Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட யுத்த முனையில் அசாதாரண அமைதி

Featured Replies

வடக்கில் கடந்த ஒரு வாரகாலத்துக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்றுவந்த முகமாலை, கிளாலிப் போர்முனைப் பகுதியில் சனிக்கிழமை காலை தொடக்கம் இனம் புரியாத மயான அமைதி நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பெரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களும் ஓய்ந்து போயுள்ளன.

முகமாலை அடங்கலாக தென்மராட்சி போர் முனையில் அமைதி நீடிப்பதை படைத்தரப் பும் புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்தன. இடையிடையே ஓரிரு ஷெல்கள் வெடித்தன. எனினும் அப்பிரதேசத்தில் சண்டை ஓய்ந்துள்ளது என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தப் பகுதிகளில் இருதரப்பினரிடையேயும் கடும் சண்டை இடம்பெற்றதாகத் தெரிகிறது. அன்று மாலை தாண்டி இரவு வரை நீடித்த மோதல் களில் இராணுவத் தரப்பில் 28சிப்பாய்கள் வரை உயிரிழந்தனர் என்று இராணுவ வட்டா ரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர் சனிக்கிழமை காலை பரஸ்பரம் ஷெல், மற்றும் பீரங் கித்தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொண் டன. அதன்பிறகு போர் முனையில் இனம்புரியாத அமைதிநிலை நீடித்தது.

இரண்டு தரப்புகளும் அடுத்த கட்ட நட வடிக்கைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்து வதற்கான இடைவெளியாக இது இருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.

அரசுப் படைகள் அப்பகுதியில் வலிந்து தாக்கும் முயற்சிகளில் ஈடுபடாததால் தமது போராளிகள் எதிர்த் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. இதனா லேயே அமைதிநிலை காணப்படுகிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

இதேவேளை

தொடர்ச்சியாக புலிகளின் ஷெல் வீச்சுக்கு இலக்காகி வந்த பலாலி விமானத் தளத்தில் இராணுவ விமானம் ஒன்று தரையிறங்கிச் சென்றிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி "சண்டே ரைம்ஸ்' தெரிவித்தது.

பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று கடந்த புதனன்று பலாலி விமானத் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது என் றும், விமானம் தரையிறங்கிய வேளை அங்கு ஹெலிக்கொப்டர்கள் அதற்குப் பாதுகாப்பு வழங்கின என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சண்டை மூண்டது முதல் பலாலி படை முகாமுடனான ஆகாய வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. விமா னங்கள் அங்கு தரையிறங்குவது தடைப்பட் டது. இரவு வேளைகளில் ஹெலிக்கொப்டர்கள் மட்டும் அங்கு தரையிறங்க முடிந்தது.

ம்.. நேற்று இரவுகூட பதிவு சங்கதி தளங்களிலிருந்து பல செய்திகளை இனைத்திருந்தார்கள். இச்செய்தியை குதறும்வண்ணம் முற்றும் முரனான செய்தி இத்தளத்தில பிரதிசெய்திருந்தார்கள்..

இதோ அந்த செய்திகள்..

கோட்டைப் படைமுகாமிலிருந்து பொதுமக்களின் குடிமனைகள் நோக்கி எறிகணைத் தாக்குதல்.

பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

நேற்று மாலை தொடக்கம், யாழ் கோட்டை - பலாலி படைத் தளங்களில் இருந்து, பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

கோட்டைப் படைத் தளத்தில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் பல்குழல் உந்துகணைகள் ஏவப்படுகின்றன.

சிங்களப் பயங்கரவாதப் படைகளால் ஏவப்படும் எறிகணைகள், தென்மராட்சி மந்துவில், மிருசுவில், கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவன வட்டாரங்கள் தகவல்

http://sankathi.org/news/index.php?option=...w&id=132&Itemid

சிறிலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்.

வடபோர்முனையில் பாரிய அளவிலான படைநகர்வுகளை மேற்கொள்ள முடியாது முடங்கியுள்ள சிறிலங்கா படைகள் இன்று பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

நேற்று மாலை தொடக்கம் யாழ் கோட்டைபகுதியிலிருந்தும், பலாலி படைத் தளங்களில் இருந்தும் பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து சிறிலங்கா பயங்கரவாதப் படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

கோட்டைப் படைத் தளத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி சிங்களப் பயங்கரவாதப் படைகளால் பல்குழல் உந்துகணைகள் ஏவப்படுகின்றன.

