Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை அரசியலா? இல்லை இணக்க அரசியலா -தேர்தலின் பின்னான கூட்டமைப்பின் பாதை எது ?

Featured Replies

         தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அவநம்பிக்கையுடனும், அச்சத்துடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அணுகப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலில், அவர்களே எதிர்பார்க்காத அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் வடக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள்.

     

      தேர்தலுக்கு முன்னான சில நாட்களிலும், தேர்தல் தினத்தன்றிலும் கூட தமது வெற்றி குறித்த அச்ச உணர்வுடனேயே வேட்பாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்திருந்தனர். அவ்வாறானதொரு புறநிலை ஆளும் தரப்பால் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது. மட்டுமில்லாமல், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிகழ்ந்த உள்வீட்டு பிரச்சனைகளும் இச் அச்சத்திற்கு ஒரு காரணியாக இருந்தது.

 

        இவற்றை எல்லாம் புறந்தள்ளி, தமிழ் மக்களின் தனித் தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததற்கான காரணம் என்ன? அந்த காரணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொண்டுள்ளதா? இனிவரும் காலங்களிலாவது அந்த காரணங்களை உள்வாங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுமா என்பதே இன்று எம் முன்னால் உள்ள கேள்வியாகும்.

 

      ஆரம்பம் முதலே வடமாகாண சபை அதிகாரங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் மக்களின் மனங்களை கொஞ்சம் தடுமாற வைத்தாலும், பின்னான பரப்புரைக் காலங்களில் நிகழ்த்தப்பட்ட உணர்ச்சிமயப்படுத்தப்பட பேச்சுக்களும், மாகாணசபை அதிகாரங்கள், மற்றும் அதிகாரநீக்கம் போன்ற விளக்கங்களாலும் மக்களின் மனதுகளில் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கி விட்டிருந்தனர் கூட்டமைப்பினர்.

 

      முக்கியமாக நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை வெளியேற்றுவது, ஆளுநர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை, மாவீரர் நினைவாலயங்கள் மீள் கட்டமைப்புக்கு உள்ளாகும் என்ற நம்பிக்கையூட்டல், சுயநிர்ணய உரிமை மற்றும் சர்வதேச ஆதரவு போன்ற விடயங்களூடாகவும், தமது வாழ்வியலை மீட்டுக்கொள்ள முடியும் என்ற ஒரு அதீத நம்பிக்கையினை மக்கள் மனதில் விதைத்து விட்டு இருந்தனர்.

 

      மறுபக்கத்தில் போர் முடிந்ததாக கூறப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின்னும் தொடரும் இராணுவ கெடுபிடி, யாழ் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல்கள் (இந்த இடத்தில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனைகள் ஒவ்வொரு கிராமத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும்) உருவாக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள், அரச உயர்பதவிகளில் அமர்த்தப்படும் சிங்கள அரச ஊழியர்கள் என எல்லாவகையிலும் தாங்கள் மிக மிக மோசமாக ஒடுக்கப்படுவதை உணர்ந்த நிலையில், வடக்கு வாழ் தமிழ் மக்கள் மிகவும் சலிப்படைந்து போயிருந்தனர். வீட்டு வாசலில் ஆயுததாரியை வைத்துக்கொண்டு காப்பெற் வீதிகளில் நிம்மதியாக பயணிக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

 

       2009ம் ஆண்டின்பின் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டமைப்பினை தவிர்த்து ஏனைய தரப்பினர் குறிப்பிடத்தக்களவு வாக்குவங்கியினை வெளிப்படுத்தி இருந்தனர். விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களின் வாக்குகளாகவே அவை இருந்தன. ஆனால் இன்று நிலை முழுவதுமாக மாறி ஒட்டுமொத்தமாக பேரினவாத அரசுக்கு எதிராகவும், அரசுடன் சார்ந்து இயங்குபவர்களை புறக்கணித்தும், இதுவரை நடந்திராத அளவு வாக்குப் பதிவு நடந்துள்ளது என்றால் அதற்கான காரணங்கள் அரசின் மேற்குறித்த இனரீதியான ஒடுக்குதல்களே. எனினும் மக்கள் வேட்பாளர்களின் பின்னணிகள் குறித்தும் ஆராய்ந்து வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது.

