Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பதியில் 5 இலட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவில் குண்டுவைக்க திட்டம்! - பிடிபட்ட தீவிரவாதிகள் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
terror-home-61013-150.jpg

திருப்பதியில் பிரம்மோற்சவத்தை சீர்குலைப்பதோடு, குடைகள் ஊர்வலத்தில் புகுந்து 5 லட்சம் பக்தர்கள் திரளும் கருடசேவையன்று வெடிகுண்டுகளை வெடித்து மிகப்பெரிய நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட இருந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் உட்பட 3 தீவிரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தீவிரவாதி பக்ரூதின் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள புத்தூரில் உள்ள மேலரதவீதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர்.

  

அதிகாலை காலை 4.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தீவிரவாதிகளை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். அதை அவர்கள் ஏற்காததால் தொடர்ந்து அவர்களை பிடிக்கும் முயற்சி நீடித்தது. பிற்பகல் 2.50 மணியளவில் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியதில் அந்த வீட்டில் இருந்த பெண் மற்றும் 3 குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். அதன்பிறகு தீவிரவாதிகள் இஸ்மாயில், பிலால் ஆகியோர் சரண் அடைந்தனர்.

 

இதற்கிடையே புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்றவர்கள். கோவையில் அத்வானியை கொல்ல சதி செய்தது, பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. மேலும் திருப்பதியை சுற்றியுள்ள பகுதியில் தங்கியிருந்து திருப்பதியை கண்காணித்து வந்துள்ளனர்.

 

ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு 2 அமைப்புகள் சார்பில் சென்னையில் இருந்து குடைகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக திருமலைக்கு எடுத்து வருவது வழக்கம். இந்த குடைகள் பிரமோற்சவத்தின் 5வது நாளான கருட சேவையில் பயன்படுத்தப்படும். மகாவிஷ்ணுவின் வாகனமான கருட வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வரும் காட்சியை பார்த்தாலே நன்மைகள் கிட்டும் என்று நம்பப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவத்தின் 5வது நாள் கருடசேவையில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வரை திரளுவார்கள். எனவே குடைகள் ஊர்வலத்தின்போது பக்தர்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவி வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். சீமாந்திரா போராட்டத்தில் போலீசார் இருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பயங்கர நாசவேலையில் ஈடுபட முடிவு செய்திருந்துள்ளனர் என்று தீவிரவாதிகள் கூறியிருப்பதாக திருப்பதி போலீசார் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

 

இதைத்தொடர்ந்து திருப்பதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி மலையடிவாரம் அலிபிரி பகுதி, மலையின் மீது கருடாத்திரி நகர் ஆகிய இடங்களில் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். திருப்பதி முழுவதும் 460 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் சந்தேக நபர்கள் யாராவது இருந்தாலோ, சந்தேகபடும்படியான பொருட்கள் எதாவது பார்த்தாலோ உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த தீவிரவாதிகள் திருப்பதி பிரம்மோற்சவத்தில் வெடிகுண்டு வைத்து சீர்குலைக்க சதி செய்ததும், பக்தர்கள் மீது குண்டுவீச திட்டமிட்டிருந்ததும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர திருப்பதியில் அதிகளவில் மக்கள் கூடும் அரசியல் கூட்டங்களுக்கு இவர்கள் சென்று கண்காணித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

 

தீவிரவாதிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

 

புத்தூர் ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான மோதர் தெரு, கேட் தெரு ஆகிய இடங்களில் 3 மாதங்களுக்கு முன்பு 2 வீடுகளை தீவிரவாதிகள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். ஒரு பெண் உட்பட குழந்தைகளும் இருந்ததால் பொதுமக்கள் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பிடிபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய அல் உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

 

தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதை அறிந்ததும் புத்தூர் நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீவிரவாதிகளை பார்ப்பதற்காக அச்சம் கலந்த ஆவலில் அவர்கள் பதுங்கியிருந்த வீடுகள் அருகே 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதும் வெடிகுண்டு வீசப்பட்டதாக கருதி நாலாபக்கமும் பொதுமக்கள் சிதறி ஓடினர். ஆம்புலன்ஸ் மூலம் ஒரு பெண் உட்பட 3 குழந்தைகளை போலீசார் பாதுகாப்புடன் புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டு போலீஸ் வேனில் அழைத்துச் சென்றபோது பொதுமக்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

 

நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 2.50 வரை சுமார் 11 மணி நேரம் புத்தூரில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அளவுக்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதை அறிந்ததும் தமிழகத்தில் இருந்து சென்னை, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உட்பட பல இடங்களில் இருந்து செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள், ஊடகங்களை சேர்ந்தவர்கள் புத்தூரில் குவிந்தனர். இதனால் சம்பவ இடத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

 

சித்தூர் மாவட்டம் புத்தூரில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயிலின் வயிற்றிலிருந்த குண்டை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சனிக்கிழமை இரவு அகற்றினர். போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வயிற்றில் பலத்த குண்டுக் காயமடைந்த பன்னா இஸ்மாயிலை சித்தூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அவரை அனுமதித்து, அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் பாய்ந்த குண்டை அகற்றினர். குண்டை அகற்றிய பிறகு, போலீஸார் பாதுகாப்புடன் டாக்டர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

 

வெளி நபர்கள் யாரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் உள்பட எவரையும் போலீஸார் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு சனிக்கிழமை அனுமதிக்கவில்லை.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=94328&category=IndianNews&language=tamil

அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக கப்டன் வியகாந்த் கடமையில் சேர்ந்து தீவிரவாதிகளை ஒடுக்கவேடும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.