Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர்

Featured Replies

நியூசி., வெற்றி : கோஹ்லி சதம் வீண்
ஜனவரி 18, 2014.
 

 

நேப்பியர்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விராத் கோஹ்லி சதம் வீணானது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55), வில்லியம்சன் (71), இருவரும் அரைசதம் கடந்தனர். பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரான்கி (30), நாதன் மெக்கலம் (2) ஏமாற்றினார். கடைசி நேரத்தில்  அதிரடியில்  மிரட்டய கோரி ஆண்டர்சன்  அரைசதம் கடக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கோரி ஆண்டர்சன் (68), சவுத்தி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி  4  விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்சமா ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் சர்மா (3) தாக்குபிடிக்கவில்லை. தவான் (32) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ரகானே (7), ரெய்னா (18) ஏமாற்றினர். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி (123)  ஒருநாள் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுக்க  கேப்டன் தோனி(40) ஓரளவு கைகொடுத்தார். பின்வரிசை வீரர்கள் ஏமாற்ற,  இந்திய அணி 48.4 ஓவரில் 298 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷமி  (7) அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/01/1390067052/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - கோஹ்லி சதம் வீண் நேப்பியர்: விராத் கோஹ்லி போட்ட அபாரமான சதம் வீணாகிப் போனது.

நியூசிலாந்துடனான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. இன்று முதல் போட்டி நேப்பியரில் நடந்தது. இந்திய அணியின் கேப்டன் டோணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இன்று இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி என்று மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - நியூசிலாந்தும் 3 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் மெக்கல்லம் மட்டும் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து சிறப்பாக ஆடி ரன்க குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் மற்றும் ரெய்டரை எளிதாக இந்தியா வீழ்த்தி விட்டாலும் பின்னால் வந்த வில்லியம்சன், டெய்லர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை நிமிர்த்தி விட்டனர். வில்லியம்சன் 71 ரன்களைக் குவித்தார். டெய்லர் 55 ரன்கள் எடுத்தார். மெக்கல்லம் 30 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம், ஆண்டர்சன்தான் நியூசிலாந்துக்கு கடைசி நேரத்தில் ரன் குவிய முக்கியக் காரணமாக அமைந்தார். அதிரடியாக ஆடிய அவர் 40 பந்துகளில் 68 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - கோஹ்லி சதம் வீண் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 292 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து. இந்திய அணித் தரப்பில் முகம்மது ஷமி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். மற்ற யாருமே சொல்லிக் கொள்ளும்படியாக பந்து வீசவில்லை. இதுதான் இந்திய அணியின் மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை நியூசிலாந்து நொறுக்கி விட்டது. 9 ஓவர் வீசி 72 ரன்களை வாரிக் கொடுத்த இஷாந்த் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பின்னர் ஆட வந்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 3 ரன்களில் வீழ்ந்தது அடியாக விழுந்தது. இருப்பினும் ஷிகர் தவானும், விராத் கோஹ்லியும் நிலைத்து நின்று ஆட ஆரம்பித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தவான், 32 ரன்களில் வீழ்ந்தார். ஆனால் கோஹ்லி அட்டகாசமாக ஆட ஆரம்பித்தார். நியூசிலாந்து பந்து வீச்சை தைரியத்துடன் எதிர்கொண்ட ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கூடியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோஹ்லி அபாரமான சதத்தையும் போட்டார். 111 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடந் 123 ரன்களைக் குவித்து கோஹ்லி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்தியாவின் நம்பிக்கையும் மங்கிப் போனது. கடைசி நேரத்தில் அஸ்வின் மீது லேசான நம்பிக்கை பிறந்தது. ஆனால் அதுவும் சீக்கிரத்திலேயே முடிந்து போனது. இறுதியில், 48.4 ஓவர்களிலேயே 268 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் கதை முடிவுக்கு வந்தது.

http://tamil.thatscricket.com/news/2014/01/19/virat-kohli-s-ton-vain-as-india-lose-1st-odi-001876.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு இரண்டாவது அடி
ஜனவரி 21, 2014.

ஹாமில்டன்:  நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0-1 என பின்தங்கியிருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (20), கப்டில் (44) ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. போட்டடியின் 17 ஓவர் முடிவில், லேசான மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டியில் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் (77), ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட, போட்டியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ராஸ் டெய்லர் (57) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில், அதிரடியாக ரன்கள் சேர்த்த கோரி ஆண்டர்சன் 17 பந்தில் 44 விளாச, நியூசிலாந்து அணி 42 ஒவரில், 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணிக்கு ‘டக்வொர்த்-லீவிஸ்’ முறைப்படி இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்காக நர்ணயித்தது.

