Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய அமைப்பின் மாநாடும் சர்வதேச பிராந்திய சக்திகளின் வியூகங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய அமைப்பின் மாநாடும் சர்வதேச பிராந்திய சக்திகளின் வியூகங்களும்
முத்துக்குமார்


பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா அரசு மாபெரும் விழாவாக இதனைக் கொண்டாடுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பின் சின்னம் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகங்கள் இம் மாநாட்டிற்கு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றன. எவ்வாறாவது சர்வதேச ரீதியாக இலங்கை மீது படிந்துள்ள கறைகளை அகற்றவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெளிவாகவே தெரிகின்றது.

மறுபக்கத்தில் இம் மாநாடு தொடர்பான அமர்க்களங்களை வரலாற்றில் ஒருபோதும் இவ் அமைப்பு சந்தித்ததில்லை. இலங்கை அரசின் ஆரவாரங்கள், தமிழ்நாட்டின் போராட்டங்கள், இந்திய அரசின் மத்திய அரசுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் மனித உரிமை நிறுவனங்களின் கண்டனங்கள், கனடாவின் பஸ்கரிப்பு என பலவிடயங்கள் சேர்ந்து உலக அளவில் இம் மாநாட்டினை பெரிய பேசுபொருளாக்கியுள்ளது. இதனை ஒருவகையில் சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும், சர்வதேச, பிராந்திய சக்திகளுக்கிடையிலான ஒரு போர் எனலாம். இப்போர் உலக அளவில் குட்டிநாடான இலங்கையையும் குட்டிச் சமூகமான ஈழத்தமிழர்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசென்று பேசுபொருளாக்கியுள்ளது. தமிழ் மக்கள் சர்வதேச, பிராந்திய மட்டத்தில் போராட்டங்களை நடாத்துவதற்கும் கதவுகளை திறந்துவிட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் மக்களும் இச் சந்தர்ப்பத்தை சரியாகவே பயன்படுத்தியுள்ளனர்.

இம் மாநாட்டினைப் பொறுத்தவரை இதனுடன் தொடர்புபட்ட இந்தியா, மேற்குலகம், சிறிலங்கா ஆகிய மூன்று தரப்புக்களும் தமது நலன்களில் இருந்து வியூகங்களை வகுத்து செயற்படுகின்றன. இந்த வியூகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவையாகவே இருக்கவில்லை.

இம்மாநாடு இலங்கையில் நடாத்தப்படுவதற்கான மூலகாரணி இந்தியாவே. பல நாடுகள் மனித உரிமை விவகாரத்தைக் காரணம்காட்டி இலங்கையில் நடாத்தப்படுவதற்கு சம்மதம் அளிக்க சற்றுப் பின்னடித்தபோதும் இந்தியாவே விடாப்பிடியாக செயற்பட்டு சம்மதத்தை வாங்கிக் கொடுத்தது. இது தொடர்பாக அடுத்தடுத்து ஏற்பட்ட தடங்கல் அனைத்தையும் தனது இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் இல்லாமல் செய்தது. சென்ற தடவை அவுஸ்ரேலியாவில் மாநாடு நடைபெற்றபோது முதலாவது தடங்கல் ஏற்பட்டது. இரண்டாவது தடங்கல் லண்டனில் இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்பட்டது. இரண்டையுமே இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது.

இந்தியாவிற்கு இது விடயத்தில் இருந்த பிரதான இலக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை வலுவோடு காப்பாற்றுவது தான். இலங்கை மீது இந்தியா செல்வாக்கு செலுத்துவதற்கான வலுவான ஆயுதம் இவ் ஒப்பந்தம்தான். இலங்கையை மையமாக வைத்து இடம்பெறுகின்ற இந்திய - சீன பனிப்போரை இந்தியா வெற்றிகொள்வதற்கு கையாளக்கூடிய வலுவான ஆயுதமும் இது தான். புலிகளின் போராட்ட காலத்தில் இவ் ஒப்பந்தம் செயலிழந்திருந்தது. அதனை எப்படியாவது வலுவானதாக்க தற்போது இந்தியா முயல்கின்றது. இதற்கு 13வது திருத்தமும் அதன் அடிப்படையிலான மாகாணசபை முறையும் உயிரோடிருக்க வேண்டும். 13வது திருத்தம் தொடர்ச்சியாக செல்லரிக்கப்படுவது பற்றி இந்தியா பெரிய அளவிற்கு அக்கறை காட்டவில்லை. ஆனால் பெயருக்காவது மாகாணசபைமுறை இருக்கவேண்டும் என்பதில் மிக கவனமாக உள்ளது.இது இருக்கும் வரைதான் இலங்கை இந்திய ஒப்பந்தமும் உயிருடன் இருக்கும் என்பதால் தமிழருக்கான அரசியல் தீர்வு 13வது திருத்தத்தி;ற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பாக தேசியம், சுயநிரணயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்று உருவாகக்கூடாது என்பதில் மிக அக்கறையாக உள்ளது. இது பற்றி முன்னாள் இந்திய பாதுகாப்பு செயலாளர் நாராயணன்; தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினாலும் இந்தியா அதனை அறவே விரும்பவில்லை. காரணம் போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவிற்கும் பெரும் பங்கிருக்கிறது. அதனைக் கிளற வெளிக்கிட்டால் இந்தியாவின் கழுத்தில் கத்தி தொங்கப் பார்க்கும்.