 

      சிங்கள மேலாதிக்கத்தின்கீழ் எமது வாழ்வியலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிக்கொள்ள நாம் தயாராக இல்லை என்பதே தமிழ் மக்களால் தெளிவாக முன்வைக்கப்பட செய்தியாகும். இந்நிலை இவ்வாறு இருக்க,

         

        தமிழ் தேசிய கூட்டமைப்பானது தொடர்ந்தும், கொள்கை நீக்கம், மற்றும் இணக்க அரசியல் என்ற கோட்பாட்டின் கீழும் இயங்கவே விரும்புகிறது. அதனை முதலமைச்சராக தெரிவானபின் தனது உரையில் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அது இணக்க அரசியலில் சாத்தியமில்லாத ஒன்று என்பது கடந்த கால வரலாறு கற்பித்த பாடமாகும்.

இலங்கையின் இனப்பாகுபாடானது சர்வதேசத்தின் முழுமையான கவனத்தின் கீழ் வந்துள்ள நிலையில், போர் வெற்றிவாத அரசினை, தங்களின் ஜனநாயக வெற்றி வாதத்தால் தோற்கடிக்க முனைய வேண்டுமே தவிர, வெற்றிவாத அரசிற்கு அடிபணிந்து ஒரு இணக்க அரசியல் நிலைக்கு தங்களை உள்ளாக்க கூடாது. அவ்வாறு உள்ளாக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேச ரீதியிலான போர்க்குற்றம் என்ற செயற்பாடு நீர்த்துப்போகும்.                                              

 

       போர்க்குற்றவாளி என்ற பிடியிலிருந்து தப்பிக்கவே, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக அரச பிரதானிகள் அறிவித்துள்ளனர். இனி அபிவிருத்தி என்ற மாயமானையும் அழைத்து கொண்டு வந்து தரக்கூடும். மறுபக்கம் இந்திய அரசானது சிங்கள அரசினை ஆட்டுவிக்கும் கயிறாக இந்த வடக்கு மாகாணசபையை பயன்படுத்தத் துடிக்கிறது. இத்தரப்புக்களை கையாண்டு வாக்களித்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூட்டமைப்பு முன்வர வேண்டும்.

 

      வெறுமனே மேடைப் பேச்சுக்களால் மக்களின் உணர்சிகளை தட்டி விடுவதோடு நில்லாமல், செயற்பாடுகளிலும் இதயசுத்தியுடன் இறங்க வேண்டும். அரசின் கரங்களுக்குள் இணங்கி, இணக்க அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில், கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு பாலூற்றிய கேவல நிலையினை சுமக்க வேண்டி வரும். அவ்வாறு ஒரு இழிநிலைக்கு தங்களை உள்ளாக்கிக் கொண்டால், அது தமிழர் என்ற இனத்தின் அழிவுக்குப் போடப்பட்ட காப்பெற் வீதியாகவே இருக்கும்.

 

நன்றி; பொங்குதமிழ் இணையம். 

Edited by நேற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்
  வெறுமனே மேடைப் பேச்சுக்களால் மக்களின் உணர்சிகளை தட்டி விடுவதோடு நில்லாமல், செயற்பாடுகளிலும் இதயசுத்தியுடன் இறங்க வேண்டும். அரசின் கரங்களுக்குள் இணங்கி, இணக்க அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில், கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு பாலூற்றிய கேவல நிலையினை சுமக்க வேண்டி வரும். அவ்வாறு ஒரு இழிநிலைக்கு தங்களை உள்ளாக்கிக் கொண்டால், அது தமிழர் என்ற இனத்தின் அழிவுக்குப் போடப்பட்ட காப்பெற் வீதியாகவே இருக்கும்.