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (20), ஷிகர் தவான் (12) ஜோடி சொதப்ல் துவக்கம் அளித்தது ரகானோ (35) தாக்குபிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கோஹ்லி (78) அரைசதம் கடந்தார்.  ரெய்னா (35) ஓரளவு கைகொடுத்தார்.  கேப்டன் தோனி (56) அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின்வரிசை வீரர்கள் சொதப்ப,  இந்திய அணி, 41.3 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து  ‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி நியூசிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/01/1390324319/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி 'டை'யில் முடிந்தது! 

 

 

ஆக்லாந்து: ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது. இன்று டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பீல்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி 'டை'யில் முடிந்தது! 20 ரன்னில் வெளியேறிய ரைடர் அந்த அணியின் தொடக்க வீரர் ரைடர் 20 ரன்னில் வெளியேற பின்னர் வந்த வில்லியம்சன், குப்திலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். வில்லியம்சன் 65 ரன் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் அவுட் ஆனார். குப்தில் சதம் பின்னர் அதிரடி ஆட்டக்காரரான ஆண்டர்சன் 8 ரன்னில் வெளியேறினார். டெய்லர் 17 ரன்னிலும், மெக்குல்லம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் அபாரமாக விளையாடி குப்தில் தனது 5வது சதத்தை நிறைவு செய்தார். 111 ரன் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்தில் அவர் அவுட் ஆனார். 314 ரன்கள் குவிப்பு 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் குவித்தது. ஜடேஜா, ஷமி 2 விக்கெட்டுகள் இந்தியா தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இந்திய அணி ஆடியது. நல்ல தொடக்கம் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். ரோகித் சர்மா 39 ரன்களையும் தவான் 28 ரன்களையும் எடுத்தனர். சீக்கிரம் அவுட் ஆன கோஹ்லி இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் கோஹ்லில் 6 ரன்களே எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதேபோல் ரஹானே 3 ரன்களில் அவுட் ஆனார். டோணி அரைசதம் சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோணி இருவரும் நிலைத்து ஆடினர். டோணி 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அசத்திய அஸ்வின் - ஜடேஜா பின்வரிசை வீரர்கள் சொதப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அஸ்வினும் ஜடேஜாவும் அசத்தினர். அஸ்வின் 65 ரன்கள் எடுத்தார். பரபர கடைசி ஓவர் ஜடேஜா நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்திய அணி வெல்ல 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த பந்தில் ஜடேஜா ஒரு ரன் அடிக்க இந்திய அணி 314 ரன்களை எட்டியது. டையில் முடிந்தது 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை எடுத்தது. இதனால் இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. நியூசிலாந்து முன்னிலை 5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகளில் நியூசிலாந்து வென்றுள்ளதன் மூலம் அந்த அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/sports/india-chase-315-third-odi-against-new-zealand-192083.html

  • தொடங்கியவர்

ஜடேஜா, அஷ்வின் துணிச்சல் ஆட்டம்: மூன்றாவது போட்டி ‘டை’
 

 


ஆக்லாந்து: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி ‘டை’ ஆனது. இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு சவாலில் வீழ்ந்த இந்தியா 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் வெளியேற்றப்பட்டு, வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றார். நியூசிலாந்து அணியில் மில்ஸ்க்கு பதில் பெனிட் சேர்க்கப்பட்டார்.

கப்டில் அசத்தல்:

நியூசிலாந்து அணிக்கு ரைடர் (20) விரைவில் வெளியேறினார். பின் ஜோடி சேர்நத் கப்டில், வில்லியம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தன் பங்கிற்குஅஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட வில்லியம்சன் அரை சதம் எட்டினார். இவர் ஷமி பந்தில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோரி ஆண்டர்சன் 8 ரன்களில் அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷமி பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த கப்டில் ஒரு நாள் அரங்கில் 5வது சதத்தை பதிவு செய்தார். இவர் 111 ரன்களில் அவுட்டானார்.

கேப்டன் பிரண்டன் மெக்கலம் டக்–அவுட்டானார். டெய்லர் (17), நாதன் மெக்கலம் (1) ரன்களில் வெளியேறினர். ரான்கி 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மெக்லீனகன் (1) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் ரன் சேர்த்த சவுத்தி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 314 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்திய அணி சார்பில் ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கோஹ்லி அதிர்ச்சி:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. மெக்லீனகன் பந்துவீச்சில் ரோகித் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். சவுத்தி பந்தை சிக்சருக்க பறக்கவிட்ட தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் 39 ரன்களில் ஆண்டர்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 6 ரன்களில் அவுட்டாகி, அதிர்ச்சி தந்தார். ரகானேவும் 3 ரன்களில் ஆண்டர்சன் வேகத்தில் வெளியேறினார்.