13வது திருத்தத்தை உயிரோடு வைத்திருப்பதற்காகத்தான் வடமாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கு இந்தியா அவசரப்பட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தம் உயிரோடு இருக்கவேண்டும் என்றால் 13வது திருத்தம் உயிரோடு இருக்கவேண்டும். இது உயிரோடிருக்கவேண்டும் என்றால் வடமாகாணசபை பெயருக்காகவாவது நடைமுறையில் செயற்படவேண்டும். இது விடயத்தில் இந்தியாவின் அரசியல் சூத்திரம் இதுதான்.

வடமாகாணசபை தேர்தலை நடாத்தினால் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு மார்ச் மாத ஜெனீவா நெருக்கடியிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என இந்தியா தெளிவான உத்தரவாதம் ஒன்றினை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்தியாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை மாகாணசபைத் தேர்தலை நடாத்தி முடித்துவிட்டது. தற்போது அதற்கான நன்றிக்கடனை தீர்க்கவேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே உத்தரவாதம் அளித்தபடி பொதுநலவாய அமைப்பின் செயற்பாடு சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இந்தியா இவ் நன்றிக் கடனை தீர்ப்பதற்கு அவசரப்படுகின்றது.

இது விடயத்தில் இந்தியாவிற்கு நெருக்கடியை கொடுப்பது தமிழ்நாடு தான். இதனை முன்னரே எதிர்பார்த்தமையினால்தான் வடமாகாணசபை தேர்தலை அவசரமாக நடாத்தி முடிப்பதற்கு முயற்சித்தது. தேர்தல் வெற்றியும் மாகாண சபை நிர்வாகமும் தமிழக எதிர்ப்பு அலைகளை தணியச் செய்யும் என்றே இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் இவற்றிற்கு மாறாக நிலைமைகள் செல்ல ஆரம்பித்தபோது தான் இந்திய மத்திய அரசு குழப்பமடையத் தொடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும் போர்க்குரல் எழுப்ப முயற்சித்தமை புதிய தலைவலியையும் அதற்கு கொடுத்தது. தமிழ்நாடு சட்டசபையில் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டிற்கு செல்லக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மத்திய அரசின் வியூகங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழியாகத்தான் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பயன்படுத்தப்பட்டார். விக்னோஸ்வரன் இந்தியப் பிரதமர் மாநாட்டுக்கு வரவேண்டும் என கருத்து தெரிவித்தமையும் கடிதம் எழுதியமையும் இதன் அடிப்படையில் தான் இடம்பெற்றது. எப்படியாவது இவ்விவகாரத்திலிருந்து தமிழ் நாட்டை அகற்றிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் காலத்தில் தமிழ்நாடு எமது விவகாரத்தில் தலையிடத் தேவையில்லை என விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தமையும் இந்; நோக்கிலேயேயாகும்.

இந்திய மத்திய அரசு இலங்கையை பாதுகாக்க எவ்வாறு தான் முயற்சித்தாலும் அடுத்தவருடம் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே குழம்பிப் போயுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தாம் அன்னியப்பட்ட நிலையில் இருக்கும்போது பிரதமரின் இலங்கைப் பயணம் அதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இது விடயத்தில் தமிழ் நாடா? வெளிநாட்டுக் கொள்கையா? ஏன முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இந்திய மத்திய அரசு உள்ளது.

