Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, மாலைதீவு, சிறிலங்கா முத்தரப்பு கடல் பாதுகாப்பு கருத்தரங்கு நிறைவு – கூட்டுப் பயிற்சி தொடர்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india-srilanka-maldives.jpg

சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் முத்தரப்பு பேச்சுக்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளன. 

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள,சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, 

“இந்தியக் கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்கள் கடந்த 18ம் நாள் திருகோணமலைக்கு வந்தன. 

இவை திருகோணமலையில் தரித்து நின்று முத்தரப்பு பேச்சுக்களில் பங்கேற்றன. 

இந்த பேச்சுக்களின் முடிவில், மேலதிக நடவடிக்கை குறித்த திட்டம் ஒன்று வரையப்படும். 

இந்த முத்தரப்பு பேச்சக்கள், முக்கியமாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பது, கடற்கொள்ளையை தடுப்பது குறித்தே நடத்தப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவுக்கு படகில் அகதிகள் செல்வது முற்றாகவே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

முன்னரைவிட சிறிலங்காவின் சிறப்பு பொருளாதார கடல் எல்லை 29 மடங்கு விரிவாகியுள்ள நிலையில், அதனைக் கண்காணிக்க குறைந்தது ஐந்து கப்பல்கள் கடற்படைக்குத் தேவைப்படுகிறது. 

சிறிலங்காவுக்கு மேற்கே 6000 கடல்மைல் தொலைவில் அராபியக் கடலில் செயற்படும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளால் சிறிலங்காவுக்கு உடனடியாக பாதிப்பு ஏதும் இல்லை. 

இந்தப் பிராந்தியத்தில் செயற்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா கடற்படை தரமுயர்த்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trilateral-Tabletop-Exercise.jpg

இந்த முத்தரப்பு பேச்சுக்களில் சிறிலங்கா இராணுவம் மற்றும் விமானப்படையும் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளன. 

இந்த பேச்சுக்களுக்காக திருகோணமலைக்கு வந்த இந்தியக் கடலோரக் காவல்படையின் விஸ்வாஸ்ட், ராஜ்கமல் ஆகிய கப்பல்கள், நேற்றுவரை திருகோணமலையில் தரித்திருந்தன. 

அவை அங்கிருந்து புறப்பட்டு, நாளை கொழும்புத் துறைமுகத்தை அடையவுள்ளன. 

வரும் 26ம் நாள் வரை இவை இரண்டும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும். 

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படை மற்றும், கடலோரக் காவல்படையுடன் இணைந்து தேடுதல், மீட்பு, உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகளில் இந்தியக் கடலோரக் காவல்படையினர் ஈடுபடவுள்ளனர். 

அத்துடன், திருகோணமலைக்கும், கொழும்புக்கும் இடையில் பயண ஒத்திகை ஒன்றிலும் இவை ஈடுபடவுள்ளன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131221109662

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொள்ளையருக்கும் இலங்கைப் பிராந்தியத்தக்கும் என்ன சம்பந்தம்?? சோமாலியாவில் கடற்கொள்ளைத்தொழில் ஏறக்குறைய நிறுவனமயப் படுத்தப்பட்டதுபோல் நடக்கிறது. முதலீட்டாளர்கள், ஊதியம், இலாபப் பங்கீடு எனப் போகிறது அங்கு.. அவர்கள் இங்கு வருவது என்பது நடக்கக்கூடியது அல்ல..

இது இந்தியாவின் கடலாண்மைக்கு சவால் விடும் முயற்சி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.