Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் உரிமைகளை கொச்சைப்படுத்தும் கலாச்சார செயற்பாடுகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் உரிமைகளை கொச்சைப்படுத்தும் கலாச்சார செயற்பாடுகள்?

நவீன தகவல் தொழில்நுட்பங்களின் வருகைதான் இளைஞர்களின் தவறான செயற்பாடுகளுக்கு காரணம் என்று கூறமுடியாது. மேற்குலக நாடுகளில் அது அறிவு வளர்ச்சிக்கு பன்படுகின்றது. தூனீசியாவில் சா்வாதிகாரத்தை நீக்க சனநாயகத்தை நிலைநிறுத்த தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே புரட்சி நடந்தது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இடம்பெறும் சமூகச் சீரழிவுகள் மனவேதனை தருகின்றன. வாள்வெட்டு அடிதடி, காதல் தோல்வியால் தற்கொலை, சினீமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்தல் என்று முறைகேடான செயற்பாடுகளில் இளைஞர்கள், யுவதிகள் ஈடுபடுகின்றனர். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இப்படியும் சீரழிவா என்று பலர் ஏங்குகின்றனர். வெட்கப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழர் கலாசாரத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் தற்போது ஏன் இந்த நிலை என்று நினைத்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்த ஒழுக்கம் தற்போது இல்லை. தேசிய உணர்வுக்கு முக்கியமளித்து தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகள் அபிலாஷைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என அப்போது சகலரும் எண்ணியிருந்த காலம் அது.

நவீன மாற்றங்கள்:

எரிபொருட்கள் இன்றி, போதிய உணவுகள் இன்றி அதாவது உரிய வசதி வாய்ப்புகள் எதுவுமே இல்லாத ஒரு காலகட்டத்தில் யுத்த நெருக்குவாரங்களுக்கு மத்தியில் சிறந்த கல்விப்பேறுகளை காணமுடிந்தது. ஒழுக்கமுள்ள இளைஞர்களை காணமுடிந்தது, பண்பான சமூகத்தைக் காணமுடிந்தது. ஒழுக்கமுள்ள பெற்றோரை காணமுடிந்தது. ஆனால் இன்று அவற்றுக்கு என்ன நடந்தது? நவீன மாற்றங்கள் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொழும்பிலும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், தமிழ் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் அவற்றின் நிறம்கூட தெரியாத நிலையிலும் இருப்பதை வைத்து கல்வி கற்று சித்தியடைந்தார்கள், முன்னேறினார்கள்

உலகமுமே வியந்தது. இத்தனை நெருக்குவாரங்கள், ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் தமிழச் சமூகத்தின் கல்வி முன்னேற்றம், பொறுமை மற்றயவர்களுக்கு உதரணமாக விளங்கியது. ஆனால் இன்று தினமும் பத்திரிகைச் செய்திகளை வாசிக்கும்போது இதுதான தமிழர்களின் பண்பாடா என்று எண்ண தோன்றுகின்றது.

வேறு வகையிலான யுத்தம்:

யுத்தம் அழிக்கப்பட்டுவிட்டது அதன் பின்னரான காலகட்டம் என்பது வேறு வகையான யுத்தம் ஒன்றை திணித்துள்ளது. பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம் ஆகிய மரபுசார்ந்த சமூக கட்டுப்பாடுகள் கட்டவிழ்க்கப்பட்டு அவை தலைவிரித்தாடுகின்றன. இது குறிப்பிட சில பகுதியினரால் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு திணிப்பு. நவீன தகவல் தொழில்நுட்ப சாதணங்களின் வருகைதான் இதற்கு காரணம் என்று கூறமுடியாது. நவீன தொழில்நுட்ப சாதணங்கள் என்பது உலகம் ழுமுவதிலும் உண்டு. யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் இவை யாழ்ப்பாணத்திற்கும் கொண்டுவரப்பட்டது என்பது உண்மை. ஆனால் வாள்வெட்டும், கத்திக்குத்தும், அடிதடியும் பெண்களை இழுத்துக் கொண்டு ஓடுகின்ற ஒழுக்கமற்ற செயற்பாடுகளும் தற்கொலைகளும் நவீன தொழில்நுட்பங்களின் வருகையினால், இணையத்தள பாவனைகளினால் வந்தது என்று மட்டும் கூற முடியாது. மாறிவரும் உலகில் அவ்வாறான தொழில்நுட்ப சாதணங்கள் தமிழச் சமூகத்துக்கு தேவை. குறிப்பாக இளைஞர்களுக்கு அது அவசியம். ஆனால் கட்டுப்பாடுகளை பேண வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஒரு சமூகத்தின் நில உரிமைகளை அழிப்பதற்கும் அந்த சமூகத்தின் ‘விடுதலை’ ‘தேசம்’ என்ற அங்கீகாரத்துக்கான முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதற்கும்; அந்த சமூகத்தின் பண்பாட்டு தளத்தை சீரழித்தால்போதும். அந்த அடிப்படையில்தான் வடக்கு கிழக்கில் சமீபகாலமாக இடம்பெறும் சம்பவங்களை நோக்க வேண்டியுள்ளது.

தூனீசியாவில் நடந்தது என்ன?

ஜனரஞ்சகம், பொழுது போக்கு களியாட்டங்கள் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பொருத்தமாக இருக்கலாம் ஆனால் அரசியல் உரிமைகள், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் சுயமரியாதையை காப்பாற்ற துடிக்கும் ஒரு சமூகமாக இருந்து கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டால் அது ஒடுக்க முற்படும் இலங்கை அரசுக்கு மேலும் வசதியாக இருக்கும். ஆகவே இடம்பெருள் காலம் அறிந்து செயற்பட வேண்டிய ஒரு கட்டாயச்சூழல் தமிழ் இளைஞர்களுக்கு உண்டு. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தூனீசியாவில் ஜனாதிபதி பென் அலியின் 30வருட கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்த நாட்டு இளைஞர்கள், யுவதிகள் கையான்ட செயற்பாடுகள்தான் காரணம். மக்கள் வீதியில் இறங்கி தொடர்ச்சியாக போராடுவதற்கு அந்த நாட்டில் இருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ, அரபு தேசியவாத இயக்கங்களோ காரணம் அல்ல இளைஞர்களுடைய அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைதான் காரணம். புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த துனீசியர்கள் தகவல் தொழில் நுட்பங்களை தங்கள் நாட்டின் விடுதலைக்காகவே பயன்படுத்தினர். அவர்கள் களியாட்டம், பொழுது போக்கு, மற்றும் கத்திக்குத்து சண்டைகளில் ஈடுபட்டிருந்தால் துனீசியாவிலும் ஜனநாயகம் மலா்ந்திருக்காது. 

-அமிர்தஸன்-

1604611_262397437256607_1063908403_n.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.