சிறிலங்காப் படைகளால் ஏவப்படும் எறிகணைகள் தென்மராட்சி மந்துவில், மிருசுவில், கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

வடக்கில் கடந்த ஒரு வாரகாலத்துக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்றுவந்த முகமாலை, கிளாலிப் போர்முனைப் பகுதியில் சனிக்கிழமை காலை தொடக்கம் இனம் புரியாத மயான அமைதி நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பெரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களும் ஓய்ந்து போயுள்ளன.

முகமாலை அடங்கலாக தென்மராட்சி போர் முனையில் அமைதி நீடிப்பதை படைத்தரப் பும் புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்தன. இடையிடையே ஓரிரு ஷெல்கள் வெடித்தன. எனினும் அப்பிரதேசத்தில் சண்டை ஓய்ந்துள்ளது என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தப் பகுதிகளில் இருதரப்பினரிடையேயும் கடும் சண்டை இடம்பெற்றதாகத் தெரிகிறது. அன்று மாலை தாண்டி இரவு வரை நீடித்த மோதல் களில் இராணுவத் தரப்பில் 28சிப்பாய்கள் வரை உயிரிழந்தனர் என்று இராணுவ வட்டா ரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர் சனிக்கிழமை காலை பரஸ்பரம் ஷெல், மற்றும் பீரங் கித்தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொண் டன. அதன்பிறகு போர் முனையில் இனம்புரியாத அமைதிநிலை நீடித்தது.

இரண்டு தரப்புகளும் அடுத்த கட்ட நட வடிக்கைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்து வதற்கான இடைவெளியாக இது இருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.

அரசுப் படைகள் அப்பகுதியில் வலிந்து தாக்கும் முயற்சிகளில் ஈடுபடாததால் தமது போராளிகள் எதிர்த் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. இதனா லேயே அமைதிநிலை காணப்படுகிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

இதேவேளை

தொடர்ச்சியாக புலிகளின் ஷெல் வீச்சுக்கு இலக்காகி வந்த பலாலி விமானத் தளத்தில் இராணுவ விமானம் ஒன்று தரையிறங்கிச் சென்றிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி "சண்டே ரைம்ஸ்' தெரிவித்தது.

பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று கடந்த புதனன்று பலாலி விமானத் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது என் றும், விமானம் தரையிறங்கிய வேளை அங்கு ஹெலிக்கொப்டர்கள் அதற்குப் பாதுகாப்பு வழங்கின என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சண்டை மூண்டது முதல் பலாலி படை முகாமுடனான ஆகாய வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. விமா னங்கள் அங்கு தரையிறங்குவது தடைப்பட் டது. இரவு வேளைகளில் ஹெலிக்கொப்டர்கள் மட்டும் அங்கு தரையிறங்க முடிந்தது.

மதியில்லாமல் எழுதுகிறார்களோ.....

:lol::D:D

எதுவாக இருந்தாலும் உமக்கென்ன மட்டுறுத்துனர்களை தொல்லைப்படுத்தாதே நண்பா. பிறகு எங்களுக்கு கெட்ட வார்த்தைகள் வரும். இராவணன் பாவம் மதி.

சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே

புயலுக்கு முன்னைய அமைதி!!!

கடந்த இரு நாட்களாக யாழ்குடாவின் போர்முனைகளில் அமைதி நிலவி வருகிறது. திருகோணமலையிலும் எவ்வித தாக்குதல் சம்பவங்கள் இடம் பெறவில்லை.

விடுதலைப்புலிகள் தமது தரப்பு இழப்புக்களையும் இராணுவத்தின் இழப்புக்களையும் அறிவித்த பொழுதே, சண்டைகளுக்கு தற்காலிக ஓய்வு வரப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் தமது தரப்பில் 88 போராளிகள் வீரச்சாவடைந்து உள்ளதாகவும், இராணுவத்தினர் 485 பேர் பலியானதாகவும் அறிவித்துள்ளனர்.

