Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக்குழுவிடம் பதில் கேள்வி எழுப்பி வாயை அடைத்த காணாமற்போனோரின் உறவினர்கள்! – சாட்சியப்பதிவுகளின் தொகுப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஆணைக்குழுவிடம் பதில் கேள்வி எழுப்பி வாயை அடைத்த காணாமற்போனோரின் உறவினர்கள்! – சாட்சியப்பதிவுகளின் தொகுப்பு. camera_icon.jpeg 
[Tuesday, 2014-02-18 07:32:55]
missing1-180214-150.jpg

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து எல்லா இடமும் ஆமியும் செக் பொயின்ட்டும் இருக்கும் போது புலிகளுடன் உங்கள் மகன் தொடர்புபட்டவரா என்ற கேள்வியை நீங்கள் எப்படி என்னிடம் கேட்பீர்கள் என தாயார் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சம்வம் ஒன்று இன்று இடம்பெற்றது. காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் கடந்த 4நாட்களாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. டி நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்ள பகுதிகளுக்கான பதிவுகள் நேற்று மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோதே தாயொருவர் ஆணைக்குழுவினர் கேட்ட குறித்த கேள்விக்கு மேற்கண்டவாறு சீற்றத்துடன் பதிலளித்தார்.

   ஆணைக்குழுவை மலைக்க வைத்த தாயின் கேள்வி.

மரியகொறற்றி என்ற தாய் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனது மகன் திலீபன், 2007.03.30 வீட்டில் இருந்து ரியூசனுக்கு போகும் போது சுண்டுக்குழி சந்தியில் நின்ற இராணுவத்தினர் மகனை மறித்து கதைத்ததை நான் கண்டேன். அப்போது நான் மகனிடம் கேட்டேன். ரியூசனுக்கு போக நேரம் போகவில்லையா என்று. அவரும் 30 நிமிடம் இருப்பதாகவும் தெரிவித்து விட்டு தொடர்ந்தும் கதைத்துக் கொண்டு நின்றதை நான் பார்த்தேன். பின்னர் என் மகன் வீதியால் சைக்கிளை உருட்டிக் கொண்டு வரும் போது பின்னால் 2 இராணுவமும் வருவதைக் கண்டேன். அதன்பின்னர் நான் வீட்டுக்குப் போய்விட்டேன். ஆனால் மாலை வேளை ஆகியும் மகன் வீட்டிற்கு வரவில்லை.

உடனே குறித்த சந்திக்கு போனேன். அங்க யாரும் இல்லை. பின்னர் சுண்டுக்குழி பெரிய முகாமுக்கு போய் என்மகன் பற்றி விசாரித்தேன். கத்தி அழுதேன். ஆனால் அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர். சுண்டிக்குளி இராணுவ முகாமிற்கு சென்று கேட்டபோது அவரை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றுவிட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்த போது, அருகருகாக 25 முகாம்களில் இருக்கும் நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளைப் பிடிக்கவில்லை? என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார். நான் எல்லா இடமும் போய் முறைப்பாடு கொடுத்து விட்டேன். இதுவரை எதுவிதமான தகவலும் இல்லை என்றார். அதன்போது உங்கள் மகன் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவரா அல்லது போராளியாக இருந்தவரா என ஆணைக்குழுவால் கேள்வி எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு 1996 ஆம் ஆண்டு இராணுவம் வந்ததும் முழத்துக்கு 25 இராணுவ முகாமும் சோதனைச் சாவடிகளும் இருந்தது. இவ்வாறு இருக்க எவ்வாறு விடுதலைப் புலிகளுடன் என் மகன் தொடர்புகளை வைத்திருக்க முடியும். இவ்வாறு நீங்கள் கேட்க கூடாது என்று ஆணைக்குழுவினருக்கு பதிலடி கொடுத்தார். பிடிக்கப்பட்ட போது என் மகனுக்கு 20 வயது அவர் படித்துக் கொண்டிருந்தவர். அவரை எப்படி புலி என்று பிடிக்க முடியும் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

நாவலர் வீதியில் பிடிக்கப்பட்ட மகன் எங்கே?

யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ரணேஸ் என்ற இளைஞரின் தாயார் தனது வாக்குமூலத்தில், வயறிங் வேலை செய்யும் எனது மகன் 1996-08-27 அன்று நாவலர் வீதி ஊடாகச் சென்று கொண்டிருந்த போது லலித், ராஜபக்ஷ ஆகிய இரண்டு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பவத்தினை நேரடியாகப் பார்த்த மக்கள் எனக்குத் தெரிவித்தனர். அவர் காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தாம் அறிந்ததாகவும் இன்றுவரையில் அவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவித்தார்.

வீட்டில் பிடித்துச் சென்ற மகன் இன்னமும் இல்லை.

நேசம்மா என்ற தாய் தனது சாட்சியத்தில், 1996-07-29 அன்று எங்களுடைய வீட்டிற்கு பாசையூர் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வந்தனர். அப்போது எனது மகன் ஜெஸ்லி (வயது 21) படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்கள் எங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனப் பார்க்கப் போவதாகத் தெரிவித்து எங்கள் அனைவரையும் அழைத்து ஒரு அறையில் வைத்து மூடிவிட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் திரும்ப வந்து எனது மகன் ஜெஸ்லியை பிடித்துச் சென்றனர். அவர் தொடர்பில் இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை அவரை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து படையினர் பிடித்துச் சென்றனர்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஸ்வரி என்ற தாய் தனது சாட்சியத்தில், 2006-19-12 அன்று நான்கு வாகனங்களில் நள்ளிரவு நேரம் எங்களது வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் குடும்ப அட்டையைக் காட்டி அதில் உள்ளவர்களைப் பார்க்கப் போவதாகக் கூறிக் கொண்டு அங்கு நின்றிருந்த எனது மகன் தவரூபன் (வயது 23) அவரை பிடித்துச் சென்றனர். ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் ஒவ்வொருவரும் தமது முறைப்பாடுகளை உருக்கமாக முன்வைத்த போது அங்கு நின்றிருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

 

missing1-180214-600.jpg

 

 

missing2-180214-600.jpg

 

 

missing3-180214-600.jpg

 

 

missing4-180214-600.jpg

 

 

missing5-180214-600.jpg

 

 

missing6-180214-600.jpg

 

 

missing8-180214-600.jpg

 

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103902&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழே இருந்து இரண்டாவதாக உள்ள படத்தில் உள்ள தாயைத் தெரியும். அவரது மகனின் பெயர் செந்தா..(வீட்டு  பெயர் போல இருக்கு..இந்த செய்தியில் அந்த பெயர் இல்லாததால்..).இந்த செய்தியில் வருகிற லலித் ..ஒரு தாதா போல ...ஒரு தொகை பெடியங்களை அள்ளிணவன்..ஒரு 4S சாம்பியானில் கறுப்பு ஸ்காப் கட்டிக்கொண்டு திரிவான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.