Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுவர் இல்லத்தில் இருப்பதாக எனது மகனின் படத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்: - கண்ணீர் மல்கிய தாயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சிறுவர் இல்லத்தில் இருப்பதாக எனது மகனின் படத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்: - கண்ணீர் மல்கிய தாயார் 
[sunday, 2014-02-16 19:18:02]
missing-persons--mother-crying-200.jpg

இறுதி யுத்­தத்­தின்­போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திக­தி­யன்று காணாமல் போன தனது மகன் இரத்­ம­லானை சிறுவர் இல்­லத்தில் இருப்­ப­தாக வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் புகைப்­ப­டத்­துடன் பிர­சு­ரிக்­கப்­பட்ட பின்­னரும் தனது மகனைக் காண­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டிய தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்­கு­ழு­வி­ன­ரிடம் நேற்று கண்ணீர் மல்க கோரினார். ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நேற்று சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

  

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மகனின் பெயர் கன­க­ரட்னம் யோபோ (வயது – 15) ஆகும். இறுதி யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திகதி அன்று முள்­ளி­வாய்க்காலில் எனது மகன் காணாமல் போயி­ருந்தார்.

அதன் பின்னர் ஆனந்­த­கு­மா­ர­சாமி நலன்­புரி முகாமில் நாம் தங்­கி­யி­ருந்­த­போதும் எனது மகன் இரத்­ம­லானை சிறுவர் இல்­லத்தில் இருப்­ப­தாக வீர­கே­சரிப் பத்­தி­ரி­கையில் புகைப்­ப­டத்­துடன் எனது மகனின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த கட்­டுரை ஒன்று பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. அந்தப் பத்­தி­ரி­கை­யுடன் நான் எனது மகனை குறித்த சிறுவர் இல்­லத்­துக்கு தேடிச் சென்­ற­பொ­ழுது எனது மகன் இருக்­க­வில்லை.

அங்கு எனது மகன் இருந்­த­தற்­கான எந்­த­வொரு ஆதா­ரமும் எனக்குக் கிடைக்­க­வில்லை. அன்று முதல் நான் எனது மகனைத் தேடி வரு­கின்றேன். குறித்த பத்­தி­ரி­கையின் ஆதாரப் பிர­தி­யையும் என்­னி­ட­மி­ருந்து இரா­ணு­வத்­தினர் வாங்கினர். பின்னர் அதனையும் திரும்பத் தரவில்லை. அதனால் என்னிடம் தற்பொழுது அதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என கேட்டுள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103784&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கசாப்புக்கடைக்காரனிடமே ஆடு நியாயம் கேட்பதுபோல் இருக்கு..

கசாப்புக்கடைக்காரனிடமே ஆடு நியாயம் கேட்பதுபோல் இருக்கு..

65 வருசமா கேட்கிறம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களுக்கு நன்கு தெரியும், தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்பதற்கான காரணம் என்றாவது ஒரு நாள் தாம் இழந்த சொந்தங்கள் தம்மிடம் வந்திடுவார்களோ என்ற நப்ப ஆசைதான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.