Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெட்டா? மொழியா? எது உயிர் ? 'கங்காரு' ஆடியோ வெளியீட்டுவிழாவில் வைரமுத்து விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வி "ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, ப்ரீத்திதாஸ் நடித்துள்ளனர்.

பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது ''பாடகராக அறிமுகமான ஸ்ரீநிவாஸ் பாடகர்களைப் பாடவைக்கும் இசையமைப் பாளராக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி. பாடலில் மெட்டு  உயிர்.  மொழி உருவம் என்று தொகுப்பாளர் கூறியதில் நான் செல்லமாக முரண்படுகிறேன். சிலநேரம் பாடலில் மொழி உயிராக இருக்கும். சில நேரம் மெட்டு உயிராக இருக்கும். இரண்டும் மாறி மாறி வரும்.
இதை இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் புரிந்து கொள்ளவேண்டும். சில பாடல்களில்மெட்டுக்கு  முக்கியத்துவம் இருக்கும். சில பாடல்களில் மொழிக்கு முக்கியத்துவம் இருக்கும்.  இந்த இரண்டும் எது உயர்ந்தது என்று தெரியாதபடி இசையமைப்பதுதான் நல்ல பாட்டு. அப்படி ஸ்ரீநிவாஸ் தெரிந்து கொள்ளாதபடி செய்துள்ளார்.' என்றார். 

ஸ்ரீநிவாஸ் பேசும் போது "இந்தப் படத்தில் வைரமுத்துசார் ஐந்து பாடல்களையும் எழுதியிருப்பதை நான் பாக்கியமாகக் நினைக்கிறேன்.

இங்கு ஏ.ஆர். ரகுமான் சார் வந்திருக்கிறார். அவரிடம் நான் இசையமைக்கும் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு நீங்கள் வரவேண்டும் என்று கேட்ட போது சற்றும் தயங்காமல் எங்கே வரவேண்டும் எப்போது வரவேண்டும்என்றார். அவருக்கு எப்படி நன்றி சொல்வது?வாழ்க்கையில் இந்தநாளை மறக்க முடியாது"என்றார்.

''ஸ்ரீநிவாஸ் மெலடி ரசிகர்.அவர் சிறப்பாகவே செய்வார் வாழ்த்துக்கள்''. என்றார் ஏ.ஆர். ரகுமான்.

"செவி குளிர சிந்தை மகிழ அங்கிங்கெனாதபடி புவிஎங்கும் இசைஉலா வர வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி'' என்றார் கலைப்புலி எஸ்.தாணு.

இயக்குநர் வசந்த் பேசும்போது தன் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்துக்கு ஒரு பாடலை ஸ்ரீநிவாஸ் இசையமைத்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

''ஸ்ரீநிவாஸ் பாடல்பதிவு இல்லாத காலங்களில் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக இருக்க விரும்பினார். இதுபற்றி நான் ரகுமான் சாரிடம் கேட்ட போது. பறக்க வேண்டிய நிலையிலிருப்பவர் ஏன் நடக்க ஆசைப் படுகிறார்? என்று கேட்டார். அப்போதே இவரது திறமையை மதிப்பிட்டு இருந்தார்"என்றார்.


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் போது "இந்தக் கதையை சாமி முன்பே சொன்னார். ஆனால் அவர்காட்டிய பாடல்களுக்கான ட்யூனைக் கேட்டுவிட்டுத்தான் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்''. என்றார்.

இயக்குநர் சாமி ''இந்த படவாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் ஒத்துழைத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி'' என்று கூறினார். 

 

vara.jpg

 

 

http://www.cinemaprofile.com/tamil-cinema/news/660/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html

மாண்புமிகு வைரமுத்து அவர்களின் இந்த வரிகளை வளர்ந்து வரும் ஈழத்து கவிஞ்சனர்கள் ,இசை அமைப்பாளர்கள் நிச்சயம் கருத்தில் கொள்ளனும்...............உண்மையில் எனது சிறு அனுபவத்தில் சந்தங்களுடன் வரிகள் அமையும் பொது அருமையான மெட்டு உருவாகும் .என்னை பொறுத்த வரை வரிகளே ஒரு பாடலின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்வேன் . :)
 
  • கருத்துக்கள உறவுகள்

 

மாண்புமிகு வைரமுத்து அவர்களின் இந்த வரிகளை வளர்ந்து வரும் ஈழத்து கவிஞ்சனர்கள் ,இசை அமைப்பாளர்கள் நிச்சயம் கருத்தில் கொள்ளனும்...............உண்மையில் எனது சிறு அனுபவத்தில் சந்தங்களுடன் வரிகள் அமையும் பொது அருமையான மெட்டு உருவாகும் .என்னை பொறுத்த வரை வரிகளே ஒரு பாடலின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்வேன் . :)

 

 

 

இதுக்குத்தான் 

அதுக்கு

அதுக்கு

அவனவன் வேண்டுமென்பது.......... :icon_idea:

 

எனக்கு அவர் சொன்னதில் ஒன்றும் புரியல.. :(

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துபற்றி நான் அளவுகடந்த மரியாதை வைத்திருந்தேன். அவரது பாடல்களும், அதற்கு இசை தந்து உயிர்கொடுத்த இளையராஜாவின் வரிகளும் காலத்தால் அழியாதவை. ஆனால், வைரமுத்து என்கிற கவிஞர் 2009 உடன் என்னிடமிருந்து பிரிந்து போனார். ஈழத்தில் தமிழன்னை குற்றுயிரும் குலைஉயிருமாகக் கிடக்க, அந்த அன்னைக்கு செம்மொழி விழா நடத்தி அவளின் அவலத்தை தமிழக மக்களின் கண்களிலிருந்து மறைத்து தனது பண, குடும்ப அரசியலுக்காக ஒரு இனத்தையே காவுகொடுத்த அரக்கனின் விழாவில் வெறும் ஒரு கோடி ரூபா பணத்துக்காகப் பங்கேற்று தமிழ்த்தாயின் அழிவுக்குத் தானும் காரணமாகவிருந்த இந்த தரம்கெட்ட வியாபாரி வைரமுத்து இப்போது என்னிடமிருந்து காணாமல்ப் போய்விட்டார். 

 

ஒவ்வொரு நிகழ்சிக்கும் இவ்வளவு ரேட் என்று பேசி கராராகக் கறந்துகொள்ளும் இவரெல்லாம் கவிஞர் என்று வலம் வருவது அவலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.