யாழ் குடாவில் ஒரு வாரமாக நடந்த சமர் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரும் இழப்புக்களையும் தோல்விகளையும் கொடுத்துள்ளது. சிறிலங்காவின் சிறப்புப் படையணியாகிய 53ஆம் படையணி பலத்த சேதத்திற்கு உள்ளாகியது. இப் படையணியையே சண்டைக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப் படையணி அமெரிக்க கொமாண்டோ பயிற்சிகளை பெற்ற படையணி என்பதோடு, வலிந்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற ஒரு படையணியாகும். இப் படையணிக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சிறிலங்கா இராணுவத்தின் சண்டையிடும் வலுவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் யாழ் குடாவின் பல பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை மூட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா இராணுவம் தள்ளப்பட்டது. சிறிலங்கா இராணுவம் தற்பொழுது முகாம்களை மூடிவிட்டு அப் பகுதிகளில் மாலை வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். ஆயினும் இது போன்று ரோந்து நடவடிக்கைகள் மூலம் அப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் நிலை கொள்ளுவதை தடுக்க முடியாது என்பதை சிறிலங்கா இராணுவத்தினர் விரைவில் உணர்ந்து கொள்வர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் யாழ் குடாவின் பல பகுதிகளில் சண்டை இல்லாமலேயே முகாம்களை அகற்றியதோடு, யாழ் குடாவையும் கடுமையாக முற்றுகைக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் நேற்று மட்டுமே பலாலி வான்தளத்தில் ஒரு சிறிலங்கா விமானம் தரையிறங்கிச் சென்றுள்ளது. இதுவும் அங்கு நிலவுகின்ற அமைதியைப் பயன்படுத்தியே நடந்தது. மீண்டும் சண்டைகள் ஆரம்பமாகின்று பொழுது எந்த ஒரு விமானமோ, கப்பலோ யாழ் குடாவை சென்றடைவது என்பது நடவாத காரியமாகவே இருக்கும்.

விடுதலைப்புலிகள் யாழ்குடாவை நீண்ட கால முற்றுகைக்குள் உட்படுத்தி, அதன் மூலம் சிறிலங்கா இராணுவ இயந்திரத்தையே முற்று முழுதாக செயலிழக்க வைக்கும் நோக்கோடு செயற்படுவது போன்றே தெரிகிறது.

விடுதலைப்புலிகளின் பலத்தை நன்கு அறிந்து கொண்ட மேற்குலகம் சிறிலங்கா அரசை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்லும்படி கடும் அழுத்தம் கொடுக்கிறது. மேற்குலகின் முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த சண்டை ஓய்வு கருதப்படுகிறது.

ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. மாவிலாறை விடுதலைப்புலிகள் திறந்து பின்னும், சிறிலங்கா அரசு இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியது போன்று இம் முறையும் நடந்து கொள்ளும் என்றே நம்பப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தின் படையணிகள் வவுனியாப் பகுதியில் குவிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முகமாலைப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் அணிகளை ஓமந்தை நோக்கி வரச் செய்வதற்கு அப் பகுதியில் தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே தற்பொழுது நிலவுகின்ற அமைதி எந்த நேரத்திலும் ஒரு பெரும் போராக மாறக்கூடிய சூழ்நிலைகளே காணப்படுகின்றது.

http://www.webeelam.com/

வாலைவிட்டு தும்மைபிடிக்கிற கதைதான் :)

கண்காணிப்புக் குழுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேறி கொழும்பிற்கு சென்றுவிட்டார்கள அல்லது செல்லப் போகிறார்கள். அடுத்த மாதம் புதிய கண்காணிப்பாளர்கள் குழுத் தலவர் வந்த பிறகு மறுசீரமைக்கப்பட்ட பின்னர் களத்திலுள்ள நிலமைகளை பொறுத்து வடக்கு கிழக்கிற்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

பல வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களும் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறுவதாக சொல்லபடுகிறது.

அமெரிக்க உளவுத்துறைக்கும்.. இதற்கும் சம்பந்தம் இருக்கலாமென தோன்றுகின்றது.. சற்று நிதானமாக ஆராய்நு முடிவெடுங்கள்..

:idea:

அமெரிக்க உளவுத்துறையால் செய்யக் கூடியதுக்கு அப்பால் செய்யத் தெரியாமலே இருக்கினம்...! ஆனா இன்று பலாலிக்கு சிறீலங்கா விமானப்படை விமானங்கள் போய் வந்திருக்கு. அதுமட்டுமில்லாமல் புலிகளின் 130 எம் எம் ஆட்லறிகளை விமானப்படை பூநகரியில் தகர்த்தாதவும்...அதனால் புலிகளின் பலாலி மீதான தாக்குதல் தணிந்துள்ளதாகவும் படையினர் சொல்லினம். அப்படியே முகமாலைச் சண்டையில் பல புலிகள் பலி என்றும் படம் காட்டினம்..! இதில எதை நம்பிறது பொது சனம்..! :idea:

அமெரிக்க உளவுத்துறைக்கும்.. இதற்கும் சம்பந்தம் இருக்கலாமென தோன்றுகின்றது.. சற்று நிதானமாக ஆராய்நு முடிவெடுங்கள்..

