Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானை தடவிய குருடர் கதையும் நவநீதம்பிள்ளையின் விஜயமும் - பனங்காட்டான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navanethem_pillay-seithy-20101008-150.jp

போர்க்காலத்தில் வன்னியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போனதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வெளியிட்ட ஆவணம் நவநீதம் பிள்ளையிடம் இருக்கிறது என்பதை கோதபாய ராஜபக்ச மறந்துவிடக் கூடாது. அநேகமான இதிகாச - புராண நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு காட்சி தவறாது இடம்பெறும். அங்கு அரசனாக வருபவர் முதல் காட்சியில் வரும்போது, பல அடைமொழிகளுடன் அவர் வரவேற்கப்படுவார். ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட, வீராதிவீர வீரமார்த்தாண்ட, சூராதிசூர சூரமார்த்தாண்ட மாமன்னர் வருகிறார்..வருகிறார்..என்ற வாயிலோன் முழக்கமிட, மன்னர் அங்கு எழுந்தருளுவார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணமும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆயத்தமான இந்த இலங்கைக்கான 'அதிகாரபூர்வ உலா', ஒருவாறு இந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

  

"அவருக்கு இங்கே அனுமதி இல்லை. அவரைக் கால்வைக்க விடமாட்டோம் என்று ஆக்ரோசமாக எழுந்த பேரினவாதக் குரல்கள் இரண்டு ஆண்டுகளில் சுருதி குறைந்து, "வரலாம், ஆனால் விரும்பியவாறு எங்கும் செல்ல முடியாது" என்ற வேகம் தணிந்து, இப்போது "எங்கும் போகலாம். எந்தத் தடையும் இல்லை" என்ற நிலை வந்துவிட்டது. "ஆகா, இதுவல்லவோ ஜனநாயகம். இதுபோன்ற ஒரு நேர்மையான மக்கள் ஆட்சி வேறு எங்காவது இருக்குமா" என்று நவநீதம்பிள்ளை அவர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு, பதாதை கட்டாத வரவேற்பு தடல்புடலாக உள்ளது. அரசாங்கத்தின் ஒவ்வொரு மந்திரிமாரும் "நவநீதம் பிள்ளை அவர்களே, வருக! வருக! உங்கள் புண்ணிய பாதம் எங்கள் பாவ மண்ணில் படுவதாக" என்று கூறுவது போன்று வரவேற்பு அறிக்கைகளை போட்டி அடிப்படையில் பறக்க விடுகின்றனர்.

 

கடந்த இரண்டு வாரங்களில் சுமார் இருநூறுக்கும் அதிகமான முக்கிய செய்திகள் இவரது விஜயம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்து பலரது பார்வையையும் மொய்த்து நிற்கின்றது. ஒருபுறம் நம்பிக்கையின் எதிர்பார்ப்பு. மறுபுறம் விரும்பாத ஏமாற்றத்தின் அங்கலாய்ப்பு என்ற வகையில் இந்தச் செய்திகளை இரண்டாகத் தரம் பிரிக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு விடிவு வழங்கும் தேவதையாக நவநீதம் பிள்ளையைப் பார்க்க, தங்களைப் போர்க்குற்றக் கூண்டில் ஏற்றுவதற்கு வந்த கொடுமைக்காரியாக அவரை ஆட்சிப் பீடத்தினர் பார்ப்பதைக் காண முடிகின்றது.

 

வட மாகாணசபைத் தேர்தலும் பொதுநலவாய மாநாடும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ள காலப்பகுதியில் இவரது விஜயம் அமைந்திருப்பதை, "அரசாங்கத்தின் பொல்லாத காலம்" என்றே அரசியல் பகுப்பாளர்கள் கருதுகின்றனர். அவர்களின் விமர்சனங்களும் அதே பாங்கில் அமைந்துள்ளன. ஆகஸ்ட் 25ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையில் தங்கியிருப்பார். ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தரப்பினரை இவர் சந்திப்பது வெறும் சம்பிரதாயபூர்வமானதாகவே இருக்கும். இவர்களிடமிருந்து நம்பகரமான அல்லது புதிய தகவல்கள் எதனையும் பெறும் வாய்ப்போ தேவையோ இல்லாமையே இதற்குக் காரணம்.

 

மறுபுறத்தில், இரத்தினக்கற்களையோ வைர மோதிரங்களையோ 'இலங்கை விஜய நினைவாக' பெறுபவராக நவநீதம்பிள்ளை இருக்க மாட்டார் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. வடக்கு-கிழக்குக்கு சுதந்திரமான ஒருவராகச் செல்ல விரும்பும் இவர், நெறிப்படுத்தல் சுற்றுலாவைப் புறக்கணித்துள்ளார். இலங்கை அரச அதிகாரிகளையோ, படைத்தரப்பினரையோ தமது விஜயங்களில் அவர் இணைத்துக் கொள்ளவில்லை. இந்தக் காரணங்களால் அரசாங்கத் தரப்பு குலைநடுக்கத்தில் உள்ளது.

