடிக்கைகளும், அதையொட்டி தமிழர் பிரதேசங்கள் மீது கண்மூடித்தனமாக பெரும் மூர்க் கத்துடன் முன்னெடுக்கப்படும் விமான, ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கை அரசு, தனது நாட்டு மக் கள் என்று கூறும் தமிழர்களை எவ்வாறு கையாளுகின்றது என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு நல்ல சான்று; உதாரணம்.

ஹிஸ்புல்லா இயக்கத்தினரை அழிக்கின்றோம் என்ற பெயரில் தென் லெபனான் மக்களின் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சு மற்றும் ஏவுகணைத் தாக் குதல்களை நடத்தும் இஸ்ரேலுக்கும், புலிகளை ஒடுக்கு கின்றோம் என்ற பெயரில் மூர்க்கத்தோடு வாகரை, கதிரவெளி, திருகோணமலையின் வெருகல், ஈச்சிலம் பற்று, மூதூர் கிழக்கு, சேனையூர், சம்பூர், கட்டைபறிச்சான், நல்லூர், இலங்கைத் துறை முகத்துவாரம், புன்னையடி, சறுக்கல்முனை, பூநகர் போன்ற இடங்கள் மீது கணக்கின்றி கண்மூடித்தனமாக வான்வழி மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களை நடத்தும் இலங்கையும் இவ்விடயங்களில் வேறுபட்டவையல்ல.

இந்நிலையில் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அதற்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவதும், இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆயுத உதவி வழங்குவது போன்றதே.

ஒரு பொறுப்புள்ள நாடு என்ற வகையில் (ஸ்டடெ Fஅcடொர்), இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளைப் பேணும் தனது பொறுப்பிலும், கடமையிலும் அதிக தவறுகளை இழைத்து வருகின்றது என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் மேலோங்கி வரும் இச்சமயத்தில், இலங்கைக்கு ஆயுத ரீதியில் உதவும் விவகாரத்தில் புதுடில்லி மிகக் கவனத் துடனும், அதிக அவதானத்துடனும் செயற்பட வேண்டிய கடமையுடையதாகின்றது.

எமது பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவினதும் மற்றும் சர்வதேச சமூகத்தினதும் கருத்துக்களையும், ஆலோ சனைகளையும் புறக்கணித்து, உதாசீனப்படுத்தி, அமைதி முயற்சிகளை அடியோடு புறந்தள்ளி, தீவிர போர்முனைப்பு டன் காகளை நகர்த்துகின்றது இலங்கை அரசு என்பது இப் போது கண்கூடாகியுள்ளது.

ஆகவே, இச்சமயத்தில்

இலங்கைக்கு அது கோரும் ஆயுத உதவிகளை இந்தியா வழங்கு வது, அமைதி முயற்சிகளை உதாசீனப்படுத்தி போர் முனைப்பில் தீவிரம் காட்டும் இலங்கையை மேலும் அத் திசையில் தூண்டி விடும் செயலாகவே அமையும். வீடெ ரிக்கும் செயலுக்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கும் உதவி யாகவே அது அர்த்தப்படுத்தப்படும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு எதிரான பாதகச் செயலாகவே அத்தகைய ஆயுத உதவி அமையும். மொத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு சமாதி கட்டும் வேலை யாகவே அது முடியும்.

எனவே, அவ்வாறான வரலாற்றுத் தவறு எதையும் புதுடில்லி நிர்வாகம் இழைக்காது என்றும், அவ்வாறு புதுடில்லி தவறிழைக்கத் தமிழகம் அனுமதிக்காது என்றும் ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.