இந்தியப் பிரதமர் எப்படியாவது மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார். தமிழகத்தின் கோபத்தை தணியச் செய்வதற்கு, மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் யாழ்ப்பாணம் செய்வதற்கு அவர் முயற்சிக்கலாம். விக்னேஸ்வரனையும் சந்திக்கலாம்.

பொதுநலவாய மாநாடு விடயத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் வியூகம் இலங்கை அரசு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதே. இந்தத் திருந்துகை என்பது சீனச் செல்வாக்கிலிருந்து இலங்கை அகன்று விடுவதுதான். திருந்தினால் மேலும் பல சலுகைகள் கிடைக்கும் என்ற சைகைகளும் காட்டப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் மேற்குலகம் மாநாட்டிற்கு ஆதரவு கொடுப்பது இதற்காகத்தான். இலங்கை திருந்தினால் மார்ச் மாத ஜெனீவா நெருக்கடியில் இருந்தும் இலங்கைக்கு விடுதலை கிடைக்கும். திருந்தாவிட்டால் போர்க்குற்ற அழுத்தங்கள் தொடரும். மேற்குலக சக்திகள் பந்தினை எப்போதும் இலங்கையின் பக்கமே எறிந்து வருகின்றனர். இதனால் பொறுப்புக்கள் இவர்களுக்கு அதிகம் இருப்பதில்லை. இந்தியாவைப்போல உள்நாட்டு அழுத்தங்களும் அதிக அளவில் இல்லை. புலம்பெயர் மக்களின் அழுத்தங்கள் இருந்தாலும் அதற்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இந்நாடுகளிற்கு உள்ளது.

இலங்கை இம் மாநாட்டினை தனக்கு கிடைத்த மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றது. இதனை பயன்படுத்தி போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து தப்புவதற்கு முயற்சிக்கின்றது. அதன் முழுக்கவனமும் மேற்குலகு எதிர்பார்க்கின்ற திருந்துகையை மேற்கொள்ளாது தன்னுடைய நலன்களை மட்டும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதே.

இந்த வியூகப் போட்டிகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த்தரப்பிற்கும் சந்தர்ப்பம் இருந்தது. அதுவும் இதில் பெரும் பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கே இருந்தது. ஆனால் அது இவ்விடயத்தில் அக்கறை செலுத்தாமல் தமிழ்த்தேசிய அழிப்பு செயற்பாடுகளிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவும் மேற்குலகமும் வகுக்கும் வியூகங்களிற்கு உதவும் பணியை செய்கின்றதே தவிர அவற்றின் நிகழ்சிநிரல்களுக்குள் தமிழ் மக்களின் நலன்களை சேர்ப்பதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. மாறாக தமிழகமக்களும், புலம்பெயர் மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளை கவிழ்த்துக் கொட்டுவதிலேயே அக்கறையாக இருக்கின்றது.

வரலாறு எப்போதும் சந்தர்ப்பங்களை தருவதில்லை. சில தருணங்களில் மட்டுமே அவற்றைதரும். அதனை பயன்படுத்தாமல் இருந்தால் வரலாறு ஒரு போதும் அத் தலைமையை மன்னிக்காது.


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=ed5f2e09-c785-4f6b-9353-edd50c59aab0

இலங்கை இம் மாநாட்டினை தனக்கு கிடைத்த மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றது. இதனை பயன்படுத்தி போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து தப்புவதற்கு முயற்சிக்கின்றது.

 

வழமை போல உண்மையும், மாயைகளும் கலக்கப்பட்டிருக்கின்றன.  இதை இலங்கை பேறாக கருதுகின்றது என்பதும், போர்க்குற்றத்திலிருந்து தப்ப பாவிக்கும் ஆயுதமாகுகின்றது என்பதும் ஏற்கமுடியாதது. இதை எப்படி போர்க்குற்றத்தில் இருந்து தப்ப இலங்கை பாவிக்க முடியும்? போர்குற்ற விசாரணைக்கான அங்கீகாரம் பாதுகாப்பு சபையால் வரவேண்டியது. இந்த நாடுகள் எங்கே பாதுகாப்பு சபை எங்கே? சின்ன ஒளிக்கீற்றுகள்  ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் பிரேரணைகளில் இருந்து வருகிறது. இந்த நாடுகளுக்கு இவ்வளவு பணம் வாரி இறைத்து கூட்டம் வைப்பதால் இதை அங்கே மாற்றிகொள்ள் முடியுமா? இதில் அரசியல் ரீதியாக அரசு தன்னை நியாயப்படுத்திக்கொள்வதிலும் பார்க்க தன்னை அவமானப்படுத்தி மேலும் பொறிக்குள் இழுத்து இறக்குவதைத்தான் செய்கிறது. இந்த மகாநாட்டில் தான் பாவிக்க போகிற "ஊடகங்களின் களுத்து மீதான சுருக்கு" தன்னை அம்பலப்படுத்துவத்தை மட்டும்தான் செய்யும் என்பது இலங்கைக்கு நன்றாக தெரியும். பேறாக அல்ல அரச குடும்பத்துக்கான பண்மாக கருதிகிறது

