Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தர்ணா போராட்டம்: வாபஸ் பெற்றார் முதல்வர் கெஜ்ரிவால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் தர்ணா போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

 

7.45 P.M. போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

டெல்லி துணைநிலை ஆளுநருடன் பேச்சு நடத்திய பின் முதல்வர் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

 

6.45 P.M. போராட்டத்தை கைவிட கெஜ்ரிவால் மறுப்பு

 

ஆம் ஆத்மியின் இந்த போராட்டம் மத்திய அரசுடனான நேரடி மோதலாகவே பார்க்கப்படுகிற நிலையில், தங்களது இரு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என எச்சரித்துள்ளார். 

தங்களது கடமையைச் செய்யத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், ராஜ்பாத்தில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வெள்ளம் போல திரள்வார்கள் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

5.15 P.M. ஆம் ஆத்மி கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆதரவு

 

இந்நிலையில் காவல்துறை அதிகாரம் டெல்லி அரசிடம்  அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் காவல்துறை பதிலளிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

4.05 P.M. கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

 

ரயில் பவனுக்கு வெளியே டெல்லி போலீஸாருடன் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் ரயில் பவனுக்கு உள்ளே அவசரமாக கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளதால், அதுகுறித்து அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

aap%20protest%204.jpg

 

3.49 P.M. மீண்டும் மோதல்: தடியடி, காயம்

ரயில்பவன் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் இன்று இரண்டாவது முறையாக மாலை 3.45 மணி அளவில் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு,  தடையை மீறி செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது.  ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் போலீஸார் மீது கல் வீசி தாக்கியதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து போலீஸார்  தடியடி நடத்தினர். இதில் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3.00 P.M. மத்திய அரசு கெடு

குடியரசு தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுகளுக்கு இடையூறாக இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது போராட்டத்தை வருகிற 24 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

 

2.45 .P.M. போலீஸாருடன் மோதல்; கைகலப்பு

 

ரயில்பவன் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு,  தடையை மீறி செல்ல முயன்றபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்து, அது கைகலப்பாக மாறியது. ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் போலீஸார் மீது கல் வீசி தாக்கியதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து போலீஸார் இலேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதே சமயம் போலீஸார் தங்கள் மீது நடத்திய தாக்குதலில் காயம் ஏற்பட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

 

aap-protest.jpg

 

1.35  P.M. கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

12.25 P.M. போராட்ட  இடத்தை மாற்ற கெஜ்ரிவால் மறுப்பு

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் ராஜபாதையை மறித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், குடியரசு தின கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டம் காரணமாக நார்த் பிளாக்கை ஒட்டியுள்ள 4 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டதால்  பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் போராட்ட இடத்தை ராஜபாதையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு மாற்றிக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் தாம்தான் என்றும், போராட்ட இடத்தை தீர்மானிக்க ஷிண்டே யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

12.05 P.M. மழையால் காருக்குள் தஞ்சம்

 

திடீர் மழை காரணமாக கெஜ்ரிவால் காருக்குள் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், வருகிற 24 ஆம் தேதியன்று அம்மனு மீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

 

11.30 .A.M.  ஆத்திரமூட்டுகிறார்கள்: போலீஸ்

தங்களை ஆத்திரமூட்டும் வகையில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டியுள்ள டெல்லி காவல்துறை, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. குடியரசு தின ஏற்பாடுகள் பாதிக்கப்படுவதால், அனேகமாக கெஜ்ரிவால் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது கட்சியினர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23570

  • கருத்துக்கள உறவுகள்
'பரோட்டா' அனுப்பி கெஜ்ரிவாலை மடக்கிய பலே டெல்லி ஆளுநர்!
 
 
DSC01991.JPG

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, டெல்லி துணை நிலை ஆளுநர், இரண்டு போலீஸாரை கட்டாய விடுப்பில் அனுப்பியதே என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் கடும் பசியோடு தவித்த கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் நஜீப் ஜங் அனுப்பி வைத்து சுவையான பரோட்டாக்கள்தான், கெஜ்ரிவாலை இறங்கி வரச் செய்ததாம்

Read more at: http://tamil.oneindia.in/news/india/parathas-from-jung-kejriwal-helped-break-ice-191933.html
 
t1987.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.