:idea:

முடிவு எடுக்க இது என்ன உம்மட பாராளுமண்றமே...???? எடுக்க வேண்டியவர்கள்தான் முடிவை சூப்பராக எடுத்து இருக்கிறார்கள்....!

இந்தியா வான்வளியாய் தமிழர் பகுதிக்கு குறிப்பாய் வன்னிக்கு உணவு கொடுக்க வேண்டும் எண்று இந்த தமிழர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்து இருக்கு... இந்தியா ஏற்கனவே முடிவு எடுத்திட்டுது இனி நீங்கள்தான் முடிவு எடுக்க வேணும்... தமிழரை கொல்வதா இல்லையா எண்று...! இனி சமாதானம் எண்டுது பேரளவில் மட்டும்தான்.... தனிநாடு தூரத்தில் இல்லை... (தமிழகம் அதை வரவேற்கவும் போவதுல்லை) கொலைகாறர் எண்று முத்திரை குத்தப்பட்ட இலங்கை சிங்களவனோடு சமாதானமா... அதுவும் அரச பயங்கர வாதிகளுடன்...!

வாவ்.. வொன்டர்ஃபுள்.. வொன்டர்ஃபுள்.. உந்த நியூஸ் வேறையொரு தளத்திலையும் வரயில்லை.. இருந்தாலும் நீங்கள் இப்பிடி சொன்னால் நானென்ன மறுப்பே?

ம்.. அப்ப சோத்துப்பாசல் விழுமெண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கினமெண

வாவ்.. வொன்டர்ஃபுள்.. வொன்டர்ஃபுள்.. உந்த நியூஸ் வேறையொரு தளத்திலையும் வரயில்லை.. இருந்தாலும் நீங்கள் இப்பிடி சொன்னால் நானென்ன மறுப்பே?

ம்.. அப்ப சோத்துப்பாசல் விழுமெண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கினமெண

வாவ்.. வொன்டர்ஃபுள்.. வொன்டர்ஃபுள்.. உந்த நியூஸ் வேறையொரு தளத்திலையும் வரயில்லை.. இருந்தாலும் நீங்கள் இப்பிடி சொன்னால் நானென்ன மறுப்பே?

ம்.. அப்ப சோத்துப்பாசல் விழுமெண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கினமெண

தமிழர் அனைவரும் தமிழின் கீழ் ஒன்றினைந்தால் மகிழ்ச்சியே.... தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கையில் இதெல்லாம் எவ்வளவு நாளுக்கு என்று தெரியவில்லை.

மக்களின் அநுதாப அலையை `vote` ஆக்கும் அரசியல் தந்திரமே தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் நடந்திருக்கிறது.

தமிழ்நாடு மக்களின் எழுச்சியில் ஏதும் குறையில்லை.

ஆனால் வழிநடத்த போகும் அரசியல்வாதிகளில்????? :roll:

ம்.. வடயுத்த முனையில் அசாதாரண அமைதியெண்ட தலைப்பு இங்கை.. அங்கை மட்டக்களப்பு வடமுனையிலை ஞாயமான அளவு அக்ரிவிற்றி நடந்திருக்கு.. அரசியல்வேலை திறம்பட செய்யிறதா சொல்லி மூண்டுபேரை பிடிச்சதா படமும் வேறை காட்டுறான்.. பாத்திருப்பியள்தானே.. :idea:

ம்.. வடயுத்த முனையில் அசாதாரண அமைதியெண்ட தலைப்பு இங்கை.. அங்கை மட்டக்களப்பு வடமுனையிலை ஞாயமான அளவு அக்ரிவிற்றி நடந்திருக்கு.. அரசியல்வேலை திறம்பட செய்யிறதா சொல்லி மூண்டுபேரை பிடிச்சதா படமும் வேறை காட்டுறான்.. பாத்திருப்பியள்தானே.. :idea:

ஓ.... பாத்தனான்........... நல்ல கற்பனை வளம் எண்டு கூட சொல்ல முடியாத கேவலம்.... என்ன செய்ய உங்கட ஆக்களின் அறிவாற்றல் அவ்வளவுதான் என்னும் போது....! :wink: :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.