 

இலங்கை இந்த மகாநாட்டிலிருந்த்து விலத்தியிருந்தால் 50% மான இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்கும் இடமில்லாமலிருந்திருக்கும். இதை இலங்கையின் அரசியல் வாதிகள் உணரமலும் இல்லை. அவர்களின் போக்கு " பேயிற்கு பயந்தவன் சுடலைக்குக்குள் வீடுக்கட்டுவத்தில்லை" என்பது. அரசு இதை தங்கள் குடும்பங்களுக்கு பணம் இறைக்கும் இயந்திரமாக மட்டும்தான் பாவிக்கிறார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அபகீர்த்தியை பற்றி கவலையே படவில்லை. 

 

இலங்கையை மையமாக வைத்து இடம்பெறுகின்ற இந்திய - சீன பனிப்போரை இந்தியா வெற்றிகொள்வதற்கு கையாளக்கூடிய வலுவான ஆயுதமும் இது தான்.

 

பனிப்போருக்கான மூலகாரணம்தான் 1987ன் "பூமலையும்" இந்த உடன்படிக்கையும். உடன்படிக்கையை விடுவிக்கத்தான் இலங்கை அரசு "இந்தியாவின் இலங்கையை மையப்படுத்திய சீனாவுடனான பனிப்போரை" ஆரம்பித்தது. பனிபோரை உருவாகி இயங்க வைத்திருப்பது சீனா அல்ல; இலங்கையே. இதில் இலங்கைதான் தனக்கு பாதுகாப்பு தேடுகிறது. மறுவழமாக சொல்ல முடியாது. சீனா தானாக இலங்கையில் இறங்கி பனி போரை ஆரம்பிக்கவில்லை.

 

விக்னோஸ்வரன் இந்தியப் பிரதமர் மாநாட்டுக்கு வரவேண்டும் என கருத்து தெரிவித்தமையும் கடிதம் எழுதியமையும் இதன் அடிப்படையில் தான் இடம்பெற்றது.

 

முதல் அமைச்சர் வெளிவிட்ட அறிக்கைக்கு மேலாக சென்று இந்துவின் செய்தியை ஆதராமாக்கி எழுதும் கருத்து.  இதன் ஆதாரம் எங்கும் இல்லை.

 

எப்படியாவது இவ்விவகாரத்திலிருந்து தமிழ் நாட்டை அகற்றிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் காலத்தில் தமிழ்நாடு எமது விவகாரத்தில் தலையிடத் தேவையில்லை என விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தமையும் இந்; நோக்கிலேயேயாகும்.

 

"மத்திய அரசு தமிழ் நாட்டை விலத்த கூட்டமைப்பின் தெரிவாக விக்கினேஸ்வரனை வரவைத்து அவரிடமிருந்து ஒருதபால் எழுதுவித்து வாங்கி, அதை நிரூபணமாக தமிழ் நாட்டில் காட்டி தமிழ் நாட்டை விலத்த முயன்றது" என்று தமிழ்நெட் கூட எழுதியிருக்காது. இது நகைப்பிடமான கருத்து. விக்கினேஸ்வரனின் தெரிவு ஐந்து கூட்டமைப்பின் கட்சிகளால் மட்டும் அல்லாமல் தேசிய தமிழ் மக்கள் முன்னனியாலும் வரவேற்கப்பட்டதொன்று. கூட்டமைப்புக்குள்  விக்கினேஸ்வனை கொண்டுவர மன்னார் ஆயர்  ராயப்புவின் சேவைகளை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்லாமல் அவரையும்  இந்திய ரோவின் கையாள் ஆக்குகிறார் இவர். மாவை நின்றிருந்தால் வாக்குகள் 132,000 மேலாக சென்றிருந்திருக்கலாம்.  ஆனால் மந்திரி பதவிகள் நேரம் நடந்த இழுபறியை வைத்து விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்குள் வராவிட்டால் கூட்டமைப்பின் எதிரிகள் இன்று விருப்பி கட்டுரைகள் வரைவது போல, கூட்டமைப்பு சின்னாபின்னமாகியிருக்கவும் சந்தர்ப்பம் இருந்தது. அந்த ஆசை நிறைவேறாததினால்த்தான் கூட்டமைப்பு மீது இருக்கும் எதிர்ப்பை அந்த ஆசைமீது மண் போட்ட விக்கினேஸ்வரன் மீது கொட்டித்தள்ளுகிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apartheid of Srilanka Government:

