Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் மீனவர்களை சந்திக்கும் நம்பிக்கையில் சன் றைஸ் கடற்கரைக்கு சென்றேன். 

மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த கடற்கரை. கடலிற்கு செல்வதற்கு சிறிய கட்டுமரத்துடன் ஒரு குடும்பம் தயாராக இருந்தது. 40வயது மதிக்கத்தக்க ஒருவர் மேலாடையின்றி வெறும் சறத்துடன் மட்டும் கட்டுமரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் றோச்சர். 

சிறிது காலத்திற்கு முன்னர் தான் இந்த கடற்கரையை சுனாமி அடித்துச்சென்றது. 250'000 உயிர்களை பலியெடுத்து, 2.5 மில்லியன் மக்களை உடமையற்றவர்கள் ஆக்கியது. சுனாமி அடித்து ஆறு மாதங்களின் பின்னர் சிறிலங்காவில் மீள்கட்டமைப்பு எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வந்தேன். எனது பயணம் அருகம் குடாவில் (Arugam Bay) தொடங்கியது.

இங்கே தான் நான் றோச்சர் குடும்பத்தை சந்தித்தேன். அவருடன் உரையாடிய சில நிமிடங்களிலயே மீள்கட்டமைப்பு என்ற பெயரில் நடைபெறும் யாரும் அறிந்திராத மறுபக்கத்தை தெரிந்துகொள்ள முடிந்தது.

இந்த மீள்கட்டமைப்பு என்பது மீனவர்களை கடற்கரையிலிருந்து விரட்டியடிப்பதே அன்றி வேறொன்றுமில்லை. இந்த திட்டம் சுனாமி வரமுன்னரே ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுனாமியின் பின்னர் சுனாமி இந்த திட்டத்தினை முழு வீச்சுடன் செயற்பட வைத்தது என்றார் றோச்சர். 
பதினைந்து வருடங்களிற்கு முன்னர் ஏனைய குடும்பங்களுடன் இதே கடற்கரையில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். தங்களின் மீன்களை இதே கடற்கரையொட்டி இருக்கும் நட்சத்திர விடுதிகளிற்கு விற்றார்கள். உல்லாச பயணிகளுடன் இவர்களால் உலா வர முடிந்தது.
இந்நிலமை 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை தொடங்கும் வரை மாத்திரமே நீடித்தது. இதை சமாதானம் என்பதை விட சண்டைக்கு ஒரு இடைவேளை என்று குறிப்பிடலாம். 

இப்பொழுது முதல் இலங்கை பல பிரயாண நிறுவனங்கிற்கு (Travel Agency) இன்னொரு தாய்லாந்தாக உருவெடுத்தது. அழகான கடற்கரை, காரசராமான உணவுகள், கடற்கரையின் நிலாவொளி, ஒரு அருமையான களியாட்ட புள்ளி (a hot party spot) என்று Lonely Planet பிரயாண வழிகாட்டி விளம்பரம் செய்தது. 

சமாதான காலத்தில் மீனவர்கள் மட்டும் அருகம் குடாவிற்கு மீள்குடியேறவில்லை. உல்லாசப்பயணிகளின் வருகையும் அதிகரித்தது. இப்பொழுது நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் பயணிகளின் உல்லாசத்தை மீனவர்கள் கெடுப்பதாக புகார் செய்யத்தொடங்கினார்கள். மீனவர்களிற்கும் விடுதி உரிமையாளர்களிற்குமான சண்டை சுனாமி வருவதற்கு 6 மாதங்களிற்கு முன்னர் சூடு பிடிக்கத்தொடங்கியது. ஓர் இரவு குடிசகைளின் மீது தீ பற்றிக்கொண்டது. 24 குடிசகைள் இல்லாமல் போயின. றோச்சரின் குடும்பத்தின் குடிசையும் இதில் ஒன்று. இந்த தீ விபத்து யதார்த்தமாக நடந்ததாக இங்கே யாரும் கருதவில்லை. இது விடுதி முதலாளிகளின் வேலை என்றே பலர் கருதினர். 

ஆனால் இந்த தீ மீனவர்களை பயம்கொள்ள செய்யவில்லை. மாறாக அவர்களிற்குள் இருந்த ஒற்றுமையை இன்னும் அதிகரித்தது. குடிசைகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன. 

ஆனால் தீ செய்யமுடியாததை 6 மாதங்களின் பின்னர் வந்த சுனாமி செய்துமுடித்தது.மீன்பிடி படகுகள், குடிசைகளை மட்டும் அழிக்கவில்லை. அங்கே இருந்த உல்லாச விடுதிகளையும் அடித்துச்சென்றது. 4'000 மக்களை கொண்ட இந்த சமூகத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். றோச்சர் போல கடலை நம்பி வாழ்ந்தவர்களே இதில் அதிகம்.சுனாமி வந்து சென்ற பின்னர் இந்த கடற்கரை சுத்திகரிக்கப்பட்ட ஒரு சொர்க்கமாக காட்சியளித்தது. 

மீனவர்கள் தங்களின் வாழ்விடங்களிற்கு திரும்பியபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இப்பொழுது ஒரு "புதிய சட்டம்" நடைமுறையில் உள்ளது என்றனர். கடற்கரையிலிருந்து 200மீற்றர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே குடிசைகள் அமைக்க முடியும் என்றனர். ஆனால் 200மீற்றர் தொலைவில் மீனவர்களிற்கு காணிகள் இருக்கவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட இந்த "பாதுகாப்பு வலையம்" (Puffer Zone) அருகம் குடாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிழககு கடற்கரைக்குமே நீடிக்கப்பட்டது. 

இலங்கையில் மட்டும் சுனாமி 35'000 உயிர்களை பலியெடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை இடம்பெயர வைத்தது. இதில் 80வீதம் மீனவர்களே. சில இடங்களில் இவர்களின் எண்ணிக்கை 98 வீதமாகவும் இருந்தது. நிவாரணப்பொருட்களை பெறுவதற்காகவே ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு தற்காலிகமாக நகர்புறங்களின் அமைக்கப்பட்ட கூடாரங்களிற்குள் குடியேறினார்கள். இந்த கூடாரங்கள் ஆயுதம் தாங்கிய படையினரால் கண்காணிக்கப்பட்டது. 

இந்த பாதுகாப்பு வலயம் (Puffer Zone) எதிர்காலத்தில் இன்னொரு சுனாமி வந்தால் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் குறைப்பதற்காகவே அமைக்கப்பட்டது என்கிறது அரசாங்கம். ஆனால் இந்த பாதுகாப்பு வலயம் உல்லாசத்துறைக்கு விதிவிலக்காக இருந்தது. அவர்கள் தங்களின் புதிய உல்லாச விடுதிகளை முன்னர் மீனவர்கள் வாழ்ந்த இடங்களிலயே கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்படியென்றால் சுனாமி இந்த உல்லாசப்பயணிகளை ஒன்றும் செய்யாதா என்றார் றோச்சர்.

றோச்சரின் கருத்துப்படி இந்த பாதுகாப்பு வலயம் என்பது சுனாமிக்கு முன்னர் செய்ய நினைத்திருந்தார்கள். மீனவர்களை கடற்கரையோரத்திலிருந்து விரட்டியடித்தலே இப்பொழுது பாதுகாப்பு வலயமாக உருவெடுத்துள்ளது.

-Naomi Klein, The Shock Doctrine-

தமிழில்: யாழ் செங்கொடி

Edited by செங்கொடி

இணைப்புக்கு நன்றி செங்கொடி.


இதன் மூல இணைப்பினையும் குறிப்பிட்டு விடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.