Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகம் இல்லாத நாட்டில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவது கேலிக்கூத்து! - ரணில் காட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் இல்லாத நாட்டில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவது கேலிக்கூத்து! - ரணில் காட்டம்!!

ஜனநாயகம் துளியளவும் இல்லாத இலங்கையில், பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவது மிகவும் கேலிக்குரியது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

'நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மீது திட்டமிட்ட பழிவாங்கும் படலத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டின் மூலம் இலங்கையில் இன்னமும் அரசியல் கைதிகள் உள்ளனர் என உலகிற்குத் தெரியவந்துள்ளது. எனவே, இப்படியான நாட்டில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

 

 

'இன்று ராஜபக்ச படையணியினரால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்கள சமரவீரவின் வீட்டைச் சுற்றிவளைத்துள்ளமை மிகவும் மோசமானதொரு செயற்பாடாகும். இவர் மாத்தறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தினார் என்பதற்கு யாரிடமும் எவ்வித ஆதாரமும் இல்லை. இந்நிலையில் தான் இவரைக் கைது செய்து சிறையில் அடைக்க பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

 

அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமையவே இவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர். இது மிகவும் பிழையான செயற்பாடு மட்டுமன்றி, நீதிக்குப் புறப்பானதொரு செயற்பாடாகவும் கருதப்படுகிறது. பொலிஸ் நிலையத்தில் தாக்கியவர்களின் பெயர் விவரங்கள் என்பனவும் மாற்றமடைந்துள்ளன.

 

 மாத்தறையில் இடம்பெற்ற பேரணியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஹேமன் குணரத்னவை இதுவரை பொலிஸாரால் கைது செய்ய முடியாது போனது ஏன்? காரணம், நடப்பவை அனைத்தும் அரசியல் விளையாட்டுக்களே.

 

சுயாதீன பொலிஸ் சேவை இங்கு இல்லாமலிருப்பதே இதற்கெல்லாம் முக்கிய காரணமாகும். இவ்வாறான நிலையில்தான் இங்கு பொதுநலவாய மாநாடும் நடக்கவிருக்கிறது. என்ன நடந்தும் என்ன பயன் கிடைக்கப் போகிறது?

 

ஜனநாயகம் எனும் ஒன்று துளியளவும் இல்லாத இந்நாட்டில் இப்படியானதொரு நிகழ்வு நடைபெறுவது மிகவும் கேலிக்கைக்குரிய செயற்பாடாகவே கருதப்படுகின்றது' என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=111dfeb3-46d9-4e06-9385-eaeff181168a

கதிரையை விட்டெழும்பும் போது வந்த ஞானம்.

 

இது மகிந்தாவுக்காக பாங்கி மூனிடம் சென்ற போது வந்திருந்தால் இன்று மகிந்தா ஜனநாயக உரிமை மீறல்களுக்காக சிறையில் இருப்பார்.

 

கதிரை காப்பாற்றப்பட்டிருக்கும்.

 

இனி வரும் சிங்களத்தலைவர்களும் உணர வேண்டியது மகிந்தாவை அவர்கள் காப்பாற்றும் வரை தங்களைத்தாங்கள் அழிக்கிறார்கள் என்பதாகும்.  ஜனநாயக உரிமை மீறல்கள், இனவழிப்புக்குற்றங்களை மகிந்தா செய்யும் போது அவரை காப்பாற்றுபவர்கள் உணரவேண்டியது அவர் அவற்றை சும்மா பொழுது போக்குக்காக செய்ய வில்லை. சிங்கள மக்களின் மனத்தில் தான் மட்டுமே சிங்கள இனத்தின் காவலன் எனக் காட்டி எதிர் கட்சிகளை ஒதுக்குவதற்காக என்பதை புரிந்து கொள்ள வேணும். 

 

மகிந்தாவை பொதுநலவாயத்தில், ஐ.நா வில் காப்பாறும் எந்த எதிர் கட்சித்தலைவரும் பதவிக்கு வரப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.