Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ஸவின் கட்டவுட்டுக்களும் குடாநாட்டு மக்களின் அவலங்களும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸவின் கட்டவுட்டுக்களும் குடாநாட்டு மக்களின் அவலங்களும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இரண்டாம் இணைப்பு:-

Mahinda%20cut%20out_CI.jpg
 

மஹிந்தவின்; கட் அவுட்களை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யபப்பட்ட அப்பாவி  இளைஞர்கள் நால்வரும் மேலதிக விசாரணைக்கென வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸின் வடக்கு தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ்   நிலையத்தில்; தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிற்கு மேலதிக விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இராணுவத்தினராலேயே கைது செய்யப்பட்டிருந்ததாக இலங்கைப் பொலிஸ் அறிவித்திருந்தது.

இது பற்றி மேலும் தெரியவருகையில் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குறித்த நான்கு இளைஞர்களும் தெல்லிப்பழை பொலிசாரிடம் நேற்று திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

தெல்லிப்பழை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர்.

இவர்கள் சனசமூக நிலைத்திறக்கு அண்மையாக இருந்து கதைத்தக் கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் நால்வர் அதில் இருந்த இளைஞர்களை தாக்கியதுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்தினரின் மேலதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதனை தொடர்ந்து சுமார் இருபத்தைந்தக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப் பகுதில் நின்றிருந்த ஏனையவர்களையும் தாக்கியதுடன் பெண்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களான 22வயதுடைய நாகேஸ்வரன் சிறீயர்சன்,  21 வயதுடைய ரவீந்திரன் கஜீபன், 35 வயதுடைய முருகையா அசோக்குமார் மற்றும் 30 வயதுடைய அல்பிரட் பிரதீபன் ஆகியவர்களே கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.

இதனிடையே கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் வவுனியாவிற்கே மேலதிக வாரணைக்கென கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு:- மகிந்த ராஜபக்ஸவின் கட்டவுட்டுக்களும் குடாநாட்டு மக்களின் அவலங்களும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

25-11-2013 - 19:38

யாழ்.குடாநாட்டில் தொடரும் மஹிந்த கட்அவுட்கள் கிழிப்பு மற்றும் தீவைப்பின் தொடர்ச்சியாக இன்று தெல்லிப்பளை கிழக்கில் கட்அவுட் ஒன்று சேதமாகிய நிலையில் படையினரின் பார்வையில் சிக்கி உள்ளது. குறித்த பகுதியிலுள்ள சூடுவெந்த இடம் எனும் கிராமத்திலுள்ள நாமகள் வாசிகசாலை அருகாக நாட்டப்பட்டிருந்த மஹிந்த கட்அவுட்டே இவ்வாறு சேதமான நிலையில் காணப்பட்டு உள்ளது.


இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு படையினர் குவிக்கப்பட்டு அருகாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த  இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


எனினும் அக்கட்அவுட் அண்மைய மழையினாலேயே வீழந்ததாக குறித்த இளைஞர்கள் தெரிவித்த காரணத்தை ஏற்க மறுத்த படையினர் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர் என தெரியவருகிறது. இதில் சிலர் காயங்களிற்கு உள்ளானதாக கூறப்பட்ட போதும் இரவு அப்பகுதிக்கு வெளியார் செல்ல அனுமதிக்கப் படாமையினால் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.


முன்னதாக யாழ். நகரப்பகுதியில் கடந்த ஒரு சில வாரங்களினுள் மட்டும் ஜந்திற்கும் அதிகமான தீவைப்பு மற்றும் தாக்கி சேதப்படுத்தல் காரணமாக மஹிந்தவின் கட்அவுட்கள் சேதமடைந்திருந்தன. இறுதியாக யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் தேவாலயம் மற்றும் ஆயர் இல்லத்திற்கு அருகாகவிருந்த கட்அவுட் இரவோடிரவாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. எனினும் அக்கட்அவுட் படையினரால் அருகாகவுள்ள முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கட்டவுட் அல்லது சுவரொட்டிகள் காணப்படும் இடங்களை மழை, வெய்யில், இயற்கையின் சீற்றங்களில் இருந்து பாதுகாத்து பேணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99486/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில், நேற்றிரவு கூடி Attack.jpgகதைத்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்த மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டியுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
 
தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் கூடி கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
 
இதன்போது அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் சிலர் குறித்த இளைஞர்களை இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கின்றீர்கள் என கூறி சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவே மேலும் அப்பகுதிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மேலும் சிலரை தாக்கியுள்ளதுடன் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
 
தாக்குதலுக்குள்ளான நான்கு இளைஞர்களும் ஜனாதிபதியின் பதாதைகளை கிழித்ததாக கூறி தெல்லிப்பளை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
 
நாகேஸ்வர ஸ்ரீ தர்சன் (வயது22)  ரவீந்திரன் கஜீபன் (வயது21), முருகையா அசோக்குமார் (வயது35), அல்பிரட் பிரதீபன் (வயது30) ஆகியவர்களே இவ்வாறு தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த திரியில் எழுத யாரும் வரமாட்டார்கள். இவர்களுக்கு பட, ஆட தெரியாது என்பதால் இவர்களின் உடம்பில் உணர்வுநரம்புகள் இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 


இந்த திரியை பின் பண்ணினால் பின் பண்ணியவர்களுக்குத்தான் இழுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.