அஷ்வின் அரை சதம்:

தோனி, ரெய்னா ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சவுத்தி பந்தில் ரெய்னா 31 ரன்களில் அவுட்டானார். ஆண்டர்சன் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி அரை சதம் எட்டினார். ஆனால், அடுத்த பந்தில் (50) இவரிடமே சிக்கினார். பின் ஜோடி சேர்ந்த அஷ்வின், ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடியது. அஷ்வின் அரை சதம் கடந்தார்.

போராடிய ஜடேஜா:

நாதன் பந்தில் அஷ்வின் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் (4), ஷமி (2) ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. இதில் போராடிய ஜடேஜா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது.

ஜடேஜா (66), ஆரோன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய அணியின் ஜடேஜா வென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/01/1390583749/kohliindiacricket.html

  • தொடங்கியவர்

டெய்லர் அசத்தல் சதம்: தொடரை வென்றது நியூசி.

,
ஜனவரி 27, 2014.
 


ஹாமில்டன்:  இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் சதம் அடித்து கைகொடுக்க, 7 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரையும் 3–0 என கைப்பற்றியது.

 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இதையடுத்து இந்திய அணி 2–0 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தவான் நீக்கம்:

நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர் மெக்லீனகன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மில்ஸ், நீஷன் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் மோசமான பார்ம் காரணமாக துவக்க வீரர் ஷிகர் தவான், ரெய்னா ஆகியோர் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி அறிமுக வீரராக இடம் பிடித்தார். அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டார்.

சொதப்பல் துவக்கம்:

இந்திய அணிக்கு எப்போதும் மூன்றாவது வீரராக களமிறங்கும் விராத் கோஹ்லி இம்முறை துவக்க வீரராக வந்தார். நல்ல ‘பார்மில்’ உள்ள இவர் வெறும் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ரகானே (3) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், எதிர்முனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த ரோகித் சர்மா, நீஷன் வேகத்தில் சிக்சர் அடித்து, தனது 21வது அரைசத்தை பூர்த்தி செய்தார்.

இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த அம்பதி ராயுடு (37) பெனிட் வேகத்தில் அவுட்டானார். பின் கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ரன்கள் சேர்த்தார். நீஷம் வேகத்தில் பவுண்டரி அடித்த கேப்டன் தோனி இத்தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதம் அடித்தார். 

எதிர்முனையில் தன்பங்கிற்கு மில்ஸ், பெனிட் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, வில்லியம்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து பெனிட் பந்தில் பவுண்டரி அடித்த இவர் ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை எட்டினார். இந்த ஜோடி  தொடர்ந்து ரன்குவிக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. தோனி (79), ரவிந்திர ஜடேஜா (62) அவுட்டாகாமல் இருந்தனர். 

வில்லியம்சன் அரைசதம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (35) , ரைடர் (19) ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. பின் வந்த  வில்லியம்சன், டெய்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்திய பந்துவீச்சை மிகச்சுலபமாக சமாளித்த வில்லியம்சன் (60) அரைசதம் கடந்து அவுட்டானார். கேப்டன் மெக்கலத்துடன் இணைந்த டெய்லர், ஒருநாள் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். மெக்கலம் தொடர்ந்து அதிரடியில் மிரட்ட,  நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெய்லர் (112),  மெக்கலம் (49) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை டெய்லர் தட்டிச்சென்றார்.

இந்தியா சார்பில் முகமது ஷமி, ஆரோன் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/01/1390840166/IndiaNewZelandFourthOneDayCricketDhoni.html

நவீனன் ,நியுசிலாந்தில் வைத்து அவர்களை வெல்லுவது ரொம்ப கஷ்டம் .இது அனேக அணிகளுக்கு நடந்தது .

இந்தியா போக முதலே நான் உங்களுக்கு சொன்னதுதான் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இந்தியாவின் பந்துவீச்சுத் தொடர்பாக நிச்சயமில்லை: டோணி

புதன்கிழமை, 29 ஜனவரி 2014

இந்தியாவின் பந்துவீச்சுத் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும், யார் யார் நிரந்தரமான பந்துவீச்சாளர்கள் என்ற அடையாளம் இல்லாத நிலை காணப்படுவதாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார்.

 

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இதுவரை வெற்றியெதனையும் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. 3ஆவது போட்டி சமநிலையில் முடிவடைய, 4ஆவது போட்டியில் தோல்வியடைந்து தொடரையும் இந்தியா இழந்திருந்தது.

