Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும்

முத்துக்குமார்

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசாங்கம் இதுபற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. வழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக வீடுகளை கட்டுதல், தொழில்களை உருவாக்குதல், பாடசாலைகள் போன்ற பொது நிறுவனங்களின் உள்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கவேண்டியிருந்தது. இன்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் செல்த்துண்டுகளை உடம்பில் காவிச் செல்கின்றனர். இவர்களுக்கு அவசர மருத்துவ வசதி திட்டங்கள் உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. அங்கவீனர்களை பராமரிப்பதற்கு விசேட ஒதுக்கீடு தேவைப்படுகின்றது. இவை எவை பற்றியும் அரசாங்கம் அக்கறைப்படவில்லை.

உண்மையில் இலங்கையின் ஏனைய மக்களின் நிலைக்கு வடக்கு கிழக்கு மக்களைக் கொண்டு வருவதற்கு விசேடமான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் தேவை. மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கத்தான் போதுமானது.

இது மொத்தத்தில் தமிழ் மக்களை முழுமையாக புறக்கணித்த வரவு செலவுத் திட்டமாக அமைந்தது. பேரினவாத அரசிடம் இருந்து இதனை தவிர வேறென்றையும் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் எதுவும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டஉரையினைப் புறக்கணித்திருந்தன. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்து கொண்டது. எதிர்க்கட்சிகள் பகிஸ்கரித்தபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்ட உரையினை பகிஸ்கரிக்காமைக்கு இணக்க அரசியல் செய்வது என முடிவெடுத்தமை தான் காரணம் என நினைக்கின்றேன். கூட்டமைப்பு எப்போது மாகாணசபை முறையினை ஏற்றுக்கொண்டு வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டதோ அன்றே இணக்க அரசியலுக்கும் தயாராகிவிட்டது.

மாகாண சபை என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு. அதனை ஏற்றுக்கொண்ட பின்னர் மத்திய அரசிற்கு எதிராக எவ்வாறு தான் எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளமுடியும்? இந்தியாவும் இணக்க அரசியலை முன்னெடுக்கும்படி கூட்டமைப்பிற்கு கட்டளையிட்டிருக்கலாம்.

இணக்க அரசியல் என்பது சமத்துவமான நிலையில் விட்டுக்கொடுப்புடன் மேற்கொள்ளப்படும் ஓர் அரசியலாகும். போரில் வெற்றி பெற்ற தரப்பிற்கும் தோல்வி அடைந்த தரப்பிற்கும் இடையில் எவ்வாறுதான் இணக்க அரசியல் ஏற்பட முடியும். சாராம்சத்தில் இது சரணாகதி அரசியலே. இதுவரை காலமும் டக்ளஸ் தேவானந்தா நடாத்திய அரசியலுக்கும் இதற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் கிடையாது. இங்கு இணக்க அரசியல் என்ற பெயரில் இதுவரை கால தியாகம் நிறைந்த போராட்டத்தை காட்டிக்கொடுக்க முற்பட்டது தான் மிகப்பெரிய சோகம்.

மறுபக்கதில் அரசாங்கம் இவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது. முதலமைச்சரின் கோரிக்கைகள் எவற்றையும் அரசாங்கம் கணக்கெடுப்பதில்லை. தனக்குப் பிடிக்காத அதிகாரி ஒருவரை மாற்றித் தரும்படி முதலமைச்சர் கேட்டபோதும் ஜனாதிபதி இணங்கவில்லை. ஆளுநரை மாற்றுவது பற்றி டேவிற் கமரூனிடம் முதலமைச்சரும் சம்மந்தனும் முறையிட்ட போதும் அரசாங்கம் அக்கறை எதனையும் செலுத்தவில்லை. ஒரு சிவிலியன் ஒருவர் ஆளுநராக வந்தாலும் ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு இணங்குவாரே ஒழிய முதலமைச்சரின் கட்டளைகளை ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை.

இரண்டு தடவை வடமாகாணசபைக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. உப்புச்சப்பற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவே தவிர எந்த நியதிச்சட்டங்களும் உருவாக்கப்படவில்லை. உண்மையில் நியதிச்சட்டங்களை உருவாக்குவதற்கான சுயாதின அதிகாரம் மாகாணசபைகளுக்கு கிடையாது. நியதிச் சட்டத்தை மாகாணசபையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெறவேண்டும். இதனை ஆளுநர் தான் பெற்றுக்கொடுக்க வேண்டும். கிழக்கு மாகாணசபையில் இவ்வாறான 24 வரையான சட்ட மூலங்கள் ஆளுநர் ஊடாக சட்டமா அதிபரின் அனுமதியை பெறுவதற்காக காத்திருக்கின்றன. சட்டமா அதிபர் சம்மதம் அளித்தாலும் மாகாணசபை சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் ஆளுநர் அதற்கு சம்மதம் அளித்து கையொப்பம் இடவேண்டும்.

மொத்தத்தில் எந்தவித பிரயோசனமுமற்ற மாகாண சபையினையே பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் யாழ் வருகை தந்த டேவிற் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது மிகப்பெரிய துரோகத்தனமாகும்.