PM of India has taken a political decision.  Whether PM participate or not Tamils in Srilanka (Eelam) are not going to get anything as long as the Apartheid of Srilanka Government  continues. Sri Lanka is following an apartheid towards its section of citizens through its Sinhala Only Act 1956. Due to this

1) 1,47,769 people were killed or missing in the war during 2009 as per UN Report.
2) Thirty (30) years development of SriLanka is completely halted. Around 2 Lakh people were killed during the 30 year struggle. The root is still existing as it is without any change. ie) Sinhala Only Act 1956.
3) Tamils living in Eelam (Eastern & Northern) area are treated as 2nd grade citizens.
4) Srilanka had completely devastated in economics and other wealth have been in complete disorder.
5) Independent country to the Tamils is a only hope now.
6) The International Community must create this independent country.
7) The countries participating the Commonwealth are uplifting the Apartheid of Srilanka.

The root cause of the problem should be rectified or a Free Nation "Tamil Eelam" should be created by bifurcating Today's Srilanka. Could you hear this feeble voice ????????????
 

 


இல்ங்கையில் நடைபெற்றது வெறும் 'போர்க்குற்றம்' மட்டுமல்ல. அது ஒரு இனவழிப்பு (Genocide).

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:-
===================================

இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே. அதன் பலன்கள்:-

1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி)
2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர்.
3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம்.
4) கடந்த 30 ஆண்டுகளில் ஆயுத வழி தமிழீழ சுதந்திரப் போராட்டம் இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் துணையுடன் இன்று அடக்கப் பட்டும், அதன் முக்கிய காரணிகள் இன்று வரை அப்படியேதான் இருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டு மேலே குறிப்பிட்டுள்ள 'சிங்களம் மட்டுமே என்னும் 1956இன் சட்டம்.
5) சர்வதேசம், ஐ.நா உட்பட, சிரிலங்காவின் இந்த 'இனவெறிக் கொள்கையை' எவருமே கண்டிக்கவேயில்லை. சிரிலங்காவும் எந்த ஒரு வாய்ப்பையும் தன் தமிழ் குடிமக்களுக்கு வழங்கவேயில்லை.
6) இலங்கையின் இந்த இனவெறிக்கொள்கையை கண்டிக்காமல் 13 என்றும் 13+ என்றும் இந்தியா மற்றும் பல நாடுகள் பசப்புகின்றன. 13 களால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது எதுவுமில்லை.
7) காமன்வெல்த் (CHOGM) - இலங்கையில் நடக்கவிருக்கிறது. இலங்கையின் 1956ஆம் ஆண்டு இனவெறிச் சட்டம் நீக்கப்படுமா? தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? இலங்கையின் இந்த இனவெறிச் சட்டம் நீக்கப்படாமல் - இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் (- பொதுநலவாய நாடுகளின்) கூட்டத்தில் பங்குபெறும் அத்தனை நாடுகளும் 'இலங்கையின் இனவெறிக் கொள்கையையும் அதன் சட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன. இனவெறிக்கொள்கையை தென்னாப்பிரிக்கா கடைபிடித்தால் - தவறு........ இலங்கை கடைபிடித்தால் சரி..... இதுதான் சர்வதேச.....மற்றும் காமன்வெல்த் நாடுகளின் நிலைப்பாடென்றால், ......... சாமானிய மனிதனுக்கு கிடைக்கவேண்டிய எந்த உரிமையையும் கிடைக்காமல் போராடும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் ??????????????????

மனிதநேயம் எங்கு இருக்கிறது ? Human Rigts, Amnesty...UN where are you ???? ஐ.நா, காமென்வெல்த் - உங்களின் நடவடிகை என்ன?


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.