4ஆவது போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள மகேந்திரசிங் டோணி, பந்துவீச்சைப் பொறுத்தவரை இன்னமும் இந்தியாவின் நிரந்தரமான பந்துவீச்சாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்காத நிலையே காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்பனைத் தாங்கள் அறிவர் எனக் குறிப்பிட்ட, அவர்கள் சிறப்பானவர்கள் என்பதை அறிவர் எனவும் குறிப்பிட்டார், அத்தோடு அவர்களே 2015ம் ஆண்டு உலகக்கிண்ணம் வரை இந்தியாவிற்காக விளையாடவுள்ளனர் என்பதை அறிவோம் எனவும் குறிப்பிட்டார். ஆனால் வேகப்பந்து வீச்சில் இன்னமும் நிச்சயமில்லாத நிலையே காணப்படுவதாக டோணி குறிப்பிட்டார்.

இந்திய அணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட மகேந்திரசிங் டோணி, குறிப்பாக பந்துவீச்சில் அது தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். பந்துவீச்சாளர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஏமாற்றமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98436-2014-01-29-11-33-03.html

 

 

  • தொடங்கியவர்

அதலபாதாளத்தில் இந்திய பவுலர்கள்: ரன் வள்ளலாக மாறிய பரிதாபம்
ஜனவரி 29, 2014.
 

 

வெலிங்டன்: ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து  சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது.

அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்றது, இலங்கை மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளை மட்டும் வென்றது.

இதற்கு இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு முக்கிய காரணம். கடந்த ஜன. 1, 2013 முதல் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில், 20ல் 250 அல்லது அதற்கு மேல் என, ரன்களை விட்டுக் கொடுத்தது.

இதில் 11 போட்டிகளில் எதிரணியினர் 300 அல்லது அதற்கும் மேல் ரன்களை எடுத்துள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று போட்டியிலும், சராசரியாக 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அணியின் முன்னணி பவுலர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் புவனேஷ்வர் குமார், 3 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார்.

அணியின் தற்போதைய ‘சீனியர்’ இஷாந்த் சர்மா, கடந்த இரு போட்டிகளில் 2 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி மட்டும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளார். இவர் கடந்த நான்கு போட்டிகளில் 10 விக்கெட் சாய்த்துள்ளார்.ஆனாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறினார்.

சுழற்பந்துவீச்சும் தேறவில்லை. அணியின் முன்னணி வீரர் அஷ்வின், நான்கு போட்டிகளில் ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். ரவிந்திர ஜடேஜா (4) சற்று பரவாயில்லை.

மிஸ்ராவுக்கு வாய்ப்பு:

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கூறுகையில்,‘‘ இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா என, இருவரது பலவீனத்தையும், நியூசிலாந்து வீரர்கள் நன்கு கணித்துக் கொண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்றொரு ‘ஸ்பின்னர்’ அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு தர மறுக்கின்றனர். அன்னிய மண்ணில் இவருக்கு அனுபவமில்லை என்ற காரணத்தை நீண்ட நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது,’’ என்றார்.

 

 

 

box-21_zps084e3b02.jpg

 

box-1--finallllll_zps1b82bf38.jpg

 

http://sports.dinamalar.com/2014/01/1391015683/ishantindia.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2014

 

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

 

வெலிங்ரனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.

2 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி சார்பாக 3ஆவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சன், றொஸ் ரெய்லர் இருவரும் 151 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவ்வணி 303 ஓட்டங்களுக்கு முன்னேறியது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக றொஸ் ரெய்லர் 106 பந்துகளில் 102 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 91 பந்துகளில் 88 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக வருண் ஆரொன் 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், விராத் கோலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

304 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

8 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 30 ஓட்டங்களுடன் தடுமாறியது. அதன் பின்னர் விராத் கோலி, டோணி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களுடன் போராடியபோதிலும், விராத் கோலியின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக வீழ்ந்தன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக விராத் கோலி 78 பந்துகளில் 82 ஓட்டங்களையும் மகேந்திரசிங் டோணி 72 பந்துகளில் 47 ஓட்டங்களையும் புவனேஷ்வர் குமார் 25 பந்துகளில் 20 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக அறிமுக வீரர் மற் ஹென்றி 4 விக்கெட்டுக்களையும் கைல் மில்ஸ், கேன் வில்லியம்சன் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் நேதன் மக்கலம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக றொஸ் ரெய்லர் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 3ஆவது போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இத்தொடரை நியூஸிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98622-2014-01-31-10-40-59.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலன்ட் அணியின் அடுத்த காப்டன் வில்லியம்சன் தான். அற்புதமான ஆட்டக்காரர் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.