 

 

யதார்த்தம் அண்ணா... நல்லதொரு அலசல்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான ஒரு கட்டுரை, நேற்கொழுதாசன்!

 

வரலாறு காணாத ஒரு மாபெரும் மனித அழிவொன்று நடந்து முடிந்திருக்கின்றது!

 

ஒரு போருக்கான வரம்பு முறைகள், மிகவும் அநாகரீகமான முறையில் தெரிந்தே மீறப்பட்டிருக்கின்றன! குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், என்ற வேறுபாடின்றி, மக்கள் பச்சையாகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்! மிகவும் நம்பிக்கையூட்டப்பட்டு, ஒரு குறுகிய நிலப்பரப்பு ஒன்றுக்குள், திட்டமிட்ட முறையில்,ஆடுமாடுகள் போல வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்!

 

மனிதாமானத்தின் காவலர்களே, இந்த அநியாயங்களுக்கு இதுவரை நியாயம் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார்கள்! :o

 

நாங்கள் விரும்பியோ, விரும்பா விட்டாலோ, இவை அனைத்தும் நிகழ்த்தப்பட்டமைக்கு மிகவும் முக்கியமான ஒரே காரணம், நாங்கள் தமிழர்கள் என்பதே! நாங்கள் சூத்திரர்களாகப் புராணங்களில் வர்ணிக்கப்பட்டமையே! அன்றைய நாள், எமது வாழ்வில், காலா காலமாக, நாம் வளர்த்திருந்த அத்தனை நம்பிக்கைளையும், வழித்தெறிந்த நாள்! 

 

இந்திய தேசமும், இந்திய அரசியல் வாதிகளும், இந்த அழிவுக்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! போர்க்குற்றவாளிகளாக அவர்கள் உலகுக்குக் காட்டப்பட வேண்டும்! அவர்களது 'காந்தீய முகமூடி' கிழித்தெறியப்படவேண்டும்!

 

சரி, நடந்தது நடந்து விட்டது! இந்தியாவை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது! அதனுடன் இணைந்து செயல் படுவது தான் எமக்கு வழி என்று நாம் பணிந்து சென்றாலும், இந்தியா என்ற தேசம், தான் செய்த பாவங்களுக்காக, மனம் திருந்தி, எமக்காக எதுவும் செய்து விடப் போவதில்லை! மேலும், மேலும் எங்களை நசுக்கவே போகின்றது! ஏனெனில் நாம் 'சூத்திரர்கள்'!

 

ஈழத்தில் விதவைகள் அதிகம் இருக்கின்றார்கள். எனவே உடுப்புத் தைக்கும் தொழில் துவங்கினால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தான் அவர்கள் இன்னும் நினைக்கின்றார்கள். அவர்கள் கட்டுகின்ற அரை வேக்காட்டு வீடுகள், போர் புரிந்த சிங்கள இராணுவக் குடும்பங்களுக்கு, வெற்றித் 'திறைப்பொருளாக' வழங்கப்படுகின்றன!

 

இலங்கையைக் கையாள்வதற்கு, இந்தியாவை உபயோகப்படுத்தி, மிச்சமிருக்கும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழக் கூட்டணி அரசியல் வாதிகள் வழி சமைக்கவேண்டும்!

  • தொடங்கியவர்

யதார்த்தம் அண்ணா... நல்லதொரு அலசல்..

நன்றிகள் சுபேஸ். 

  • தொடங்கியவர்

 

 

மனிதாமானத்தின் காவலர்களே, இந்த அநியாயங்களுக்கு இதுவரை நியாயம் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார்கள்! :o

 

 

இந்திய தேசமும், இந்திய அரசியல் வாதிகளும், இந்த அழிவுக்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! போர்க்குற்றவாளிகளாக அவர்கள் உலகுக்குக் காட்டப்பட வேண்டும்! அவர்களது 'காந்தீய முகமூடி' கிழித்தெறியப்படவேண்டும்!

