Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் ஒர் அரியபடைப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் காணப்படுகின்றது-ஓவியர் சந்தாணம்!

Featured Replies

தஞ்சையில் சிங்கள இனவெறியனின் இனஅழிப்பினையும் தமிழர்களின் வரலாற்றினையும் ஓவிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இது உலகத்தின் ஒரு அரியபடைப்பாக அமையும் என்று ஓவியர் சந்தாணம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் மிகவும் அரிய பாடுபட்டு கட்டப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இந்த நிகழ்விற்கு இந்தியாவில் உள்ள அனைத்து தமிழர்களும் திரண்டு வரவேண்டும் பலகற்களில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பம் தமிழரின் அடுத்த கட்ட உணர்வினை கொண்டு செல்லும்.

 தமிழனுக்கு ஒரு நாடுவேண்டும் என்று ஈழத்தில் போராடிய வரலாற்று சிறப்புக்களை கொண்டு அமைக்கப்பட்டது இந்த தஞ்சாவூர் நினைவு முற்றம் ஒரு இனத்தின் அழிவினை கலைவடிவில் கொண்டுவந்திருக்கின்றோம் இந்த நினைவு முற்றம் அனைத்து தமிழர்களின் உணர்வினையும் தட்டி எழுப்பும் என்றும் ஓவியர் சந்தாணம் தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/34603/64//d,fullart.aspx

ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள் சில விடயஙகளை அவதானித்திருப்பார்கள். அந்நாடுகளின் வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் புரட்சிகளையோ, வரலாற்று அழிவுகளையோ, யுத்தங்களையோ நினைவில் நினைவில் கொள்ளும்வகையிலான நினைவுச் சின்னங்கள் பலவற்றை அந்த நகரங்களில் நிறுவியிருப்பார்கள். சில சுற்றுலாப் பயணிகளுக்கு அது என்னவென்றே புரியாவிட்டாலும் அந்நினைவுச்சின்னங்களின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து அந்நகரத்திற்க்கு தாம் வந்ததை நினைவுப்பதிவாக எடுத்துச் செல்வார்கள். அதேவேளை வரலாற்று ஆர்வம் மிக்க சுற்றுலாப்பயணிகள் அவற்றை ஒவ்வொன்றாக வாசித்து தாம் பயணித்த பிரதேசங்களின் பல நூறு வருடங்களுக்கு முன்னரான வரலாற்று சம்பவங்களை நினைவுகூர்ந்து செல்வார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை மேடைகளில் மைக்கிற்கு முன்னால் அழகு தமிழில் பழைமவாத பெருமை பேசி, மூடப் பழக்கவழக்கங்களையும் ஊக்குவித்து, திருப்திப்பட்டு கொள்வார்களே தவிர தமது வரலாற்றில் எதையுமே முறைப்படி ஆவணப்படுத்தி உலகின் முன் சமர்ப்பிப்பது இல்லை. முறைப்படி ஆவணப்படுத்தாததால், இன்றும் தமிழர்களின் பல வரலாற்று விடயங்கள் உலகின் பார்வையில் நம்பகத் தன்மை அற்ற வெறும் செவிவழிச் செய்தியாகவே உள்ளன.

அந்தவகையில் இருபத்தொராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற மாபெரும் செயற்கை மனித அழிவாகிய, ஒரு இனத்தின் மீது, சர்தேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாடு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட, அக்கிரமத் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளி வாய்க்கால் சம்பவம் நினைவுச் சின்னமாக முறைப்படி ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தமிழ் மக்களாலும் வரவேற்கப்படவேண்டிய விடயம் ஆகும். இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கிய அமைப்பாளர்கள், கட்டட கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

1.JPGThansai-Thiyil-Illam-2013-seithy-(4).jpgThansai-Thiyil-Illam-2013-seithy-(1).jpgSirpam-01.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.