இங்கு பாராளுமன்றம், மாகாணசபைகளில் தமிழர்கள் அங்கம் வகிப்பது பயனுடையதா? என்ற கேள்வி எழுகின்றது. இதில் பாராளுமன்றத்தையம், மாகாணசபையையும் நாம் வேறுபடுத்தியே பார்க்கவேண்டும். பாராளுமன்றம் அரசியல் தீர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது தமிழ் மக்களிற்கு எதுவும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மைதான். வரலாறு அதனை நன்கு நிருபித்திருக்கின்றது. மகாவம்ச மனநிலயில் இருந்து சிங்கள தேசம் மாறாதவரையில் தமிழ் மக்களுக்கு பாராளுமன்றம் பெரிய பயன்களைத் தரப்போவதில்லை. சிங்கள தேசம் அவ்வாறு மாறும் என்பதற்கான நம்பிக்கைக் கீற்றுக்களும் அண்மைக்காலத்தில் உருவாகுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

இந்நிலையில் சிறிலங்கா அரசு கட்டமைப்பிற்கு புறம்பான பொறிமுறையை சர்வதேசத்தின் உதவியுடன் உருவாக்குவது பற்றியே யோசிக்கவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு வரும்வரை தமிழ்த் தேசத்தை பாதுகாப்பதற்கு இத்தகையைய பொறிமுறை அவசியம். இவ்வாறான இடைக்கால நிர்வாகக் கோரிக்கையினை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே முன்வைத்திருக்கின்றது.

பாராளுமன்றம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்பது உண்மையாயினும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடிய ஓர் அரசியல் மேடையாக அதனைப் பயன்படுத்தலாம். அவ்வாறு வரலாற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு சட்டமூலங்கள் வருகின்றபோது தமிழ் மக்களின் நிலையில் நின்று அதனை விமர்சிப்பதற்கு முயற்சிக்கவேண்டும். தமிழ் மக்கள் சார்பான தனிநபர் தீர்மானங்களை கொண்டுவந்து அரசினை அம்பலப்படுத்த வேண்டும். கேள்வி நேரங்களை ஒழுங்காக பயன்படுத்தவேண்டும். முக்கியமான சந்தர்ப்பங்களில் போராட்டங்களை நடத்தி உலகின் கவனத்தை தமிழ் மக்களின் பால் குவிக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவை எவற்றையும் காத்திரமாகச் செய்வதில்லை. பலர் பாராளுமன்ற கூட்டத்திலும் ஒழுங்காக கலந்து கொள்வதில்லை.

மாகாணசபை பாராளுமன்றத்தை போன்றது அல்ல. அது அரசியல் தீர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் தீர்வுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. இந்தியா மாகாணசபை முறையினையே அரசியல் தீர்வாக திணிக்கப் பார்க்கின்றது. வடமாகாணசபை அமைக்கப்பட்ட பின் இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் தமிழ்களுக்கென ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என பிரச்சாரம் செய்கின்றனர்.

மாகாணசபையினால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றாலும், எதுவும் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த ஒரு கருவியாக அதனைப் பயன்படுத்தலாம். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப் பணியினை ஒரு போதும் செய்யப்போவதில்லை. கிழக்கு மாகாணசபை இதற்கு நல்ல உதாரணமாகும். அங்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பாத்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் காத்திரமாக எதனையும் செய்யவில்லை. மாறாக மாகாணசபை முறை பயனுடையது என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த சுயாதினமும் கிடையாது. அது இந்தியாவின் வெறும் பொம்மை. இந்தியாவிற்கு இலங்கைமீது செல்வாக்கு செலுத்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்பது அவசியம். மாகாணசபை நடைமுறையில் இருந்தால் தான் அதனை பாதுகாக்க முடியும்.

எனவே மாகாணசபையில் எந்த ஒரு அதிகாரமும் இல்லாவிட்டாலும் கூட்டமைப்பு அதனை கைவிடப்போவதில்லை.

மலையக மக்களையும் இவ் வரவு செலவுத் திட்டம் திருப்திப்படுத்தியது எனக் கூறமுடியாது. மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய ஒரு சமூகம். அதனை ஏனைய சமூகங்களுக்கு இணையாகக் கொண்டுவருவதற்கே சிறப்பு வேலைத்திட்டங்கள் தேவையாக உள்ளது. இன்றும் கூட இலங்கைத்தீவில் தாம் வாழும் நிலத்திற்கு சொந்தமற்றவர்களாக இருப்பவர்கள் அவர்களேயாவர்.

வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கென 50.000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 10.லட்சத்திற்கு மேற்பட்ட மலையக மக்கள் வாழ்கின்ற சூழலில் இது அவர்களுக்கு போதுமானதல்ல. தவிரவும் இவ் 50.000 வீடுகளும் மாடிவீடுகளாக கட்டப்போவதாகவே செய்திகள் வருகின்றன. மலையக மக்களுக்கு நிலத்தை சொந்தமாக வழங்கும் பொறுப்பினை தட்டிக்கழிக்கின்ற ஒரு முயற்சியா என இது தொடர்பாக சந்தேகம் கொள்ளவேண்டியும் உள்ளது. மாடிவீடுகள் நகரங்களுக்கே பொருத்தமானவை. மலையகத்தில் போதுமான அளவு நிலம் இருக்கும்போது இது தேவையற்றது. வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு முன்னர் அவர்களுக்கு போதுமான நிலங்களை சொந்தமாக்கிக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் வீடுகளை அவர்கள் சுயமாககூட கட்ட முயற்சிக்கலாம்.

அதைவிட சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறு தேயிலைச் சொந்தக்காரர்களில் 90 வீதமானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தச் சலுகை மலையக மக்களக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=1122e9bb-def8-4086-bbc2-671daefc68f4

65 வருடமா சலுகை வருது மக்கள் முன்னேறியதாக தெரியவில்லை.

இந்த பிச்சைக்கார பட்ஜெட்டிலும் எங்களுக்கு ஒன்றும் கிடைக்கபோவதில்லை.

பட்ஜெட்டில் 65% ராஜபக்சே குடும்பத்திற்கு போகபோகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.