Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு

 
 

 
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு
 
இந்தியர்கள் தங்களுக்குள்ளே பெருமை பேசி கொள்வதும் தாம்தான் மிக உலகில் மிக புத்திசாலிகள் என்றும் மிக தைரியசாலிகள் என்றும்இந்தியா வல்லரசு நாடாகும் தூரம் அதிகம் இல்லை என்று பெருமை பேசிக் கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள் இல்லை
 
 
 

அடே தைரியசாலிகளே புத்திசாலிகளே தமிழ கடற்கறையோராம் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பபடுவதும் அன்றாட நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தானே நீங்கள்கேட்டால் நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் நட்பு நாடான இலங்கையுடன் பகையை வளர்த்து கொள்ளாமல் ராஜரீக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று வீணாப்போன அறிக்கைகள மட்டும் விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
 
 
ஏண்டா நான் உங்க கிட்ட ஒன்று நான் கேட்கிறேன் உங்க வீட்டு குழந்தைகளை பக்கத்துவீட்டுக்காரன் துன்புருத்துகிறான் அல்லது கொலை செய்கிறான் அவனை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவனை தட்டிக் கேட்டால் அவனிடம் நாம் கொண்ட உறவு பாழாகிவிடுமே என்று கருதி சும்மா இருப்பீர்களா என்னஅப்படி சும்மா இருப்பது பொட்டைத்தனம் அல்லவா?
 
அதுமாதிரிதானடா இந்த மீனவ பிரச்சனைகள் அது உங்களுக்கு புரியவில்லையா என்னஇல்லை நீங்கள் இப்படி இருப்பதுதான் புத்திசாலிதனமா என்ன?
 
பாருங்கடா ஒரு மீனவரை பறிகொடுத்த தைய்வான் செய்த செயலை அந்த சிறிய நாட்டிற்கு உள்ள தைரியம் புத்திசாலிதனம் கூட இந்தியர்களுக்கு இல்லையேடா?
இதையும் க்ளிக் செய்து படிங்க )
 
கடந்த மே மாதம் தைவான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் எல்லையில் தைவான் நாட்டு மீனவர் ஒருவர் (வயது65) மீன் பிடித்துக்கொண்டிருந்தார்அப்போது அந்த வழியே ரோந்து வந்த ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் அந்த மீனவரைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். 'எங்கள் நாட்டின் எல்லைப் பகுதிக்குள் வந்ததால் பாதுகாப்பு கருதி சுட்டதாக’ ஃபிலிப்பைன்ஸ் கூறியதுஅதை ஏற்க மறுத்த தைவான் அரசுஃபிலிப்பைன்ஸ் மீது 11பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என எச்சரித்துசுட்டவர்கள் மீது நடவடிக்கையும் கோரியது.
 
ஃபிலிப்பைன்ஸ் மக்கள் மீது விசா செயலாக்க இடைநீக்கம்வர்த்தகப் பரிமாற்றக் குறைப்பு... என தைவான் நடவடிக்கைகள் எடுத்ததுசர்ச்சைக்குரிய கடற்பகுதியில் ராணுவப் பயிற்சிகளை தைவான் நடத்தியதுஇதையடுத்து ஃபிலிப்பைன்ஸ் அதிபரின் சிறப்புத் தூதர்சுட்டுக் கொல்லப்பட்ட மீனவக் குடும்பத்தை நேரில் சந்தித்து இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தார்தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்மீன் பிடித்தல் தொடர்பான ஓர் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்இதனை அடுத்து தைவான் அரசுவிதித்திருந்த தடைகளை நீக்கிக்கொண்டதுஇதுவும் ராஜாங்க நடவடிக்கைதான்!''
 
 ( இதையும் க்ளிக் செய்து படிங்க )
 
After arriving from the Philippines, Amadeo Perez, chairman of the Manila Economic and Culture Office (MECO) in Taiwan, right, apologizes to the family of a Taiwanese fisherman killed by Filipino coast guard officers in Pingtung, southern Taiwan, Aug. 8,
 
 
 
சின்ன குழந்தைகள் தவறுகள் செய்யும் போது பெற்றோர்கள் பக்கத்துவீட்டு குழந்தைகள சுட்டிக்காட்டி நீங்க எல்லாம் அவங்க மூத்திரத்தை குடிக்க கூட லாய்கில்லை என்று சொல்வது போல இந்தியர்கள் எல்லாம் தாய்வான் நாட்டினருடைய மூத்திரத்தை குடிக்க கூட லாய்க்கில்லை
 
இதுல வேற மோடி வந்தா எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு கூட்டம் உளறிக் கொண்டு இருக்கிறதுநான் ஒன்று கேட்கிறேன் தமிழகத்தில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் மினவர்கள் பற்றி பேசும் போது இந்த மஹாவீரர் மோடி இலங்கை அதிபருக்கு ஒரு எச்சரிகை தமிழர்களின் சார்பில் விட்டு இருக்கலாமே இப்படி ஏய் இலங்கை அதிபரே நான் பிரதமாரக வந்த பின்னால் உங்களது கடற்கறை ராணுவ வீரர்களால் எங்க இந்திய மக்கள் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுவித்து இருக்கலாமே அதை செய்ய மறந்து போனது ஏனோ
 
ஒரு குடும்பமாக பழகிவரும் இந்துகள் முஸ்லிம்கள் இடையே சிறு தகராறு வரும் போது அதை ஊதி பெரிசாக்கும் மோடி இப்படி இந்திய மீனவர்கள் இறக்கும் போது மவுனம் சாதிப்பது ஏனோ
 
 
இந்திய மக்களே தேர்தலுக்கு இன்னும் ஒர் ஆண்டுகள் இருக்கிறது அதனால் நிங்கள் நன்றாக சிந்தியுங்கள் இந்த சந்தர்ப்பவாதிகளான மன்மோகன் சிங்க் மோடி இவர்களை விட ஒரு நல்ல இந்திய தலைவர் இந்தியாவில் பிறக்கவே இல்லையா என்னநிச்சயம் நல்ல தலைவர்கள் இருப்பார்கள் அவர்களை கண்டு பிடித்து தேர்ந்தெடுத்து உங்கள் தன்மானத்தை காப்பாற்றி இந்தியாவையும் உலகில் பெருமை மிக்க நாடுகளாக மாற்றுங்கள்.
 
அப்படி மாற்றுவது உங்கள் கையில் மட்டுமே
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

http://avargal-unmai...g-death-vs.html

 

சோனியான்ரை பொட்டுக்கேடு முழுக்க மகிந்தவின்ரை கையில இருக்கேக்கை.. அவங்களாவது சிறிலங்காவோட மிண்டுறதாவது?! :unsure:<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.