Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியாவின் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது

நளினமேனி நவரசப் பந்தல்

இனிய மெய்யான பொய்

பொய்யோ மெய்யோ என

அய்யோ என்னை

மலைக்க வைக்கும்

இரு குன்றுகள்

நெய்யாய் எனை உருக்கி

ஒரு கை போதாமல் என்

இரு கைகளால் அள்ளி

பருகப் பருகத் தாகம் பெருக

முயல முயல முயற்சி நீள

அகல அகல அனைத்தும் அகன்று

ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்...

நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி

மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து

தீய்ந்து பயனாய் மூளும் தீயை

தீயாய் மாறி யாண்டும் எரித்து

எரிந்தது சுட்டு சூடு பறக்க...

என் உடலில் உரசி உசிரை கரைத்து

கரைந்து இரண்டற இன்றே கலந்து

கலைந்த கூந்தலும் இல்லாத ஆடையும்

நிமிர்ந்த நிர்வாண சுகத்திலே

அகன்று விரிந்து ஆகாயம் போல...

எழுந்து தாழ்ந்து ஆழியின் அலையாய்

அடித்துப் புரண்டு நெய்யைக் கடைந்து

உருக்கி உருக்கி மோட்சம் கொண்டு

அருந்தி அருந்தி அமரம் கண்டு...

நிறைந்து நிலையாய் என்றும்

ஒன்றாய் ஓங்கி ஒன்றியிருப்போம்.

-நித்தியா

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாக கவிதைகள் எழுதக்கூடியவர் தன்னுடைய சொந்த குரலிலும் பதிவு செய்து போடுவார் சுடுவனம் என்ற ப்ளாக் க்கும் அவர் நடத்தி வந்தார் ஏனோ நீக்கிவிட்டார் .... தொடர்ந்தும் யாழை பார்பவராக இருந்தால் வரவேண்டும்

மறந்துவிட்டாயம்மா...!

நானும் கருப்பையில் தான்

கற்பம் தரித்தேன்

என்னையும் பத்து மாதம் தான்

சுமந்து பெற்றாள்

தாய்ப்பால் ஊட்டித்தான்

சீராட்டினாய்

இவர்தான் தந்தை என்றும்

அறிமுகப்படுத்தினாள்

இது ஆண்சாதி என்றும்

இது பெண்சாதி என்றும்

இது தாவரங்கள் என்றும்

இது விலங்கினம் என்றும்

அவள்தான் அன்று இனம்

காட்டினாள்!

ஆனால்...

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

மனு

பேச மொழி இருந்தும்

பேச உதடுகள் இருந்தும்

பேச முடியாத ஊமையாக..

கேட்க பல விடயம் இருந்தும்

கேட்க செவிகள் இருந்தும்

கேட்க முடியாத செவிடாக..

பார்க்க பல வண்ணம் இருந்தும்

பார்க்க கண்கள் இருந்தும்

பார்க்க முடியாத குருடாக..

இரசிக்க பலவகை இருந்தும்

இரசிக்க மனது இருந்தும்

இரசிக்க முடியாத பாவியாக..

இறைவா!

உணர்வு எனும் மனுவை உன்னிடம்

சமர்ப்பிக்கிறேன்..

என்னவன் நினைவுகளை மட்டும் தந்து

நிசமாகவே என்னை

ஊனமுற்றவளாய் இருக்க விடு!!!

எழுதியவர்: நித்தியா

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சார்.. யாரென்று தெரிந்துகொண்டே காலை வாருறீங்களா?? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது அவரு இல்லை அவரு கொண்டு வந்து இணைக்கிறது மட்டும் தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆண்மகனாய் இருந்திருந்தால்...

தமிழிலே மோட்சம் கண்டு

என் காதலிக்காக கவி

பல்லாயிரம் பாடி இருப்பேன்!

இவ்வுலகையே போருக்கு

அழைத்து உன் புன்னகைக்காகப்

போராடி இருப்பேன்!

வன்முறையே வேண்டாமெனின்

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து

மகானாக தாரகை உன்

கரம்பற்றி இருப்பேன்!

உன் செவ்வாய் "நீதான் உலகம்" -என்று

ஒருவரி மொழிந்திருந்தால்..

தேவதை உன்னுடன் செவ்வாயில்

குடியேறி இருப்பேன்!

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழி

அன்று உன் உதடு உரைந்த

மொழியினையே

செவிமடுத்த என் செவிகள்

இன்று இரங்கியும், தவறிக்கூட

உன் உதடு

ஒரு மொழியேனும்

உரைக்க மாட்டாதா

என தவம் கிடக்கின்றன...!

எழுதியவர்: நித்தியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள்

என் காதலன்

கண்ணைவிட்டு

ஒருபோதும் நீங்குவதில்லை..

ம்.. ஆமாம்

மிக நுட்பமான வடிவத்தில்

கண்ணோடு மணியானதால்

நான் தவறிக்

கண்ணிமைத்தாலும்

அதனால்

அவன் வருந்துவதில்லை

எழுதியவர்: நித்தியா

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் நன்றாகத்தான் இருக்கு. ஆனால் எல்லாத்தையும் எடிட் பண்ணியே போட்டிருக்கே ஏன்?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப் பூவே

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப் பூவே

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

பொதுவில் எல்லா காதலன்களுக்கும் இது பொருந்தும்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[

தேடு உன் இதயம் தொலைந்த

முகவரி தேடு..

ஆனால் உன் முகவரியைத்

தொலைத்து விடாதே..

முதலில் நீ தேடும் முகவரி -உன்

முகவரிக்குள் உண்டா என்று பார்..

இல்லை என்றால்..

உன் முகவரி இட்டு, உன்னிடம்

உள்ள முகவரிக்கு தகவல் கொடு

முகவரி தேடுவதாக..

ஏதாவது ஒரு முகவரி -உன்

முகவரி இட்டு

உன் முகவரிக்கு பதில் போடும்..

தான் தான் உன் முகவரி என்று

அப்போது புரியும் உன் சொந்த முகவரி

ஆனால்..

மறந்துவிடாதே - உன் முகவரிக்குள்

இன்னும் பல முகவரிகள் இருப்பதை..

இப்படிக்கு

ஒரு முகவரி

எழுதியவர்: நித்தியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.