Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சிறிலங்கா தூதரகத்தை மூடக் கோரி போராட்டம்: திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சிறிலங்கா தூதரகத்தை மூடக் கோரி போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கடலூரில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணல்:

இலங்கையில் செஞ்சோலை பள்ளிச்சிறுமிகள் சிங்கள இராணுவத்தினரால் மனிதநேயமற்ற முறையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் இந்த தாக்குதலை கண்டித்து கடந்த 17 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த உணர்வுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சித்துள்ளது. இது தமிழக அரசின் மற்றும் சட்டப்பேரவையின் மாண்பை கொச்சைப்படுத்துவதாகவும், இந்திய அரசின் இறையாண்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் இருக்கிறது.

அப்பாவி மக்களையும், சிறுவர்களையும் குறிவைத்து தாக்கி படுகொலைகள் செய்வதையே அடிப்படைப் பண்பாக கொண்டுள்ள சிங்களப் படை மற்றும் சிங்கள அரசின் போக்குகள் தமது செயல்களை நியாயப்படுத்துவதோடு தமிழக அரசையும், இந்திய அரசையும் அவமதிப்பதாக உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள இந்திய தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என்பதுடன் இலங்கை தூதரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசையும், இந்திய அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். நாடு முழுவதும் உலகத் தமிழர் பேரவை சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடக்கிறது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொள்கிறது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு 24 மணி நேரத்தில் தீர்வு காண முடியும். மேலும் இலங்கை போலிசாருக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி அளிக்க கூடாது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடி வருவது வேதனையாகவும், தமிழர்களை அவமதிப்பதாகவும் உள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் திருமாவளவன்.

-புதினம்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழருக்குமிடையில் எவ்விதத்திலும், நெருக்கம் வரக் கூடாது என்பதற்காகவும், தவறான தகவல்கள் பரப்புவதற்காகவும், தான் சென்னையில் இலங்கைத் தூதரக உதவிக் கிளை அமைக்கப்பட்டிருக்கின்றது.

முயற்சி வெற்றி பெறுகின்றதோ, இல்லையோ என்பது வேறு விடயம். ஆனால் இவ்வாறன இன உணர்வுகளோடு செயற்படும், திருமாவளவன், போன்ற ஈழ ஆதரவாளர்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது.

---------------------------------------------------------

குழந்தைகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவது இலங்கையரசிற்கு புதிதல்ல. நாகர்கோவிலில் 40 வரையிலான பள்ளிச் சிறுமிகள் இவ்வாறன விமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்ட சம்பவங்கள் உண்டு. இதை விட, பல படுகொலைகளில் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

இப்போது கூட, குழந்தைகளைக் கொன்று விட்ட குற்ற உணர்வால் தான் தங்கள் பாடசாலைகளை மூடி வைத்துள்ளனர். கொழும்பில் நடக்கின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக, இலங்கை முழுவதுமுள்ள பாடசாலைகளை மூட வேண்டிய தேவையே இல்லையே! அதுவும் நேற்று தான் அவை ஆரம்பமானது. ஆனால் அரசு குண்டுவீசப்பட்ட நாளில் இருந்து பாடசாலைகளை மூடி வைத்திருக்கின்றது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனச் சும்மாவா சொல்லி வைத்தார்கள்!

அது சரி திருமாளவன் தூதகரத்தை முற்றுகை இடுவது பற்றிபெரிதாக எழுதுகிறோம். ஈழத்தமிழராகிய நாம் எந்த நாட்டில் உள்ள சிறிலங்கன் தூதுவராலயத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தி தூதுவராலயத்தின் பொய்யுரைகளை எதிர்த்து அம்பலப்படுத்தியுள்ளோம்? முதல் அதை செய்வோம்.

சரியாகச் சொன்னீர் தோழர் நேசன் அவர்களே. வரும் மாதம் புரட்டாதி 18ம் திகதி Nஐர்மனியில் மாநகரில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது அங்கே அலை கடலென திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புரட்சி

தமிழால்; ஒன்று படுவோம்

எங்கே சிறிலங்கா தூதரகம் முன்பாகவா?

நேசன் கனடாவில் நடந்தது பற்றி அறியவில்லையோ?

அரசியல் அடிப்படையில் தீர்வு.

---------------------------

20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது.

இந்நிலையில் இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையைத் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லுறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழர் பிரச்சினை களுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறது.

அதிகாரத்தைப் பகிர்ந் தளிக்க வசதியாகவும், நிர்வாக முறை தொடர்பாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை யின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத் துள்ளது.

இந்தியாவில் கடைப் பிடிக்கப்படும் நிர்வாக முறையைப் பின்பற்றலாம் என்றும் இந்தியா தெரிவித் துள்ளது. தேசிய அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க உதவி செய்ய அரசியல் சட்ட நிபுணர்களை அனுப்பி வைக்கத் தயாராக இருந்ததா கவும் இந்தியா தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை வலுத்து வருகிறது.

சிங்கள ராணுவப்பிடியில் உள்ள யாழ்ப்பாண நகரை கைப்பற்றுவதற்காக விடு தலைப் புலிகள் தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணம் நகரைச் சுற்றி இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியான முக மாலை மற்றும் வடக்குப் பகுதியில் நேற்று இரு தரப் பினருக்கு நேரடி துப்பாக்கி சண்டை நடந்தது. ராக் கெட்டுக்களை வீசியும் தாக்கிக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு செல் லும் முக்கியப் பாதையான ஏ-9 சாலையை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து உள்ளனர். இதை மீட்க முயன்ற சிங்கள ராணுவம் பலத்த அடி வாங்கி யது. இதனால் புதிய படை களை ராணுவம் களம் இறக்கி யது. அப்படையினர் ஏ-9 சாலையைக் கைப்பற்றும் வகையில் முன்னேறி வந்தனர். அவர்களை விடுதலைப் புலி கள் சுற்றிவளைத்து தாக்கி னார்கள்.

இதற்கு தாக்குப் பிடிக்க முடியாத அவர்கள் பின்வாங்கி பழைய நிலைக்கே ஓடினார் கள். தொடர்ந்து அங்கு சண்டை நடக்கிறது.

இத்தகவல்களை தமிழகச் செய்தித்தாள்கள் வெளி யிட்டுள்ளன. கடந்த 2 நாள் நடந்த சண்டையில் 80 விடு தலைப் புலிகளை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியுள்ளது. ஆனால் தங்கள் தரப்பில் 10 வீரர்கள் மட் டுமே கொல்லப் பட்டதாக வும் புலிகள் கூறியுள்ள னர்.

TAMILMURASU-SINGAPORE

012.jpg

014.jpg

015.jpg

016.jpg

017.jpg

எமக்காய் சிறை சென்ற எம் உறவுகளுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.