Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனவரி 6, இன்று வேட்டி கட்டும் தினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேஷ்டி தினம்: ஜனவரி 6ல் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிய உத்தரவு.

 

நெல்லை: பாரம்பரிய மரபை பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து வேஷ்டி தினம் கொண்டாடுமாறு கோஆப் டெக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதனையடுத்து ஜனவரி 6ம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிந்து பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

 

04-dhoti-day-600.jpg

 

தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6 ம் தேதி வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து , நெல்லை ஆட்சியர் கருணாகரன் வேஷ்டி விற்பனையை தொடங்கி வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கருணாகரன், ஜனவரி 6 ம் தேதி (திங்கள் கிழமை) பணிக்கு வரும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் விருப்பத்துடன் வேஷ்டி அணிந்து பணிக்கு வர வேண்டும்.

ஆரோக்கியமான ஆடை அணிவதன் மூலம் அதன் மகத்துவத்தை அறியும் வாய்ப்பு ஏற்படும். நெசவாளர்களின் உழைப்பினால் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகளை பொது மக்களும் விரும்பி அணிய வேண்டும் என்றார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29-1388299228-dhoti343-600-jpg.jpg

 

மரபைப் பறைசாற்றுவோம்- வேஷ்டி அணிந்து மகிழ்வோம்: சகாயம் அறைகூவல்.

 

சென்னை: அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருநாள் வேஷ்டி அணிந்து வேஷ்டி நாள் கொண்டாடுமாறு சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து, கூட்டு நெசவு (கோ ஆப் டெக்ஸ்) பணியாட்சித் துறை அரசு அலுவலகங்களுக்கு அதன் இயக்குநர் சகாயம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

அதில் சகாயம் கூறியிருப்பதாவது...

 

நாகரீகத்தின் நளினத்தை வெளிப்படுத்திய தமிழர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரீகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள் தான்.

 

ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்கள்.

அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு.

 

வேஷ்டி அணிவது குறைந்து விட்டது

இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேஷ்டி அணிவது குறைந்து விட்டது. இப்போது, வீறார்ந்த வேஷ்டியைக் காணமுடியவில்லை.

மண்ணின் மனம் கமழும் வேஷ்டி

பரம்பரையின் பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டி தான்.

வேஷ்டி என்பது வெறும் ஆடையின் அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு.

 

வேஷ்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும், வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், "வேஷடி நாள்' கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது .

 

வேஷ்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேஷ்டி நாளாகக் கொண்டாடுங்கள்.

ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேஷ்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

 

இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும், கூட்டு நெசவு (கோஆப்டெக்ஸ்ன்) விற்பனைக்கு உதவக் கூடியது ஆகும். எனவே, இந்த திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு கட்டத்தெரிஞ்சது நாலு முளம் வேட்டிதான்.நல்ல காத்தோட்டமா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.