Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநர் சந்திரசிறியின் முகத்தில் கரியை பூசிய அனந்தி!

Featured Replies

  news_11-11-2013_20chandirasri.jpg

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தது. 

இந்நிலையில் சிறிலங்கா அரசியலமைப்பிற்குட்பட்ட வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரை நிகழ்ந்தினார்.

ஆளுநரின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தானும் மேலும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாக அனந்தி சசிதரன் கூறினார்.

சந்திரசிறி இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்த போது வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி அவதிகள் தொடர்பில் மூன்று உறுப்பினர்களும் தெளிவான செய்தியை அனுப்ப விரும்பினோம் என்றார்.

மாகாண சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்னர் அனந்தி சசிதரன் அதற்கான காரணங்களை விளக்கி உரையாற்றினார்.

பெண் என்ற முறையில் யுத்தத்தின் போது வடக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கு பிராந்தியத்திற்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.paristamil.com/tamilnews/view-news-MzA1Mzg1Njcy.htm#.UoDM7_nrw_Q

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையின் 2வது அமர்வில் ஆளுநர் சந்திரசிறியின் உரையை புறக்கணிக்க அனந்தி முடிவு!

 
download-33.jpg
 

வடக்கு மாகாணசபையில்  இன்று நடைபெறவுள்ள 2வது  அமர்வின் போது இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.

குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும் கூட்டிக் காட்டியுள்ளார்.download-24-300x158.jpg

இவை தவிர இவரை வவுனியா தடுப்பு முகாம்களின் இணைப்பாளராக நியமித்த வேளையிலேயே முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். இவற்றை தாம் மறக்க முடியாதென அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அத்துடன் முதலமைச்சரே ஆளுநரை வேண்டாம் என்று சொன்ன பின் அவரது உரையை கேட்கும் தேவை எமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மற்றொரு மாகாணசபை அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் தான் நாளைய ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாண சபையின் அங்கத்தவரான சுகிர்தன், ஆளுநரின் சிறப்புரையை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அதன் தலைவர்களை நாய்கள் என பகிரங்கமாகப் பேசியவர் இந்த ஆளுநர்.

நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்காக முழு அளவில் வேலை செய்தவர்.download-43.jpg

பகிரங்கமாக மேடையேறி ஆளும் தரப்பின் வெற்றிக்காக பாடுபட்டவர்.

இவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எந்த தேவையுமில்லை’ எனக் கூறினார்.

இதேவேளை,  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல கூட்டமைப்பு அங்கத்தவர்களும் நாளைய ஆளுநரது சிறப்புரையினை பகிஸ்கரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newmannar.net/2013/11/11/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/

 

ஆளுநரின் உரை புறக்கணிப்பு தொடர்பில் திரு.சிவாஜிலிங்கம், திருமதி.அனந்தி சசிகரன் ஆகியோர் வழங்கிய கருத்துக்கள்

 

 

 

http://www.pathivu.com/news/28033/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.