Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ? – அடுத்தவாரம் பரபரப்பாக கூடும் பொதுக்குழுக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vijayakanth-vaiko-ramadass-291213-150.jp

விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஓரணியில் இடம் பெறுவரா என்ற கேள்விக்கு விடை சொல்ல, அடுத்த மாதம், 2ம் தேதி பா.ம.க.,வும், 4ம் தேதி ம.தி.மு.க.,வும், 5ம் தேதி தே.மு.தி.க.,வும் பொதுக்குழுவை கூட்டுகின்றன. தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைப்பதற்கான, முதல்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும் அணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. ஆனால், தே.மு.தி.க., மட்டும், இன்னும் சம்மதம் சொல்லவில்லை. "பொங்கலுக்கு முன், அணியை முடிவு செய்து விட வேண்டும். அதன்பிறகு, தேர்தல் பணியை துவங்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.

  

எனவே, அதற்கு வசதியாக, "சீக்கிரம் முடிவை சொல்லுங்கள்' என, தே.மு.தி.க.,வுக்கு, பா.ஜ., தரப்பில், "பிரஷர்' கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கட்சிப் பொதுக்குழுவை, விஜயகாந்த் அவசரமாக கூட்டியுள்ளார் என, தெரியவந்துள்ளது. கூட்டணி குறித்து, இந்த 3 கட்சிகளிடமும், பா.ஜ., சார்பில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசி வருகிறார்.முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ள அவர் கூறியதாவது:

பா.ஜ., அணியில் பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும் சேர்வது உறுதியாகி உள்ளது. தே.மு.தி.க., மட்டும், கட்சியினரின் கருத்தை கேட்டு, முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளது. அதை சீக்கிரம் சொல்லும்படி, அக்கட்சி தலைவர் விஜயகாந்திடம் வலியுறுத்தி உள்ளோம். அதற்காக, அவர் கட்சி பொதுக்குழுவை, ஜனவரி, 5 ல் கூட்டியிருக்கிறார். அதில், அவர், நல்ல முடிவு எடுப்பார். அந்த முடிவை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், பேச்சுவார்த்தை நடத்தும் எங்களிடம் தெரிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியதை அடுத்து, கட்சி செயற்குழுவை கூட்டி, விஜயகாந்த் ஏற்கனவே விவாதித்துள்ளார். அப்போது, பா.ஜ., கூட்டணிக்கு தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதும், அவரது கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்புகளில் இருந்து, பா.ஜ., கூட்டணியை ஆதரித்து, தலைமைக்கு நிறைய கடிதங்கள் அனுப்பப்படுவதாக, அந்த கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதற்கிடையில், திடீரென்று, தி.மு.க.,வும் கதவை திறந்துள்ளதால், தே.மு.தி.க., வின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், தி.மு.க., தரப்பில் தொடர்ந்து விடப்பட்டுள்ள தூது முயற்சிக்கு, தே.மு.தி.க., தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த தூது முயற்சிக்கு கூட, "தை பிறந்த பிறகே, கூட்டணி பேச்சு' என, விஜயகாந்த் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. எனவே, பா.ஜ., அணியில் சேர்வதற்கான ஆதரவு கருத்து தான், தே.மு.தி.க., வட்டாரத்தில் அதிகம் காணப்படுகிறது என்றும், அடுத்த மாதம், 5ம் தேதி, கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு பின், பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும், தே.மு.தி.க.,வினர் கூறுகின்றனர்.

இந்த அணியில் இடம்பெறுவதற்கான ஒப்புதல் பெற, பா.ம.க., தலைவர் ராமதாசும், கட்சிப் பொதுக்குழுவை, ஜன., 2 ல் கூட்டியுள்ளார். பா.ம.க., தே.மு.தி.க., பொதுக்குழுவுக்கு இடைப்பட்ட நாளில், ம.தி.மு.க.,வும் பொதுக்குழுவை கூட்டி, தன் முடிவை தெரிவிக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்று, ஜன., 4 ல், ம.தி.மு.க., பொதுக்குழு, சென்னையில் கூட்டப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு முன், புத்தாண்டு தினத்தன்று, பத்திரிகையாளர்களை சந்திப்பது வைகோவின் வழக்கம். அந்த சந்திப்பு முடிந்ததும், வைகோவை சந்தித்து பேசவிருப்பதாகவும், பொங்கலுக்கு பின், இந்த தலைவர்கள் கூட்டாக, பத்திரிகையாளர்களை சந்திக்க, ஏற்பாடு செய்து வருவதாகவும், தமிழருவி மணியன் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100224&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தயவுசெய்து இந்த முறை ஈழம் என்ற சொல்லை கையிலெடுக்காதீர்கள்.
முதலில் சுயமாக அரசியல் செய்து முன்னுக்கு வாருங்கள்.
அதற்கப்புறம் ஈழத்திற்க்காக குரல் கொடுங்கள்.
 
ஏனெனில் பார்த்த விழிகள் ஏங்கிய விழிகள் நிறைந்த பூமி அது..வெகு சுலபமாக  பிரச்சனைகள் தீராது.......
 
உங்களின் 50 வருட கால ஈழத்து அரசியல் நடவடிக்கைகளை கண்குளிர கண்ட ஈழத்தமிழனின் ஆதங்கம் இது..
 
 
ஈழமெனும் வஞ்சகமில்லா பூமி உங்கள் பேரப்பிள்ளைகளும் அரசியல் செய்ய காத்திருக்கின்றது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.