 

சரி, நடந்தது நடந்து விட்டது! இந்தியாவை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது! அதனுடன் இணைந்து செயல் படுவது தான் எமக்கு வழி என்று நாம் பணிந்து சென்றாலும், இந்தியா என்ற தேசம், தான் செய்த பாவங்களுக்காக, மனம் திருந்தி, எமக்காக எதுவும் செய்து விடப் போவதில்லை! மேலும், மேலும் எங்களை நசுக்கவே போகின்றது! ஏனெனில் நாம் 'சூத்திரர்கள்'!

 

 

 

இலங்கையைக் கையாள்வதற்கு, இந்தியாவை உபயோகப்படுத்தி, மிச்சமிருக்கும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழக் கூட்டணி அரசியல் வாதிகள் வழி சமைக்கவேண்டும்!

நிச்சயமான உண்மை அண்ணை. எங்களின் காலங்களில், எங்களால் இயன்றவரையிலும் எமக்காக மரணித்துப்போனவர்களின், எம்மை நம்பி மரணத்துள் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயலவேண்டும். 

 

நன்றி அண்ணை வரவுக்கும் கருத்துக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெளிவாக இருந்து கூட்டமைப்புச் செய்து கொண்டிருக்கும் அரசியலையும் மீறி

சிங்கள இனவாதத்திற்கெதிராக வாக்களித்திருக்கின்றார்கள் .
தனித் தமிழீழம் தான் கூட்டமைப்பின் இலட்சியமாக இருந்திருந்தால் வாக்களிப்பு இன்னும் அதிகரித்திருக்கும். கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் அண்மையில் இனவாதச் சிங்கள அரசிற்கு ஒத்து ஊதுவதாகவும் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு மேற்குலகிற்கு பிழையான தகவல்களை வழங்கக்கூடிய அரசியலாகவே இருக்கின்றது.

இதற்கு ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் நாம் பொறுப்பாக்க முடியாது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைந்த அரசியல் செய்ய விரும்பும் உறுப்பினர்கள் விரைவில் வெளியேற்றப்படுவது ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு சிறந்தது.  

  • தொடங்கியவர்

மக்கள் தெளிவாக இருந்து கூட்டமைப்புச் செய்து கொண்டிருக்கும் அரசியலையும் மீறி

சிங்கள இனவாதத்திற்கெதிராக வாக்களித்திருக்கின்றார்கள் .

தனித் தமிழீழம் தான் கூட்டமைப்பின் இலட்சியமாக இருந்திருந்தால் வாக்களிப்பு இன்னும் அதிகரித்திருக்கும். கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் அண்மையில் இனவாதச் சிங்கள அரசிற்கு ஒத்து ஊதுவதாகவும் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு மேற்குலகிற்கு பிழையான தகவல்களை வழங்கக்கூடிய அரசியலாகவே இருக்கின்றது.

இதற்கு ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் நாம் பொறுப்பாக்க முடியாது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைந்த அரசியல் செய்ய விரும்பும் உறுப்பினர்கள் விரைவில் வெளியேற்றப்படுவது ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு சிறந்தது.  

நன்றிகள் வாத்தியார்.

கருத்துக்களால் என்னை வளப்படுத்த உங்களின் பதிவிடல் உதவுகிறது.

 

தனித்தமிழீழம் என்ற கோட்பாட்டினை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டிஇட்டிருந்தால் கிழக்கு மாகாணசபை நிலவரங்கள் அதனை எதிர்கொள்ளுவதில் நிறைய சிக்கல்கள் உருவாக்கி இருக்கும். இன்னும் பிற அழுத்தங்களுக்கும் காரணமாகி இருக்கும்.

 

இணக்க அரசியலை விரும்பும் தலைவர்கள் ஆழ வேருன்றி விட்டார்கள். பக்க வேர்களுக்கு சேதாரமின்றி அறுத்து எடுப்பதுதான் இன்றைய மிக கடின பணி. இன்று வரும் செய்திகளை அவதானித்தால் இணக்க அரசியல் இல்லை அடிமை அரசியலுக்கே தங்களை தயாராக்கி விட்டார்கள் போல இருக்கு...... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.