 

யுத்தப் பிரதேசங்களில் போரின் எச்சங்களையும் கொலைத் தாண்டவ அடையாளங்களையும் மற்றும் தடயங்களையும் அழிக்கும் துரித வேலையில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் இப்போதே சில மனித உரிமை அமைப்புகளால் ஜெனிவாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அரச சார்பற்ற 47 நிறுவனங்கள் கூட்டாக அவசர விண்ணப்பமொன்றை நவநீதம் பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளன.

 

வட பகுதி மக்களை தனிமையில் சந்திக்க வேண்டும் என்பது இவர்களது முக்கிய கோரிக்கை. சுமார் எண்ணூறு புலிச் சந்தேக நபர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சென்று பார்வையிட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற மற்றும் காவற்றுறையில் பதிவான முறைப்பாடுகள் உட்பட அரசாங்க தரப்பினரின் ரகசிய ஆவணங்களையும் தவறாது பார்க்க வேண்டும் என இந்த அமைப்புகள் கேட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை 30ஆம் திகதி சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கூட்டமைப்பினருக்கு எதிரான புகாரை நவநீதம்பிள்ளையிடம் அரசாங்க தரப்பு வழங்கியுள்ளது.

 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டவே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று கூட்டமைப்பினர் வலியுறுத்திக் கேட்க ஆயத்தமாகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் - நவநீதம் பிள்ளை சந்திப்பும் உறுதியாகியுள்ளது.

 

நீதியமைச்சர் என்ற ரீதியில் தமக்குத் தெரிந்த உண்மைகளைத் தெரிவிக்க தாம் தயங்கப் போவதில்லை என்று ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசுக்கு எச்சரிக்கை விடுகின்றாரா? அல்லது, வழக்கம் போன்று ஏமாற்று நாடகமா என்பது விரைவாகத் தெரிந்துவிடும். இலங்கை அரசினால் நீதிக்குப் புறம்பாக பதவிநீக்கம் செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுடனான இவரது சந்திப்பை, அரசுக்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகள் விருப்புடன் எதிர்பார்க்கின்றனர்.

 

அதேபோன்று, வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அனந்தி சசிகரனுடனான நவநீதம் பிள்ளையின் சந்திப்பை தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த எழிலனின் மனைவி அனந்தியுடனான சந்திப்புக்கு ஏழு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணம் செல்லும் வேளையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடந்த காணாமற் போன உறவுகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்து வருகின்றது. இதன்போது 13 அம்சங்களைக் கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும்.

 

சிங்கள - தமிழ் - முஸ்லிம் தரப்பில் ஒவ்வொருவரும் வௌ;வேறு காரணத்துக்காக நவநீதம் பிள்ளை அவர்களின் விஜயத்தை விரும்புவது ஒருவகையில் குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதை போன்றது. ஆனால், கோதபாய ராஜபக்ச மட்டும் தனித்துவமானவர். நவநீதம்பிள்ளையின் விஜயத்தை அவர் அடியோடு விரும்பவில்லை. நாற்பதாயிரம் பேர் யுத்தத்தில் கொல்லப்பட்டதை நிரூபிக்குமாறு தாம் நவநீதம் பிள்ளையிடம் நேரடியாகக் கேட்கப்போவதாக (வழக்கம்போல்) அவர் சவால் விடுத்துள்ளார். போர்க்காலத்தில் வன்னியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போனதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வெளியிட்ட ஆவணம் நவநீதம் பிள்ளையிடம் இருக்கிறது என்பதை கோதபாய ராஜபக்ச மறந்துவிடக் கூடாது.

 

மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னரே பலரது எதிர்பார்ப்பும், சிலரது ஏமாற்றங்களும் தெரியவரும். அதற்காக, அடுத்த மாத மனித உரிமை ஆணையகக் கூட்டம் வரை காத்திருக்க வேண்டி வராது.

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=91197&category=Article&language=tamil

சிங்கள - தமிழ் - முஸ்லிம் தரப்பில் ஒவ்வொருவரும் வௌ;வேறு காரணத்துக்காக நவநீதம் பிள்ளை அவர்களின் விஜயத்தை விரும்புவது ஒருவகையில் குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதை போன்றது. ஆனால், கோதபாய ராஜபக்ச மட்டும் தனித்துவமானவர்.

 

கோபத்தபயா கோமாளித்தனம் ஆடுவதன் காரணம் அவர் இது வரையில் நவநீதம் பிள்ளை மாதிரி ஒரு தரமான சர்வதேச அதிகாரியை சந்திக்காமையினால்த்தான்.  அவருக்கு உழுத்துப்போன, ஊழல் நம்பியாரை மட்டும் தான் தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.